Sunday, February 27, 2011

வாழ நினைத்தால் வாழலாம்


வளமான எதிர்காலத்துக்காக திட்டமிடாதவர்களே இல்லை. ஆனால் திட்டக் காலத்தில் எதிர்கொள்ளும் தடைகளை தகர்த்தவர்களே வெற்றி பெறுகிறார்கள்.

இலக்கை அடைவதற்கான செயல் திட்டம் தயாரித்தலும், இடையில் ஏற்படும் தடைகளை எவ்வாறு எதிர்கொள்வது என்பது பற்றி பார்க்கலாம்.

ஒரு இலக்கை நிர்ணயித்த பின் அதை அடைவதற்கு தயாரிக்கும் செயல்திட்டம் மிகவும் முக்கியமானது. செயல்திட்டம் என்பது எதிர்காலத்தை தெளிவுபடுத்தும் வரைபடம் எனலாம். இலக்கை அடையும் வரை ஒவ்வொரு நிலையிலும் செய்ய வேண்டிய நுட்பமான விஷயத்தையும் குறிப்பிடுவதே செயல்திட்டம்.

இதனால் செயல்திட்டம் எங்கு தொடங்குகின்றது, எங்கு முடிகின்றது, என்பதை கணிக்க முடியும். இலக்கை அடைய எத்தகைய திறன்களையும், அறிவையும் பெற வேண்டும் என்பதும் தெளிவாகும். செயல்திட்டத்தை உருவாக்கும்போது கருத்தில் கொள்ள வேண்டிய விஷயங்களை பார்ப்போம்.

உங்களது தேவை- திறமை:

உங்களது எதிர்கால திட்டம் என்பது உங்களின் ஆசையை அடிப்படையாகக் கொண்டது. அதை நிறைவேற்றுவதற்கு நீங்கள் எவ்வாறு உங்களிடமுள்ள திறமையையும், ஆற்றலையும் பயன்படுத்தப் போகிறீர்கள் என்பது மிகவும் முக்கியம். 
இசையில் ஆர்வம் இருந்தால் எவ்வாறு திட்டமிட வேண்டும்? விஞ்ஞானியாக ஆக வேண்டுமென்றால் எவ்வாறு திட்டமிட வேண்டும்? விளையாட்டு வீரராக அல்லது பயிற்சியாளராக ஆக வேண்டுமென்றால் எவ்வாறு திட்டமிட வேண்டும்? என்று இனங்கண்டு அதற்கேற்ப செயல்திட்டத்தை உருவாக்க வேண்டும்.

நீங்கள் மனதில் கொண்டுள்ள மதிப்பு:

ஒரு மாணவி உயிரியல் படிப்பை விரும்பினார். விலங்குகள் மேல் உள்ள விருப்பம் காரணமாக அந்த படிப்பை தேர்வு செய்தார். ஆனால் படிக்கும்போது பரிசோதனைக் கூடத்தில் விலங்கினங்களை ஆராய்ச்சிக்காக பயன்படுத்துவதைப் பார்த்தவுடன் அவரது மனதில் மாற்றங்கள் ஏற்பட்டன. எனவே வேறு பிரிவில் படிப்பைத் தொடர விரும்பினார்.

நீங்கள் கொண்டுள்ள மதிப்பிற்கும், நீங்கள் படிக்கும் படிப்பு அல்லது செயல்பாட்டிற்கு முரண்பாடு ஏற்பட்டால் உங்கள் மனதில் குழப்பம் ஏற்படும். ஆகவே நீங்கள் மனதில் கொண்டுள்ள மதிப்பு பாதிக்கப்படாத அளவில் உங்கள் செயல்திட்டம் அமைய வேண்டும்.

மாற்றத்தை கவனியுங்கள்:

வேலை உலகம் தொடர்ந்து மாறிக்கொண்டே செல்கிறது. ஒரே தொழில்நுட்பம் அல்லது பொருள் வாடிக்கையாளரை கவருவதில்லை. புதிய, புதிய கண்டுபிடிப்புகள், பயன்பாடுகள் அதிகரிக்கும்போது வேலைத்திறன்களிலும், திறமையை வெளிப்படுத்துவதிலும் உரிய பயிற்சி தேவைப்படுகின்றது.

நீண்ட கால இலக்கை நீங்கள் திட்டமிடும்போது இத்தகைய மாற்றங்களையும் கருத்தில் கொண்டு செயல்திட்டத்தை தயாரிக்க வேண்டும்.

உதவுபவர்களின் பங்கு:

உங்களது செயல்திட்டத்தை நிறைவேற்ற பலரின் உதவி தேவைப்படலாம். இதில் பெற்றோர்களின் பங்களிப்பு பொருளாதார ரீதியாகவும், தொடர்ந்து ஊக்கப்படுத்துவதன் மூலம் மனோரீதியான உதவியாகவும் அமையும். குடும்பத்திலுள்ள பிற உறுப்பினர்களின் ஆதரவும் ஆக்கப்பூர்வமாக இலக்கை அடைய உதவும்.

துறை சார்ந்த வல்லுனர்களின் ஆலோசனை, பயிற்சி பெறுவதற்கு துறை சார்ந்த தொழில் கூடங்களின் ஒத்துழைப்பு அகியவையும் முக்கியப்பங்கு வகிக்கின்றன. வங்கிக்கடன் பெற்று கல்வியை தொடர்ந்தால் வங்கியின் பங்கும் மிகவும் முக்கியமான ஒன்றாகும்.

உயர்கல்வி, வேலைவாய்ப்பு போன்றவற்றை தேர்வு செய்யும்போது வெறும் தகவல்களின் அடிப்படையில் மட்டுமே முடிவெடுப்பது இயலாது. அனுபவ அறிவும், துறை சார்ந்த தகவல்களையும் ஒருங்கிணைத்து புரிந்து கொண்டு வழிநடத்துபவர்களின் ஆலோசனை முக்கியமான பங்கு வகிக்கின்றது. ஒவ்வொரு துறையிலும் ஆழமான அனுபவ அறிவுடையவர்களை இனங்கண்டு அவர்களின் ஆலோசனையை பெறுவதும் செயல்திட்டத்தில் இடம் பெற்றிருக்க வேண்டும். அப்போதுதான் இடர்பாடுகள் இல்லாமல் இலக்கை அடைய முடியும்.

பகுதி நேர வேலை வாய்ப்புகள்:

உதவித் தொகையுடன் கூடிய பயிற்சி, பகுதிநேர பணிவாய்ப்புக்கள் போன்றவையும் இலக்கை அடைய உதவியாக இருக்கும். இவை அடைய வேண்டிய இலக்கு சார்ந்த அனுபவ அறிவைப் பெற்றுத்தரும்.

சில சமயங்களில் அனுபவ ரீதியாக உங்களுக்கு பிடிக்காத துறையை தேர்வு செய்திருப்பதாக உணர்ந்தால் மீண்டும் இலக்கை மாற்றி அமைத்துக் கொள்ள இத்தகைய பகுதி நேர வேலைவாய்ப்புக்கள் உதவும். நீங்களே உங்களது திறமையையும், ஆர்வத்தையும் அனுபவ ரீதியாக அறிந்து கொள்ளும் வாய்ப்பும்கிடைக்கும்.

பிறருடன் தொழில் சூழலில் எவ்வாறு நட்புறவுடன் பழகுவது என்பதையும் அறிந்து கொள்ள முடியும். அவ்வாறு பணியாற்றும்போது கிடைக்கும் ஊக்கத் தொகையையும் பயனுள்ள வகையில் பயன்படுத்த முடியும். பொருளாதார ரீதியாக திட்டமிடவும் உதவும்.

கால மேலாண்மை:

செயல்திட்டத்தில் நேர மேலா ண்மை மிக முக்கியமானது. கால மேலாண்மை என்பது நீங்கள் எவ்வாறு காலத்தை செலவிடுகின்றீர்கள் என்பதை குறிக்கிறது.

ஒரு வாரம் உங்களது செயல்களையும், அதற்கு நீங்கள் ஒதுக்கும் நேரத்தையும் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். எப்போதெல்லாம் பயன்படும் வகையில் நேரத்தை செலவழிக்கின்றீர்கள், எப்போதெல்லாம் வீணாக பொழுது போக்குகிறீர்கள் என்று அறிந்து அதற்கேற்ப கால மேலாண்மையை செய்யலாம்.

யார் என்ன சொன்னாலும் அதற்காக நேரம் செலவிடக்கூடாது. அது தேவையற்றதாக நீங்கள் உணர்ந்தால் கண்டிப்பாக மறுத்துவிடுங்கள். அதற்காக தயங்க வேண்டியதில்லை. முக்கியமான, தேவையான விஷயங்களுக்கு மட்டும் நேரம் ஒதுக்கி செயல்படுங்கள்.

ஒரு செயலை செய்ய வேண்டுமென்றால் உடனே செயலை தொடங்குங்கள். தள்ளிப்போட வேண்டாம். ஒவ்வொரு செயலையும் செய்து முடிக்க ஒரு கால வரையறையை நிர்ணயித்துக் கொண்டு செய்து முடிக்கப் பழகுங்கள். இலக்குகளை நிர்ணயம் செய்யுங்கள், திட்டமிடுங்கள், செயல்படுத்துங்கள். அல்லாஹ் நாடினால் வெற்றி நிச்சயம்!

Wednesday, February 23, 2011

போட்டு உடைக்கிறார்

உண்மையை சொல்வது,எழுதுவது இது ஒரு முக்கிய விடயம்.சிலர் எழுதினாலும்,பேசினாலும் பொய் பொய் மற்றும் பொய் தான் மிச்சமாகும்.ஆனால் இந்த பிளாக் உண்மையை எடுத்து சொல்லும் ஒரு உன்னத விளக்கு.சத்தியம் சொல்லும் லட்சிய வரிகள்.

இவர் உண்மைகளை சொல்கிறார் என்பதை விட போட்டு உடைக்கிறார் என்பதே - என சொல்வதே சிறந்தது என் எண்ணுகிறேன்.

உலகின் எந்த வேதமும் - மதமும் சிந்திக்காதே,என்ன சொல்லப்படுகிறதோ - என்ன எழுதியுள்ளதோ அது படி செய் என இருக்கும்,ஆனால் குரான் மட்டுமே இறைவன் அருளிய இந்த வேதத்தை படி,சிந்தி,உண்மை உணர்,ஏற்றுக்கொள் என்கிறது.சிந்திக்காமல் இருந்துவிடாதே,அறிவு கெட்டவனை போல் ஆகி விடாதே என சொல்கிறது திருக்குர்ஆன்.

அந்த வேதம் என்ன சொல்கிறது,அந்த இஸ்லாம் என்ற மார்க்கம் என்ன சொல்கிறது.............

இவர் இப்படி உண்மையை போட்டு உடைக்கிறார்..............
படியுங்கள்

மலட்டுத்தன்மை


குழந்தைப் பேறு மருத்துவ அறிவியலில்மனைவிக்கு குழந்தைப் பேறு அளிப்பதில் கணவனின் விந்தணுக்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. புகை பிடித்தல்மதுப் பழக்கம்அளவுக்கு அதிகமான உடற்பயிற்சிமன உளைச்சல் தரும் வேலைகள்உடல் பருமன்போதைப் பொருள்களை பயன்படுத்துதல் ஆகியவை காரணமாக விந்தணுக்களின் உற்பத்தி பாதிக்கப்படுகிறது. இதனால் மலட்டுத்தன்மை உண்டாகிறது. மேலும் எப்போதும் பதற்றத்தோடு வேலை செய்யும் ஆண்களுக்குஉயிர் அணுக்கள் மிகக் குறைவாக ஆற்றல் குறைவுடன் இருப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. நீண்ட தூரம் வாகனம் ஓட்டுதல்ரசாயன ஆலைகளில் பணிபுரிதல் உள்ளிட்ட தொழில்சார்ந்த பிரச்னைகள் காரணமாகவும் ஆண் மலட்டுத்தன்மை ஏற்பட வாய்ப்பு உண்டு.

மேலே குறிப்பிட்ட காரணிகளுள்புகைப் பழக்கம் காரணமாக குழந்தைப் பேறு இல்லாமை அதிகரித்து வருகிறது. குறிப்பாக புகைப் பழக்கம் காரணமாக பெரும்பாலானோருக்கு ஆண் மலட்டுத்தன்மை ஏற்படுகிறது. குழந்தைப் பேறின்மை சிகிச்சை எடுக்க ஆரம்பித்தவுடன்புகைப் பழக்கத்தை கைவிடுவது அவசியம். இல்லையெனில் சிகிச்சை பலன் தராது.
திருமணமாகி ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகள் கழித்தும் குழந்தைப் பேறு இல்லாத நிலையில்எந்தவிதத் தயக்கமும் இன்றி மனைவியுடன் கணவன் பரிசோதனைக்கு வருவது அவசியம். பிறவிக் குறைபாடு இல்லாத நிலையில்மற்ற குறைகளை மருத்துவ ரீதியாக சரி செய்து குழந்தைப் பேறு அளிக்கும் அளவுக்கு குழந்தைப் பேறு மருத்துவ அறிவியல் முன்னேற்றம் அடைந்துள்ளது. குழந்தைப் பேறு இல்லாத தம்பதியர் கவலைப்பட 
வேண்டாம்.

சிகரெட் உள்பட புகையிலை சார்ந்த பொருள்கள் பழக்கம் உள்ளோர் அதிலிருந்து மீள்வதற்கு சென்னை அடையாறு புற்று நோய் மருத்துவமனையில் இலவச புகையிலை தடுப்பு ஆலோசனை மையம் (தொ.பே. எண்: 22351615) செயல்படுகிறது. இந்த மையம் ஞாயிற்றுக்கிழமை தவிர காலை மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை செயல்படும். பண்டிகைக்கான விடுமுறை நாள்களிலும் இந்த இலவச மையம் செயல்படும். சிகரெட் உள்பட புகையிலை சார்ந்த பொருள்களால் ஏற்கெனவே பாதிக்கப்பட்டுள்ளோரும் இந்த மையத்தில் இலவசமாக ஆலோசனை பெற்று பலன் அடையலாம்.

Monday, February 21, 2011

நபிகளாரின் நன்மொழி..........

நயவஞ்சகனின் அறிகுறிகள் மூன்று. பேசினால் பொய்யே பேசுவான், வாக்களித்தால் மீறுவான்நம்பினால் துரோகம் செய்வான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் - என அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்தார்.


புஹாரி ஹதீஸ் 33 :

Monday, February 14, 2011

.எச்சரிக்கை வாய்ஸ் டிரான்ஸ்மிட்டர்


பெண்ணை நிர்வாண படம் பிடித்து, 'இன்டர்நெட்டில்வெளியிடுவேன் என மிரட்டிய வழக்கில் கைது செய்யப்பட்ட வாலிபர் பயன்படுத்திய 'வாய்ஸ் டிரான்ஸ்மிட்டர்சீனாவில் தயாரிக்கப்பட்ட ஒட்டு கேட்கும் கருவி என்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
விருத்தாசலம் அரசகுழியைச் சேர்ந்த மா.கம்யூ.பிரமுகர் ரட்சகர் மகன் கிளமென்ட் எஸ்லின் ராஜ்(25); தமிழர் விடுதலைப் படை இயக்கத்தைச் சேர்ந்தவர். இவர்விருத்தாசலத்தைச் சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து,மயக்க மருந்து கொடுத்து ஆபாச படம் எடுத்துள்ளார். அப்பெண்ணை திருமணம் செய்து வைக்கவில்லையெனில்ஆபாச படத்தை, 'இன்டர்நெட்டில்வெளியிடுவேன் என பெண்ணின் பெற்றோரை மிரட்டினார். அவர்களுக்கு தெரியாமல் வீட்டில், 'வாய்ஸ் டிரான்ஸ்மிட்டர்பொருத்தி,வீட்டில் நடைபெறும் 'சம்பாஷணைகளைமொபைல் போன் மூலம் கேட்டுள்ளார்.
இதுகுறித்து பெண்ணின் பெற்றோர்எஸ்.பி.,யிடம் புகார் தெரிவித்தனர். எஸ்.பி.அஷ்வின் கோட்னீஸ் உத்தரவின் பேரில்ரவுடிகள் ஒழிப்பு சப்-இன்ஸ்பெக்டர் அம்பேத்கர் தலைமையிலான போலீசார்கிளமென்ட் எஸ்லின் ராஜை கைது செய்து, 'வாய்ஸ் டிரான்ஸ்மிட்டர்எனப்படும் ஒட்டு கேட்கும் கருவியை கைப்பற்றினர். அதில், 'ஜெர்மன் மிலிட்டரி டெக்னாலஜிமற்றும்'மேட் இன் சைனாஎன குறிப்பிட்டுள்ளது.விசாரணையில்அந்த கருவியை10 ஆயிரம் ரூபாய்க்கு ராமநாதபுரத்தில் வாங்கியது தெரிய வந்தது. தீப்பெட்டி அளவில் கைக்கு அடக்கமாக உள்ள அக்கருவியில் ஏதேனும் ஒரு 'சிம் கார்டுபொருத்திஎவருக்கும் தெரியாமல் ஒரு இடத்தில் வைத்து விட்டால்,உலகின் எந்த மூலையில் இருந்தும் அந்த எண்ணுக்கு, 'மொபைல் போன்'மூலம் 'டயல்செய்தால்கருவி இருக்கும் இடத்தில் 'ரிங் டோன்வராது.
மாறாக போன் செய்பவருக்கே ஒரு, 'ரிங் சவுண்டுமட்டும் கேட்கும். பின்னர்,கருவி உள்ள இடத்திலிருந்து 15 மீட்டர் சுற்றளவில் என்ன பேசிக் கொள்கின்றனர் என்பதை தெளிவாகக் கேட்க முடியும். 5 மணி நேரம் பேட்டரி சார்ஜ் நீடிக்கும். பேசினால் தான் சார்ஜ் டவுண் ஆகும்.தற்போது பரவலாக விற்பனைக்கு வந்துள்ள இந்த வகை கருவியால்ரகசியம் காக்க வேண்டிய ஒரு சில அலுவலகங்கள் மட்டுமின்றிவேறு விதமான தவறான நடவடிக்கைகளில் ஈடுபடவும் வாய்ப்பு உள்ளது.

Friday, February 4, 2011

சர்வதேச பாஸ்போர்ட்


இந்த ஆண்டு ஹஜ் பயணம் செல்ல சர்வதேச பாஸ்போர்ட் அவசியமெனதமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழக அரசின் செய்திக்குறிப்பு: டில்லியில் கடந்த மாதம் நடந்த இந்திய ஹஜ் குழுவின் கூட்டத்தில்சர்வதேச பாஸ்போர்ட் வைத்துள்ள புனித பயணிகள் மட்டுமே 2011ல் ஹஜ் பயணம் செய்ய விண்ணப்பிக்க முடியும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. ஹஜ் பயணத்துக்கு விண்ணப்பிக்கும் போதுஒவ்வொருவரும் சர்வதேச பாஸ்போர்ட் அவசியம் வைத்திருக்க வேண்டும். தங்களிடம் பாஸ்போர்ட் இல்லையென்றால்ஹஜ் பயணத்துக்கு விண்ணப்பிக்கும் முன்,பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்துஹஜ் அறிவிப்பு வெளியாகும் முன்புபெற நடவடிக்கை எடுக்க வேண்டும். பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் மட்டுமே குலுக்கல் சமயத்தில் சேர்க்கப்படுவர். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Thursday, February 3, 2011

GOT QUESTIONS?

GOT A QUESTION?

   ASK HIM                                              

HE WILL RESPOND TO YOU

VISIT  http://www.harunyahya.com/


சடங்குச் சுரண்டல்கள்

அலைகள் என்ன பேசக்கூடும்… 
கடல் கடந்த கணவனின் கவலை ஓரலை
… துணை பிரிந்த மனைவியின் துயரம் ஒரு பேரலை…
 பலரின் வாழ்வுக் கடலில் இந்த அலைகள் ஓய்வதே இல்லை…
 இளமைக் கற்பூரம்… அதில் எரிவதோ வறுமை நெருப்பு… 
முன்னதாய் முடிந்த சகோதரிகளின் திருமணம்…… 
பின்னர் நடந்த சடங்குச் சுரண்டல்கள்…
 இளமையின் விளிம்பில் இவனது திருமணம் எல்லாம் கடனைக் கடலாக்க...




விழிப்புணர்வு ஏற்றும் வரிகள்,உண்மை உணர்த்தும் வரலாறுகள்,மூடப்பழக்க மூர்க்கத்தனத்தை மழுங்கடிக்கும் வார்த்தைகள்,சுருக்கமாக SIMPLY SUPERB




http://www.samuthayaotrumai.com/