Tuesday, April 24, 2012

அதிரை கவுன்சிலர்களுக்கும்,இயக்க நண்பர்களுக்கும் அவசர வேண்டுகோள்......


மே 1 முதல் நடைபெற இருக்கும் சாதி,மத,வகுப்புவாரி கணக்கெடுப்பில் முஸ்லிம்கள் சரியான தகவல்களை அளிப்பது பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி , பதிவுகள் ஏதாவது ஏற்பாடு செய்தால் நல்லது.

பொதுவாக வெளிநாட்டில் வசிப்பவர்களை அதிகாரிகள் வேண்டுமென்றே இருட்டடிப்பு செய்து விடுகின்றனர். குடும்ப அட்டைக்கு (ரேஷன் கார்டு) பதிவு செய்வதற்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கும் வேறுபாடு உள்ளது. முன்னது உணவுப் பொருள் விநியோகத்திற்காக கணக்கிடப்படுகிறது. அதில் வெளிநாட்டில் வசிப்பவர்களை சேர்க்காவிட்டால் பெரிய பாதிப்பு ஒன்றும் இல்லை. பின்னது அரசு நலத்திட்டங்கள் இடஒதுக்கீடு வேலைவாய்ப்பு ஆகியவற்றை தீர்மானிப்பதில் முக்கிய காரணியாக இருக்கிறது. 

கணக்கெடுப்பு தொடர்பான விவரங்கள் எழுத்துப்பூர்வமாக இல்லாமல் நேரடியாக கம்ப்ïட்டரில் பதிவு செய்யப்படுகின்றன..எனவே இக்கணக்கெடுப்பில் அதிரையில் பிறந்த அணைவரையும் பதிவு செய்ய வேண்டியது அவசியம்.
 

இந்த விஷயத்தில் அசிரத்தையாக இருந்து விடக்கூடாது.

- வழிகாட்டி பதிவுகளை அணைத்து அதிரை வலைப்பக்கங்களிலும் பதிவது.
- அதிரையின் சமுதாய அரசியல் இயக்கங்கள், மற்றும் சங்கங்கள் இவ்விஷயத்தை வீடுகளில் வலியுறுத்துதல்
- பதிவு செய்ய வரும் அதிகாரிகளுடன் தெருவாரியாக தன்னார்வலர்களை உடன் அனுப்புதல்
- கவுன்சிலர்கள் உடனிருப்பதும் அவசியம்.
மிகச்சிரமமான பணியான இந்த கணக்கெடுப்பு அடிக்கடியோ ஆண்டுதோறுமோ ஐந்தாண்டுகளிளோ எடுக்கப்படுவதில்லை. எப்போதாவது அத்தி பூத்தாற்போல் எடுக்கப்படுகிறது. எப்படியும் அடுத்த பத்தாண்டுகளுக்கு இந்த கணக்கெடுப்பின் அடிப்படையிலேயே அரசு திட்டங்களும் ஒதுக்கீடுகளும் இருக்கும். நாளேடுகளில் இதர சாதி சங்கங்களின் அறிக்கைகளை படித்து பார்த்தால் இதன் முக்கியத்துவம் விளங்கும்.

Friday, April 20, 2012

இலங்கையில் பள்ளிவாசல் உடைப்பு,பதட்டம்



தம்புள்ள மஸ்ஜிதுல் ஹைரியா ஜூம்ஆ பள்ளிவாயல் உடைக்கப்பட்டது தொடர்பாக யாழ் முஸ்லிம் வலைத்தளத்தில் பிரசுரிக்கப்பட்ட கட்டுரையை நன்றியுடன் மீள்பிரசுரம் செய்கின்றோம்.
தம்புள்ள மஸ்ஜிதுல் ஹைரியா ஜூம்ஆ பள்ளிவாயல் இன்று வெள்ளிக்கிழமை நண்பகல் பௌத்த தேரர்களினால் உடைத்து நொருக்கப்பட்டுள்ளது.
இன்று நண்பகல் புனித ஜூம்ஆத்தொழுகைக்காக முஸ்லிம்கள் ஒன்றுசேர்ந்திருந்த நேரத்தில் பெருமளிவலான பௌத்த தேரர்களும் அவர்களுக்கு ஆதரவான பெரும்பான்மையினத்தவர்களும் பள்ளியினுள் கூடியிருந்தவர்களை அப்புறப்படுத்திவிட்டு பள்ளிவாயிலை இடித்து நொறுக்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாதுகாப்பிற்காக நிறுத்தப்பட்டிருந்த இராணுவத்தினராலும் பொலிசாராலும் குறித்த கும்பலைக்கட்டுப்படுத்த முடியாமல் போய்விட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பள்ளிவாசலுக்கு எதிராக சதித்திட்டங்கள் மற்றும் நாசகார செயற்பாடுகள் அண்மைக்காலமாக மேற்கொள்ளப்பட்டு வந்ததை பள்ளிவாசல் நிர்வாகிகள் பல அரசியல் வாதிகளின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.
பிரதியமைச்சரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளருமான பசீர் சேகுதாவூத் தம்புள்ள ஜும்மாஹ் மஸ்ஜித் தொடர்பாக பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸவுடன் தொடர்பு கொண்டு பேச ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு செயலாளர் மலேசியா விமான நிலையத்தில் இருந்த போது மிலிந்த மொரகொடவுடன் தொடர்பு கொண்டு பாதுகாப்பு செயலாளருடன் தொடர்பு ஏற்படுத்தப்பட்டது பாதுகாப்புகான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள.
பாதுகாப்பு செயலாளர் அமைச்சர் ஜானக்க பண்டார தென்னகோனை தொடர்பு கொண்டு பேசுமாறும் தெரிவித்திருத்தார் . அமைச்சர் ஜானக்க பண்டார தென்னகோனின் தொலைபேசி ஆப் செய்யப்பட்டு இருந்ததால் அவரின் இணைப்பு செயலாளருடன் தொடர்பு கொண்டு குறித்த பாதுகாப்பு விடயம் தொடர்பாக பேசியுள்ளார்.
இவற்றையெல்லாம் மீறியே தற்போது தம்புள்ளையில் அல்லாஹ்வின் இல்லம் சிங்களக் காடையர்களின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.
பள்ளிவாசலுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளமை முன்னமே அறியப்பட்ட நிலையில் இதுதொடர்பில் ஏன் உரிய நடவடிக்கைகளை முஸ்லிம் தலைமைகள் மேற்கொள்ளவில்லையென தற்போது பரவலான கேள்வி எழுந்துள்ளது. இவ்விவகாரத்தை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுசென்று முஸ்லிம் அரசியல் தலைமைகள் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள தவறியுள்ளதாக பரவலாக முஸ்லிம்கள் தரப்பில் குற்றம் சுமத்தபட்டுள்ளது.
முஸ்லிம் தரப்பு ஊடகங்கள் பள்ளிவாசல் பற்றிய அச்சுறுத்தலை நேற்றும் இன்றும் முன்கூட்டியே வெளியிட்டிருந்தன. இதனை முஸ்லிம் அரசியல் தலைமைகள் கவனத்திற்கொண்டு இருக்குமாயின் அல்லாஹ்வின் இல்லம் தகர்க்கப்பட்டிருப்பதை நம்மால் தடுத்திருக்கலாம் அல்லவா..??
Thanks to Jafna Muslim


மேலும் அதிக தகவல்களுக்கு,




http://kattankudi.info/

Sunday, April 15, 2012

"மது தீமைகளின் தாய்" - நபிகள் நாயகம்


திருவாரூரைச் சேர்ந்த 9-ஆம் வகுப்பு மாணவன் ஒருவன் தனதுஇடுப்பில் மறைத்துக்கொண்டு சென்ற பீர் பாட்டில் வெடித்து இறந்திருக்கிறான்! எத்தனை சிறிய வயதிலேயே குடிப்பழக்கம் தொடங்கிவிடுகிறது என்பதற்கான ஒரு சின்ன ஆதாரம் இது! வெறும் 45மில்லியில் தொடங்கும் மதுப் பழக்கம் தன்னை ஒரு நோயாளியாகவே மாற்றிவிடும் என்பது ஆரம்பக் குடிகாரர்கள் பலருக்குத் தெரிவதில்லை.
 
இந்தக் குடிநோயின் அறிகுறிகள் என்னென்னஇந்தப் புதைகுழிக்குள் விழாமல் இருப்பது எப்படிதப்பித்தவறி விழுந்துவிட்டவர்கள் குடியின் ஆக்டோபஸ் பிடியிலிருந்து மீண்டு வருவது எப்படிகுடிநோயிலிருந்துஒருவர் மீண்டுவர சொந்தமும் நட்பும் எப்படி உதவ முடியும்?அடுக்கடுக்காகப் பிறக்கும் அத்தனை கேள்விகளுக்கும் வல்லுநர்களிடம் விடை உண்டு.  
 
''ஆரம்பத்தில் வெறும் ஆசைநண்பர்களின் வற்புறுத்தலுக்காக மதுஅருந்துவார்கள்பின்பு அதில் தொடர்ந்து  நாட்டம் ஏற்பட்டு குடிக்கஆரம்பிக்கிறார்கள். நாளடைவில்இன்னும் அதிக அளவில் குடித்தால்தான் போதை ஏற்படும் என்கிற நிலை உருவாகும். எங்கேஎப்படிக் குடிக்கலாம் என்று மதுவைப் பற்றிய சிந்தனைதான் அதிகமாக இருக்கும். இவையே ஆரம்பக்கட்ட நிலை.

 
அடுத்துகுடிப்பதைக் கட்டுப்படுத்தவோமதுவின் அளவைக் குறைக்கவோமுடியாது. வற்புறுத்தலின்பேரில் சிறிது காலம் நிறுத்துவதுபோல்இருந்துவிட்டுமறுபடியும் அதிகமாகக் குடிப்பார்கள். கோபம்வெறுப்பு,சண்டைஇவையே இடைப்பட்ட காலகட்ட நிலைதொடர்ந்து அதிகமாகக் குடிப்பதுகுடிப்பதற்காகக் கடன் வாங்குவதுபொய் பேசுவதுதிருடுவது,குடிக்கத் தடுப்பவர்களை அடிப்பதுகாரணமே இல்லாமல் மனைவியின் நடத்தையைச் சந்தேகிப்பது என நிலைமை விபரீதமாகும். 'குடித்தால்தான் சிறிதளவேனும் செயல்பட முடியும்’ என்கிற உச்ச நிலை உருவாகும். இவைதான் தீவிர இறுதிக்கட்ட நிலை'' என்கிறார் டி.டி.கே. மருத்துவமனை சீனியர் தெரபிஸ்ட் மற்றும் கவுன்சிலர் ஜாக்குலின் டேவிட்.

குடிநோயாளிகள் என்னென்ன பாதிப்புகளுக்கு உள்ளாகிறார்கள் என்பதை,டி.டி.கே. மருத்துவமனையைச் சேர்ந்த  டாக்டர் அனிதாராவ் விளக்குகிறார்.

''
ஏழைபணக்காரர் என்ற பாகுபாடே இல்லாமல் குடிப்பவர்களில் யாருக்குவேண்டுமானாலும் குடிநோய் வரலாம். குடிப்பவர்களில் 10 முதல் 20சதவிகிதத்தினர் மதுவுக்கு அடிமையாகிவிடுகின்றனர். ரத்தத்தில் 20 மில்லிகிராம் ஆல்கஹால் கலந்தாலே பார்வைத் திறன் குறையும். 30 மில்லி கிராம் என்ற அளவைத் தொட்டால் தசை தன் கட்டுப்பாட்டை இழக்கும். சிந்திப்பதுபுரிந்துகொள்வதுமதிப்பிடும் தன்மை குறைவது என்று சங்கிலித் தொடர்போல் எல்லாம் பாதிக்கப்படும். உடல் அளவிலும் மன அளவிலும் குடிக்கு அடிமையாகிவிடுவதால் வாழ்க்கையில் பலவிதமான பிரச்னைகள் ஏற்பட்டாலும்கூட குடிப்பதை அவர்களால் நிறுத்த முடியாது. ஏனெனில்குடியை நிறுத்தும்போது கை நடுக்கம்தூக்கமின்மை,மனச்சோர்வுசிந்திக்கும் திறனில் பாதிப்புபயம்பிரமைநரம்புத் தளர்ச்சி,உணர்ச்சி இன்மை என்று பல்வேறு பாதிப்புகள் உருவாகும். கணையத்தில் ரணம்தோல் தொடர்பான வியாதிகள்தாம்பத்திய வாழ்க்கையில் பிரச்னைஊட்டச்சத்துக் குறைபாடுவயிற்றுப்புண்ஜீரணசக்தி குறைதல்,புற்றுநோய் அபாயம்கல்லீரல் வீக்கம்மஞ்சள்காமாலைஇதயத் துடிப்பில் மாற்றம்ரத்தக் குழாய்கள் பாதிப்புஇதய தசைகள் பழுதடைதல் என்று உடலின் எந்த உறுப்பையும் இந்தக் குடிநோய்விட்டுவைக்காது.  குடித்தவுடன் மூளை செயல்படும் திறனும் உடனடியாகக் குறைவதோடு நிரந்தரப் பாதிப்புகளுக்கும் உள்ளாகும்.
 
மதுவின் தாக்கத்தில் கார் அல்லது பைக் ஓட்டுகிறவர் தாறுமாறாக வாகனம் ஓட்டி விபத்துக்குள்ளாக இதுவே காரணம்'' என்கிறார் அவர்.

இவர்களை எப்படி மீட்டு எடுப்பதுஎன்னென்ன சிகிச்சை முறைகள் உள்ளனவழிக்காட்டுகிறார் சென்னை,  விஸ்டம் போதை மறுவாழ்வு மையத்தின் இயக்குநர் அறிவுடை நம்பி.
''குடிநோயாளிகளுக்கு குடிப்பது மட்டும்தான் ஒரே நோக்கமாக இருக்கும்.குடிப்பதற்காக ஏதாவது ஒரு காரணத்தை அவர்களே உருவாக்கிக்கொள்வார்கள். சச்சின் 100-வது சதம் அடித்தாலும் குடிசச்சின் டக் அவுட் ஆனாலும் குடி என அவர்களுக்குத் தேவை ஏதேனும் ஒரு காரணம் மட்டுமே.  

சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்ட உடன்முதலில் உடல் பரிசோதனை செய்யப்படும். தொடர்ந்து மது அருந்தியதால் ஏற்கெனவே உடலில் ஏற்பட்டுள்ள பிரச்னைகளுக்கும்,   நன்றாகப் பசித்து சாப்பிடவும்ஆழ்ந்து தூங்குவதற்கும் வழிசெய்யும் சிகிச்சை முறைகள் மேற்கொள்ளப்படும்.
இரண்டாவது கட்டமாக மனரீதியாக சிகிச்சை அளிக்கப்படும். மது அருந்தாமல்மகத்தான வாழ்வு வாழும் வழிமுறைகளைத் தெரிந்துகொள்ளல்குடியால் ஏற்படும் பாதிப்புகளை உணர்தல்வாழ்வின் உன்னதத்தை அறிந்துகொள்ளுதல்குரூப் தெரபிமீண்டு நல்லபடியாக வாழ்பவர்களுடனான கலந்துரையாடல்ஆலோசனை எனப் பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்படும்.

உள்நோயாளியாகச் சிகிச்சை முடிந்து சென்ற பிறகும்தொடர்ந்து இரண்டுவருடங்களுக்கு ஆலோசனைகள்மருந்துகள்பிரச்னைகளைச் சமாளிக்க வழிகள் எனச் சிகிச்சை முறைகள் தொடரும். பழைய சகவாசத்தால் சிலர் மறுபடியும் குடிக்க நேரிடலாம். திரும்பவும் குடிக்க ஆரம்பித்த இரண்டு அல்லது மூன்று நாட்கள் மட்டும் குடிப்பவருக்கு குற்ற உணர்வு இருக்கும். இந்தச் சமயத்தில் குடும்பத்தினர் மறுபடியும் சிகிச்சைக்கு அழைத்து வந்துவிட்டால் அவர்களை எளிதில் மீட்டுவிடலாம்.
ஒருவர் குடிநோயில் இருந்து மீண்டுநல்ல வாழ்க்கை வாழ வேண்டும் என்று மற்றவர்கள் எவ்வளவு முயற்சி செய்தாலும், 'விடுபட வேண்டும்என்ற உறுதியான எண்ணம் குடிப்பவருக்கும் இருக்க வேண்டும். சிகிச்சை முடிந்து சென்ற பிறகும்அதே வேலைசூழல்சமுதாயம்குடிகார நண்பர்கள் இருக்கத்தான் செய்யும். நமக்காக எதுவும் மாறியிருக்கப்போவது இல்லை. மாற வேண்டியது குடிநோயாளிதான்''என்றார் அறிவுடை நம்பி.  

குடிநோயிலிருந்து ஒருவரை மீட்டெடுப்பதைவிட அந்தப் புதைக்குழிக்குள்ஒருவர் விழாமல் காப்பாற்றுவது புத்திசாலித்தனம். அதனால்,  குடிபோதைபற்றிய விழிப்பு உணர்வைப் பள்ளிகள்கல்லூரிகளில் இருந்தே தொடங்க வேண்டும். அப்படி செய்தால்தான் ஓர் ஆரோக்கியமான சமூகத்தை நம்மால் கட்டமைக்க முடியும்!

 பாதிக்கப்பட்ட இளைஞர்களுக்கு...

 
குடிக்கும் நேரம் வரும்போதுமனதை ஒருநிலைப்படுத்தும் வகையில் தியானம்பிரார்த்தனை அல்லது மனதை மாற்றும் வகையில் மனைவி,குடும்ப உறுப்பினர்களுடன் நேரத்தைச் செலவிடுவதுபொது இடங்களுக்குச் செல்வதுவிளையாட்டுகளில் ஈடுபடுவது போன்றசெயல்களில் ஈடுபடலாம்.

 
ஆரோக்கியமான பொழுதுபோக்குகளையும் நல்ல நண்பர்களின் நட்பையும் உருவாக்கிக்கொள்ள வேண்டும்.

 
எந்தச் சூழலில்யார் குடிக்கக் கூப்பிட்டாலும்மதுவை அருந்தக் கொடுத்தாலும் 'வேண்டாம்’ என்று திடமாகக் கூற வேண்டும்.  

பெற்றோர்களின் கவனத்துக்கு...
 
  நட்பை கவனிக்கவும், நண்பர்கள் யார் என்ற தெரிந்து வைக்கவும் .

  
பார்ட்டிஃபங்ஷன் என்று நேரம் கழித்து வரும் மகனைக் கண்டிப்பாகக் கூர்ந்து கவனிக்க வேண்டியது ஒவ்வொரு பெற்றோரின் கடமையாகும். வாய் குளறுதல் மற்றும் மது வாடை வந்தால் நல்ல நிலையில் இருக்கும்போது அவருடன் பேசுங்கள்,  மதுவால் வரும் கேடுகளை எடுத்துச் சொல்லிஉங்களுடைய கனிவான கண்காணிப்பில் அவர்இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள்.

  
கூடுமானவரை பிள்ளைகளின் கையில் அதிகப் பணப்புழக்கம் இல்லாமல் பார்த்துக்கொள்வது அவசியம்.

  
நட்பு வட்டாரத்தினால்மகன் பாதை மாறுவது தெரிந்தால்ஒரிரு வாரங்கள்குடும்பத்துடன் வெளியூர்களுக்கு சுற்றுலா செல்வது பலன் தரும். புதிய இடமும் மாறுபட்ட சூழலும் இதற்கு உதவியாக இருக்கும். மனம் விட்டு பேசுவதும் மகத்தான பலனைத் தரும்.

  வெளியூரில் படிக்கும் மகனாக இருந்தால்அடிக்கடி அவனிடம் போனில் பேசுவதுஅந்த ஊரில் இருக்கும் அக்கறையுள்ள குடும்ப நண்பர்களைப் போய் பார்க்கச் சொல்வது, 'நாங்கள் உன் அருகில்தான் இருக்கிறோம்’ என்று அடிக்கடி அவருக்கு உணர்த்துவது... இவையெல்லாம் அவருக்குள் பெற்றோர் மீதான அன்பு கலந்த மரியாதையை ஏற்படுத்தும்;தவறான செயல்களுக்கு அடிமையாகாமல் இருக்க உதவும்.

 போதை ஏறினால்... பாதை மாறினால்...

 1,30,000...
இந்தியாவில் கடந்த ஆண்டு விபத்துகளில் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை இது. ஒரு பெரும் பூகம்பம்சுனாமி பேரிழப்புகளுக்கு இணையானது. உலகிலேயே விபத்துகளில் முதலிடம். இந்த மரணங்களில் பெரும்பாலானவற்றுக்கான காரணம்...  மதுப்பழக்கம்! (அதீத வேகத்தால் நேரும் விபத்துகள் 24 சதவிகிதம் என்றால் மதுவால் நேரும் விபத்துகள்40 சதவிகிதத்துக்கும் அதிகமாம்).
மது 'உள்ளே’ சென்றவுடன் உடலில் அப்படி என்னதான் செய்கிறது?

அப்போலோ மருத்துவமனையின் அவசரச் சிகிச்சைப் பிரிவு மருத்துவர் டாக்டர். பி. பொன்முருகன் விளக்குகிறார்.

''
நாம் உண்ணும் உணவு சிறுகுடலால் உட்கிரகிக்கப்பட்டுஅதன் பிறகு கல்லீரலில் போய் பல்வேறு பொருட்களாகப் பிரிந்து ரத்தத்தில் கலக்கும். இதேபோலதான் மதுவும் கல்லீரலுக்குச் சென்று அசிட்டால்டிஹைடு,அசிட்டிக் ஆசிட்கார்பாக்ஸிலிக் ஆசிட் எனும் மூன்று பொருட்களாக உடைந்து ரத்தத்தில் கலக்கிறது. இவை மூன்றும்  மூளையின் முக்கியப் பகுதிகளைப் பாதிக்கின்றன.

இதன் தொடர்ச்சியாக கிளர்ச்சியான மனநிலைஅதிக சந்தோஷம்,குழப்பம்சுயநினைவிழப்பு என்று பல்வேறு கட்டங்கள் ஒன்றன்பின் ஒன்றாக நடக்கும். இப்படிக் குழப்பச் சூழல் ஏற்படும்போதோ,சுயநினைவை இழக்கும் தருணத்திலோதான் வண்டி ஓட்டுகையில் விபத்து நேரிடுகிறது. 
குறிப்பாகநம்முடைய மூளையில் கட்டுப்பாடு மற்றும் உணரும் திறன்இருக்கிற கார்டெக்ஸ் பகுதி பாதிக்கப்படுவது முக்கியக் காரணம். எந்தவேகத்தில் ஓட்ட வேண்டும் என்பது ஸ்பீடா மீட்டர் பார்க்காமலேயே நமக்குத் தெரிந்திருக்கும். அதற்குக் காரணம்கார்டெக்ஸுக்குள் இருக்கும் ஓர் ஒழுங்குமுறையானது நம்மை வழிநடத்திக்கொண்டே இருப்பதுதான். ஆனால்மது அருந்திய பிறகு இந்தக் கட்டுப்பாடு போய்விடும். எல்லோரும் ஓர் ஒழுங்கில் வண்டி ஓட்டிக்கொண்டு இருக்கும்போதுமது அருந்தியவர் மட்டும் தாறுமாறாக ஓட்டுவதால்விபத்து நடந்துவிடுகிறது.
 
மூளைக்குள் ஒரு செல் இன்னொரு செல்லுக்குத் தகவல்களை அனுப்பும் நியூரோ ட்ரான்ஸ்மீட்டர்கள்பற்றிக் கேள்விப்பட்டு இருப்பீர்கள். இந்த நியூரோ டிரான்ஸ்மீட்டரில் குளுட்டோமைன்காபா என்று இரண்டு நல்ல,கெட்ட தூதுவர்கள் இருக்கின்றனர். ஆல்கஹால் அருந்தாதவர்களுக்கு குளுட்டோமைன் என்ற நல்ல நியூரோ தூதுவர்கள் அதிகமாகச்செயல்படும்காபா தூதுவர்களின் செயல்கள் குறைவாக இருக்கும். ஆல்கஹால் அருந்தியவர்களுக்கு இது தலைகீழாக மாறிவிடும். குழப்பங்களும்விபத்துகளும் நடக்க இந்தக் காபா முக்கியக் காரணம்.
மது அருந்திவிட்டு விபத்துக்குள்ளாவதோடுவிபத்துக்குப் பிறகுமருத்துவமனையில் அவர்களுக்குச் சிகிச்சை அளிப்பதிலும் நிறைய சிரமங்கள் இருக்கின்றன. எந்தத் தகவலையுமே பெற முடியாமல் சுய நினைவற்ற ஒருவருக்கு மருத்துவர் சிகிச்சை அளிக்க வேண்டி இருக்கும். அதனால்முதலில் அவருக்கு என்ன பாதிப்புவேறு ஏதேனும் குறைபாடுகள் இருக்கின்றனவாஎப்படி விபத்துக்குள்ளானார்... போன்ற விபரங்களைக் கண்டுபிடித்து சிகிச்சை அளிக்கத் தாமதமாகும்.
அதேபோல்மது அருந்திவிட்டு அடிபட்டவருக்குப் பக்க விளைவாக வலிப்பு போன்ற வேறு பாதிப்புகளும் வரலாம். இதோடுஅவர் குணமாவதும் பாதிக்கப்படும்!''
 
மதுவை மறப்போம்! மதுவை ஒழிப்போம்!
 "மது தீமைகளின் தாய்" - நபிகள் நாயகம்  
 
ஒரு நல்லவன் மது அருந்த ஆரம்பித்துவிட்டால் அணைத்து தீமைகளையும் செய்ய ஆரம்பித்துவிடுவான்,
 
கத்துவது, வெட்கத்தை இழப்பது, ஆடுவது, பாடுவது, பெண்களை செக்ஸ் எண்ணத்தோடு பார்ப்பது,
நண்பர்களோடு அல்லது மற்றவர்களோடு வேண்டுமேன்றே சண்டைக்கு போவது,
வாகனத்தை வேகமாக ஓட்டுவது, etc  முடிவில் 
 
அடிதடி, தஹரார், கொலை, விபச்சாரம்,  கற்பழிப்பு, போலீஸ் கேஸ், ஜெயில் வாழ்கை,
அவனது குடும்பம் நடுத்தெரு, வறுமை, தற்கொலை, அடிக்கடி கணவன் மனைவி சண்டை, அதனால் குழந்தைகள் பாதிப்பு,
அதனால் விவாகரத்து etc
 
நபிகள் நாயகம்  "மது தீமைகளின் தாய்"  என்று சொன்னது எவ்வளவுபொருத்தமாக இருக்கிறது.
ஆதலால் தான் இறைவன் இந்த மதுவை மனித குலத்துக்கு தடை செய்தான்
மதுவை வாங்குவதும் விற்பதும் பரிமாறுவதும் உற்பத்திசெய்வதும் கொண்டுசெல்வதும் அனைத்தும் இஸ்லாத்தில் தடைசெய்யப்பட்டுள்ளன. அனைவருக்கும் தண்டனை உண்டு. அனைவரும் பாவத்தில் சமமானவர்கள். அனைவரும் சபிக்கப்பட்டவர்கள்.
 
இதே போல்தான் வட்டியும் இறைவன்  இந்த மனித குலத்துக்கு தடை செய்தான்.
வட்டி வாங்குவதும் கொடுப்பதும் அதற்கு சாட்சியாக இருப்பதும்அனைத்தும் இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டுள்ளன. அனைவருக்கும் தண்டனை உண்டு. அனைவரும் பாவத்தில் சமமானவர்கள். அனைவரும் சபிக்கப்பட்டவர்கள்
வட்டியினால் பல குடும்பங்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளன
 
இதே போல்தான் வரதட்சனையும் இறைவன்  இந்த மனித குலத்துக்கு தடை செய்தான்.
வரதட்சனை கேட்டு வாங்குவதும், அதற்கு உடந்தையாக இருப்பதும்,ஆண் வீட்டார்க்கு திருமண விருந்து போடுவதும்  அனைத்தும் இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டுள்ளன. அனைவருக்கும் தண்டனை உண்டு. அனைவரும் பாவத்தில் சமமானவர்கள். மாறாக ஆண் தான் பெண் வீட்டார்க்கு திருமண விருந்து போட வேண்டும். ஆண் தான்பெண்ணுக்கு வரதட்சனை  கொடுக்க வேண்டும்.
வரதட்சனையினால் பல பெண்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். திருமணம் கால தாமதம் ஆகிறது. பெண்கள் ஓடி போகிறார்கள். மாமியார் கொடுமை, etc
 
மதுவையும் வட்டியையும் ஒழிக்க வேண்டிய அரசாங்கமே அதை நடத்தினால்
மக்கள் எங்கே திருந்துவது !!!!!!!!!!!!!! மக்கள் திருந்த நினைத்தாலும் கூட அரசாங்கம் திருந்த விடாது !!!!!!!!!!
என்ன கொடுமை சார் !!!

Monday, April 9, 2012

பார்ப்பணர்களால் திணிக்கப்பட்ட.........


ஜோதிட புரட்டு. அறிவியலுக்குப் பொருந்தாத ஜோதிடத்தைப் புகுத்தியவர்கள் பார்ப்பனர்களே!. 
மனிதன் தோன்றிய நாளிலிருந்து பல பிரச்சினைகளில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறான். முதலில் காற்றுமழைஇடிமின்னல் ஆகியவற்றின் சீற்றத்திலிருந்தும் இயற்கைப் பேரழிவுகளிலிருந்தும்விலங்குகளிலிருந்தும் தன்னை காத்துக் கொள்ள பெரும் முயற்சி மேற்கொள்ள வேண்டியதிருந்தது. மனிதன் அறிவியல் பலமுள்ளவனாக இருந்தாலும்மனவலிமையில் சில நேரங்களில் பலமற்றவனாகவே இருந்து வருகின்றான்.

பயந்த மனிதன்பிரச்சினைகளில் சிக்கித்தவிக்கும் மனிதன் தனக்கு ஒரு வழியில் ஆதரவு கிடைக்கிறதென்றால் உடனடியாக அதை ஏற்றுக்கொண்டுஅதன் மூலம் பரிகாரமோ பலனோ கிடைத்திடுமென்ற நம்பிக்கை கொள்வது மனிதனின் இயல்பாக இருந்து வருகிறது.
நல்ல காரியத்திற்கெல்லாம் கைராசி பார்க்கக் கூடியவர்கள் நம் மக்கள். குடு குடுப்பைக்காரன் சொல்லும் குறியையும்குறத்தி சொல்லும் வாக்கையும்சோழி உருட்டி சோதிடம் கூறுபவனையும்கிளி ஜோதிடத்தையும் நம்புகிற நம்மக்களிடத்தில் ஜோதிடம் எளிதாக இடம் பெற்றுவிட்டது.
பொருளாதாரத்தில் சிக்கித் தவிப்பனையும்பெண்ணாசை கொண்டு அலைபவனையும் கயவர்கள்சமூக விரோதிகள்ஏமாற்றுப் பேர்வழிகள் நயந்து பேசி நம்பும் படியாகச் செய்து முடிவில் நம்பியவனை ஏமாற்றி இருப்பதைப் பறித்துச் செல்வதைப் போல, 
சமுதாயத்தில் பல்வேறு பிரச்சினைகளில் சிக்கித் தவிப்பவர்களையும்பணம் பணம் என்று அலையும் பேராசைக் காரர்களையும்பிரச்சினைகளைச் சந்திக்க திடமான மன உறுதி இல்லாதவர்களையும்அச்சத்தோடு வாழ்பவர்களையும் அவர்களுடைய பலவீனத்தைப் பயன்படுத்தி, 
ஜோதிடத்தால் எல்லாவற்றுக்கும் பரிகாரம் காணலாம். யோகம் இருக்கிறது. காலம் சரியில்லை என்றெல்லாம் பொய் கூறிபுரட்டுப் பேசிநம்பவைத்து பார்ப்பனர்கள் தங்கள் ஜோதிடத்தை புகுத்தியும் பரப்பியும் ஏமாந்த மக்களையும்அக்கால மன்னர்களையும் ஆட்டிப் படைத்தனர். பார்ப்பனர்களின் சுய நலத்திற்கு ஜோதிடம் நன்கு பயன்பட்டு வந்திருக்கிறது - வருகிறது.
தமிழ் மக்களின் வரலாற்றிலும்வாழ்க்கை முறையிலும் இல்லாத ஜோதிடத்தைப் பார்ப்பனர்கள் தமிழர்களிடையே புகுத்திட அக்கால மன்னர்களும் துணை செய்தனர். பார்ப்பனர்களின் பொய்யையும் புரட்டையும் நம்பியதால் ஜோதிடம் மாத்திரமல்ல,வடமொழி யான சமஸ்கிருதத்தைப் புகுத்தினார்கள். 
திருமண முறையில் வைதிகத்தைப் புகுத்தினார்கள். ஆலய வழிபாட்டை அவர்களின்ஆதிக்கத்திற்கு முழுமையாக ஆக்கிக் கொண்டனர். தமிழர்களின் வாழ்க்கை முறையிலும்வழிபாட்டு முறையிலும் பார்ப்பனர்களின் வேதபுராணக் கொள்கைகள் இடம்பெற்று வரலாயிற்று.

1300
 ஆண்டுகளுக்கு முன் நடந்த கண்ணகி - கோவலன் திருமணத்தில் வயதான பார்ப்பான் வேதம் ஓதி சடங்குகள் நடத்தி தீ வலம் சுற்றி வந்ததாகச் சிலப்பதிகாரத்தில் கூறப்பட்டுள்ளது.
மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிடத் தீ வலம் செய்வது காண்பார்கண் நோன்பு என்னை கி.பி 2-வது நூற்றாண்டிலேயே தமிழர்களின் திருமணச் சடங்குகளில் பார்ப்பனர்கள் ஆரிய கலாச்சாரத்தைப் புகுத்தி விட்டனர்.
ஜோதிடம் பார்ப்பனர்களால்தான் தமிழர்களிடையே புகுத்தப்பட்டது. 
பார்ப்பனராகிய விசுவாமித்திரர் ஒரு ஜோதிடர். இந்த பார்ப்பன ஜோதிடர்களின் கட்டுக்கதையைப் பாருங்கள்.
கிருத்திகை நட்சத்திரத்திலுள்ள 7 நட்சத்திரங்களும் 7 முனிவர்களின் மனைவியர்களாம். அம்மனைவிமார் முறையே அம்பாதுலாநிதத்நிஅப்யந்திமேகயந்தி,வர்ஷயந்தி,சுபுனிகா. இது பார்ப்பனர்களின் அறிவியல். ஜோதிடர்களின் வானவியல்.
விஞ்ஞானம் தரும் விளக்கத்தைப் பாருங்கள். கிருத்திகை நட்சத்திரம் சூரியனைவிட1000 மடங்கு ஒளியுடையது. அதன் குறுக்களவு 90 இலட்சம் கி.மீ. இங் கிருந்து 410ஒளியாண்டுத் தொலைவில் உள்ளது.
வேதத்திற்கும் - விஞ்ஞானத்திற்கும் உள்ள வேறுபாட்டை எண்ணிப்பார். இந்த வேதம் கூறும் சோதிடத்தை நம்ப வேண்டுமாம்.
ரிக் வேதத்தை ஜோதிட நூல் என்கின்றனர்! மேலும் பிருஹத் சம்கிதைசாராவளி,காலப்பிரகாசிகா அர்த்த சாஸ்திரம் ஆகியவைகளும் ஜோதிட நூற்களாம். இந்த நூற்கள் ஒருவருடைய மரணம்நிகழ்காலத்தில் நடைபெறும் நிகழ்வுகள்நேரம் ஆகியவற்றை வினாடி சுத்தமாக முன்கூட்டியே அறிந்து கொள்ளக்கூடிய கணித முறைகளை விளக்கியிருக்கிறதாம். இப்படி எழுதி இருக்கிறார் தினமணி ஜோதிடர்.
இந்த வேதங்களிளெல்லாம் அறிவியல் இருக்கிறதாம்நாமெல்லாம் அதை நம்ப வேண்டுமாம். இப்படித் துணிந்து இன்னமும் எழுதிக்கொண்டிருக்கின்றனர் பார்ப்பனர்கள்.
உண்மையிலேயே மனித வாழ்வை நிர்ணயிக்கக் கூடிய கணிதமுறை ஜோதிடத்தில் இருக்குமானால் அறிவியல் உலகம் அதை ஏற்றுக்கொண்டிருக்கும்.
உண்மையில்லாத பொய் நிறைந்த பார்ப்பனர்களின் ஜோதிடத்தை அறிவியல் உலகம் ஒரு நாளும் ஏற்றுக்கொள்ளாது. வேத காலத்திலிருந்து பார்ப்பனர்கள் சொல்லிப்பார்க்கிறார்கள் அறிவியல் உலகம் அதை ஏற்றுக்கொள்ளவில்லையே.
உலகின் வானவியல் அறிஞர்கள்கோபர்னிக்கஸ்கெப்ளர்பிராகேகலிலியோ,நியூட்டன்லேப்லேஸ்சேம் பர்லின்மவுல்டன்பிரின்சியாஜேம்ஸ்பிரெட் ஹாய்ஸ்,வான்வெய் ஜக்கர்ஹாய்லிஹெயின்ரிச்வேபேஈன்ஸ்டீன் ஆகியோர்களின் வானவியல் கருத்துகளை யெல்லாம் ஏற்றுக்கொண்ட விஞ்ஞான உலகம் ஜோதிடத்தையும்தினமணி ஜோதிடர் கூறியுள்ள அந்த வேதக் கருத்துகளையும் ஏற்றுக்கொள்ளாததற்குக் காரணம் அதிலே அறிவியல் இல்லைபொய்யும் புரட்டும் கொண்டதாக இருப்பதால் அதை ஏற்றுக்கொள்ள வில்லை. 
அறிவியலுக்குப் பொருந்தாத ஜோதிடத்தைப் புகுத்தியவர்கள் பார்ப்பனர்களே. அதை நம்பி ஏமாந்த இளித்த வாயர்களாக வாழ்பவர்கள் தமிழர்களே.

நன்றி:- "விடுதலை" 12-6-2009