Friday, July 20, 2012

இறையருளும் மனித முயற்சியும்





1)
ஆற்றல் மிக்கோ னாற்றற் றானே
ஆற்று நீரும்; அள்ளி நீயும்
போற்றி நன்றாய்ப் பேண்.

2)
கடவுளி னருளினால் கடலிலே உயிரினம்;
படகிலே வலையுடன் பயணமாம் முயற்சியால்
நடக்குமே வணிகமும் நலம்

3)
கிணற்றுநீரும் பெருகுவதும் கருணையா ளனருட்டானே
உணர்ந்துநீயும் முயல்கின்றா யுனதுவாளி கயிற்றினாலே
குணங்களிலே விடாமுயற்சி குழைத்து.

4)
கதிரவனொளி கடலுறவினால் கருமேகமாய் உருவாகுதல்
கதியமைத்திடும் பரம்பொருளருள்; கருணையாளனை மறவாமலே
துதித்துதினமும் முயற்சிகளிலேத் தொடர்.

5)
தூணின்றி நிற்கின்ற தூக்கிய வானத்தை
வீணின்றி தந்தவனை வீணாக நிந்திக்கும்
வீணர்கள் காண விய்ப்பு.

வாய்ப்பாக வாழ்வை வழங்கு மவனைத்தான்
வாயுடன் நாக்கும் வழங்கு மவனைத்தான்
வாயாலேத் தூற்றும் வியப்பு.

இல்லாமை மூலம்நாம்: இல்லை அவனன்றி
இல்லை அவனென்று எப்படித்தான் சொல்கின்றனர்
வில்லைப்போல் நின்றேன் வியந்து.



”கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்(பாடசாலை)
அபுதபி(தொழிற்சாலை)
 
என் வலைப்பூத் தோட்டம் http://www.kalaamkathir.blogspot.com/
 
மின்னஞ்சல் முகவரி: kalamkader2@gmail.com
                                       shaickkalam@yahoo.com
                                       kalaamkathir7@gmail.com
 
 
அலை பேசி:             00971-50-8351499       / 056-7822844


No comments:

Post a Comment