Tuesday, December 13, 2011

தேவை உதவி


புதுமனைதெருவை சேர்ந்த நெய்னா என்ற சகோதரர் (தந்தை பெயர் மர்ஹூம் ஹாஜா முஹைதீன்)சிறிது காலம் முன்பு ஆட்டோவில் சென்று கொண்டிருக்கும் பொது ஏற்பட்ட விபத்தில் தலையில் உள் காயமடைந்து,தற்போது அது மிகவும் ஆபத்தான நிலைமைக்கு (மூளையில் ரத்தக் கட்டு )
அவரைத் தள்ளியுள்ளது.இதற்கு உடன் ஆபரேஷன் பண்ணுவதே வழி என மருத்துவர்கள் சொல்லிவிட்டனர்.எனவே,அவர் தற்போது பெங்களூரில் உள்ள சென்ட்ரல் கவர்ன்மென்ட் மருத்துவமனையில் - நியூரோ சர்ஜன் பிரிவில் அவசரமாக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆனால்,அவருக்கு என எந்த வித வருமானமோ,சொத்துக்களோ இல்லை,மேலும் அவருக்கு சிறு வயதில் போலியோ ஏற்பட்டதன் காரணமாக இரு கால்களும் ஊனமானவர்.அவருடைய சில உறவினர்களின் உதவியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு நம் சகோதரர்கள் தங்கள் உதவிகளை தாரளமாக வழங்கினால் - மிகவும் உதவியாக இருக்கும்,எல்லாம் வல்ல அல்லாஹ் - தன கருணை மழையை பொழிவான்,ஆமீன்

BANK DETAILS
H.ANWER HUSAIN
A/C NO 10885982755
STATE BANK OF INDIA
RAJAJI SALAI BRANCH
CHENNAI 600001
CONTACT :H ANWER HUSAIN 9840640603
தகவல் அப்துல் கரீம்,கலிபோனியா 

3:92நீங்கள் நேசிக்கும் பொருள்களிலிருந்து தானம் செய்யாதவரை நீங்கள் நன்மை அடைய மாட்டீர்கள்; எந்தப் பொருளை நீங்கள் செலவு செய்தாலும், நிச்சயமாக அல்லாஹ் அதை நன்கறிந்தவனாக இருக்கின்றான்.

57:7நீங்கள் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர் மீதும் நம்பிக்கை கொள்ளுங்கள்; மேலும், அவன் உங்களை (எந்த சொத்துக்கு) பின் தோன்றல்களாக ஆக்கியுள்ளானோ, அதிலிருந்து (அல்லாஹ்வுக்காகச்) செலவு செய்யுங்கள்; ஏனெனில் உங்களில் எவர்கள் ஈமான் கொண்டு, (அல்லாஹ்வுக்காகச்) செலவும் (தானம்) செய்கிறார்களோ, அவர்களுக்கு (அவனிடம்) பெரியதொரு கூலி இருக்கிறது.

Monday, December 12, 2011

குர்ஆனின் அத்தாட்சிகள்


ஒவ்வொரு காலகட்டத்திலும் மனித சமுதாயத்தை நேரான பாதையில் கொண்டுசெல்ல அல்லாஹ்விடம் இருந்து வேதங்கள் திருதூதர்கள் வழியாக அளிக்கப்பட்டு கொண்டு இருந்தன. ஏழாவது நூற்றான்டில் வேதங்களின் இறுதியாக இறுதி நாள் வரை உள்ள மனிதர்களுக்கு அளிக்கப்பட்ட வேதம்தான் திருக்குர்ஆன் ஆகும்.
அறிவியல் முன்னேற்றத்தால் மனிதனின் வளர்ச்சி அதிகமாக இருந்தாலும்,திருக்குர்ஆனின் எந்தவொரு கருத்தும் தவறானது என்று இதுவரை எவராலும் நிருபிக்க முடியவில்லை.
அதைப்போல் குர்ஆனில் கூறப்பட்ட வரலாற்று செய்திகள் நூறு சதவீதம் உண்மையானது என்பதை இப்பூமியில் பயணம் சென்றால் நம்மால் உணர முடியும். பூமியில் பயணம் செய்து கடந்த கால வரலாற்றை படித்து படிப்பினை பெற திருக்குர்ஆன் நமக்கு கட்டளையிடுகிறது.
பூமியில் பிராயாணம் செய்துகுற்றவாளிகளின் முடிவு என்னவாயிற்று என்று பாருங்கள்” என்று (அவர்களிடம் நபியே!) நீர் கூறுவீராக. அல்குர்ஆன் 27:69ஆதம் அலைஹி வஸ்ஸலாம் அவர்கள் முதல் முஹம்மது நபி ஸல்லல்லாஹ் அலைஹி வஸ்ஸலாம் வரை உள்ள வரலாற்று நிகழ்ச்சிகள் இங்கு தொகுக்கப் பட்டுள்ளன.

திருக்குர்ஆனையும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸலாம் அவர்களின் வாழ்க்கையையும் முன்மாதிரியாக வைத்து உங்கள் வாழ்கையை சரிசெய்து கொள்ளுங்கள். அதுமட்டும்தான் இவ்வுலகத்தில் சாந்தியையும் சமாதானத்தையும் மறுமையில் சொர்கத்தையும் அடைவதற்க்கான ஓரே வழி.
source : Tamil Quran.com
  
    He who produced you from one soul and [gave you]a place of dwelling
   and of storage. We have detailed the signs for a people who understand.

   உங்கள் அனைவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து உண்டாக்கிப்பின்
   (உங்கள் தந்தையிடம்) தங்க வைத்து, (பின்னர் கர்ப்பத்தில்) 
   ஒப்படைப்பவனும் அவனே. சிந்தித்து விளங்கிக் கொள்ளக்
   கூடிய மக்களுக்கு நிச்சயமாக நம் வசனங்களை விவரித்துள்ளோம்.
   Al-Aann'm 6-98

பிரியமுடன்.
  MOHAMMED SHERIFF

Monday, December 5, 2011

அவதூறு கூறாதீர்கள்


எவர்கள் முஃமினான, ஒழுக்கமுள்ள பேதை பெண்கள் மீது அவதூறு செய்கிறார்களோ, அவர்கள் இம்மையிலும் மறுமையிலும் சபிக்கப்பட்டவர்கள் இன்னும் அவர்களுக்கு கடுமையான வேதனையுண்டு.  

(அல் குரான் – 24:23)

அந்நாளில் அவர்களுடைய நாவுகளும், அவர்களுடைய கைகளும், அவர்களுடைய கால்களும் அவர்களுக்கு எதிராக அவர்கள் செய்தவைபற்றி சாட்சியம் கூறும்

(அல் குரான் 24: 24)