Friday, September 30, 2011

காங்கிரசின் பினாமியா அட்வகேட் முனாப்!

கே கே ஹாஜா அவர்களுக்கும் மேலேத்தெரு வாடி (எம் எம் எஸ்) வகையரக்களுக்கும் இரகசிய உடன்படிக்கை

மேலேத்தெரு எம் எம் எஸ் வாடி குடும்பத்தினர் கேட்டுகொண்டதினர்கிணங்க அரசியலில் நூறு வருட பெருமைக்குரிய முஸ்லிம் லீக்கின் அதிரை முக்கிய பொறுப்பாளர் கே கே ஹாஜா அவர்கள் தனக்கு கிடைத்த அதிரை பேருர் ஆட்சி தலைவர் போட்டிக்கான வாய்பை, முன்பு சூல் நிலைக்கு ஏற்ப பல கட்சிகளில் அங்கம் வகித்த தற்பொழுது தன்னை முஸ்லிம் லீக்கில் இணைத்துள்ள அதிரை வழக்கறிஞர் (அப்பாவி ) அப்துல் முனாப் அவர்களுக்கு தனக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்பை வழங்கியதன் மூலம் சம்சுல் இஸ்லாம் சங்கத்திற்கு உட்பட்ட இரண்டு பிரதான கட்சிகளின் வேட்பாளர்களில் ஒருவர் வெற்றிபெற வாய்ப்பு இருப்பதினால் இதனை தடுக்கவேண்டும் என்ற குறுகிய நோக்கோடு இதை கவனத்தில் கொண்டு எம் எம் எஸ் குடும்பத்தினர், அவர்கலுக்கு நெருங்கிய உறவான கே கே ஹாஜா அவர்களை சரிகட்டி நீங்கலும் நம் முஹல்லாவில் நின்றால் நாம் இருவரும் தேர்தலில் தோர்த்து விடுவோம் அந்த வாய்ப்பை நடுத்தெரு சம்சுல் இஸ்லாம் பகுதி உள்ளவர் களுக்கு வழங்கிவிட்டால் நாம் (எம் எம் எஸ் குடும்பத்தினர்) வெற்றிபெற்று விடலாம் நான் வெற்றி பெற்றால் நீங்களும் வெற்றி பெற்றதுவாக இருக்கும் என்று கூறி கே கே ஹாஜா அவர்களை சரிகட்டி உள்ளதாக நம்பதகுங்தா வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.



 இதனால் வழக்கறிஞர் முனாப் அவர்கள் (கே கே ஹாஜா அவர்களை) நம்பி மோசம் போய் விட்டார் என்று நோக்கர்கள் கருதுகின்றனர்.

மேலத்தெரு வாசி நம்மிடையே கூறும் பொழுது 


ஒவ்வொரு சட்ட மன்ற பாராளுமன்ற தேர்தலிலும் காங்கிரஸ் வெற்றி பெற்றதும் எம் எம் எஸ் வாடிக்கு தேவையானதை அல்லது எதிர் பார்த்ததை கவனமா அவர்கள் வாங்கி கொள்கின்றனர். ஆனால் அதற்காக ஓட்டுப் போட்ட மக்களோ கொசுக்கடியையும், சாக்கடை நாற்றத்தையும் நோய் நொடியையும் தனதாக்கிக் கொள்கின்றனர் என்று தாஜுல் இஸ்லாம் சங்கத்திற்கு கட்டுப் பட்டா ஓர் வாசகர் தன் ஆதங்கத்தை பகிர்ந்து கொண்டார்.



இறைநேசன் mohamed 


இப்படி ஒரு செய்தியை மேற்கண்ட நபர் பல வலைத் தளங்களில் பதிவிட்டுள்ளார்.அவர் கூற்று உண்மையோ-பொய்யோ அல்லாஹ் அறிவான்.இதற்கிடையில் சகோதரர் அட்வகேட் முனாப் அவர்கள் அதற்கு மறுப்பு வெளியிட்டுள்ளார்.அதனை கீழே காணவும். 



முஸ்லிம் லீக் கட்சியின் ஆதரவுடன் சுயேட்சையாக சேர்மன் பதவிக்குப் போட்டியிடும் சகோ.அட்வகேட் முனாஃப் அவர்கள் சார்பில் இன்று வெள்ளிக்கிழமை (30-09-2011) அதிரையின் அனைத்து ஜும்ஆ பள்ளிகளிலும் விநியோகிக்கப்பட்ட அறிவிக்கை. அதன் விபரம் வருமாறு:

பேரன்புமிக்க அதிரை நகரப் பெரியோர்களே, வாக்காளப் பெருமக்களே! அஸ்ஸலாமு அலைக்கும்.

இன்ஷா அல்லாஹ், நடைபெறவுள்ள அதிராம்பட்டினம் பேரூராட்சி மன்ற தேர்தலில் தலைவர் பதவிக்கு உங்கள் நல்வாழ்த்துக்களுடன் போட்டியிட எண்ணியுள்ளேன். அதன் வெற்றியை முறியடிக்கும் கெட்ட நோக்கத்தில் சில குழப்பவாதிகள் நான் M.M.S குடும்பத்தினரால் நிறுத்தப் பட்டுள்ளேன் என்றும், இந்த தேர்தலைப் பொறுத்தவரை அவர்களின் பினாமி என்றும் அவதூறு பரப்பி வருகின்றார்கள்.

இது முழுமையான பொய் என்று அல்லாஹ்வின்மீது சத்தியம் இட்டு என்னால் நிரூபிக்க முடியும். எனவே, பொதுமக்கள் வீண் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

நமது ஊர் மக்களின் நன்மையைக் கருதி எந்த குறைபாடுகளும் இல்லாமல் எல்லோரும் வியக்கும் வண்ணம் நம் ஊரின் வளர்ச்சியை செம்மை படுத்த வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் உளத்தூய்மையுடன் அல்லாஹ்விற்காக களம் இறங்கி உள்ளேன்.

உங்களின் மேலான ஒத்துழைப்பை நல்கி வெற்றி பெற உதவிடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

இப்படிக்கு,
A.அப்துல் முனாஃப் B.A.B.L
அட்வகேட் & நோட்டரி பப்ளிக்

சகோதரர்களே அவதூறு குறித்து திருக்குரானும் - நபிகள் நாயகம் ஸல் அவர்களும் பல்வேறு வகைகளில் எச்சரித்துள்ளார்கள்.எனவே மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டுகிறோம்.
அவதூறு சொல்பவர்கள் இந்த லிங்கில் சென்று பார்வை இட வேண்டுகிறோம்.



Thursday, September 29, 2011

மனித நேய மக்கள் கட்சி வேட்பு மனு தாக்கல்


 தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் 17 மற்றும் 19ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது  இந்நிலையில் நெல்லிக்குப்பம் நகர மன்ற உறுப்பினர் பதவிக்கு அப்பகுதி முஸ்லிகள் சார்பிலும் மற்றும் மனித நேய மக்கள் கட்சி சார்பிலும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

நெல்லிக்குப்பம் 22 வது வார்டுக்கு முகமது உசேன், 23 வது வார் டுக்கு முகமது சிராஜ், 8 வது வார்டுக்கு அப்துல் ரஹிம், 4 வது வார்டுக்கு பஷிர் அகமது, 21 வது வார்டுக்கு முஜிபூர் ரகுமான் ஆகியோர் மனு தாக்கல் செய்தனர் மேலும் சுயேட்சை வேட்பாளர்களாக 26 வது வார்டுக்கு அன்சாரி, 24 வது வார்டுக்கு ஜிலானி பேகம், 19 வது வார்டுக்கு ஜூனைதா பேகம் ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
இவர்கள் தமுமுக மாவட்ட செயலாளர் ஷேக்தாவுது தலைமையில் கொத்பாபள்ளிவாசலில் இருந்து புறப்பட்டு, நெல்லிகுப்பம் நகராட்சி அலுவலகத்துக்கு வந்து தேர்தல் அதிகாரியிடம் வேட்பு மனு தாக்கல் செய்தனர்..

Wednesday, September 28, 2011

தீவிரவாதிகளின் சிம்ம சொப்பனம்(!) கேப்டன் விஜயகாந்த்

நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல் முஸ்தீபுகளில் முஸ்லிம் கட்சிகள் எடுத்துள்ள முடிவுகள் பதைக்க வைக்கின்றன. ஏற்கெனவே முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள பகுதிகளைப் பிரித்தும், பெண்களுக்காக, தலித்களுக்காக என ஒதுக்கியும் ஜெயாவும் கருணாவும் அநியாயம் இழைத்து இருக்கும் பகுதிகள்கூட முஸ்லிம்களின் கையைவிட்டுப் போக வைக்க இருக்கும் நிலையில், இம்முறை முஸ்லிம் கட்சிகள் தனித்தனியாக போட்டியிட எடுத்துள்ள முடிவு, உள்ளாட்சி அமைப்புகளில்கூட இருக்கும் ஏதோ ஒரு சில வார்டுகள்கூட இல்லாமலாகும் நிலைக்குக் கொண்டுப் போய் விட்டுவிடுமோ என்று பதைக்க வைக்கிறது.

அம்மா தன் அகங்கார புத்தியினைக் காட்டிக் கூட்டணியினரைக் கழட்டி விட்ட நிலையில், அம்மாவுக்கு எதிராக மூன்றாவது அணி அமைந்திருக்கவேண்டும். கடந்த சட்டப்பேரவை தேர்தலில் கிடைத்த அமோக வெற்றி அம்மாவைத் தலைகால் புரியாமல் ஆட வைத்துள்ளது. அந்த வெற்றி தனக்குக் கிடைத்த வெற்றியல்ல; கருணா குடும்பத்துக்கு மக்கள் கொடுத்த மரண அடி என்பதை இந்த ஃபாஸிஸத்தில் ஊறிப்போன அம்மையார் புரிந்து கொள்ளவில்லை. தேர்தல் வெற்றிக்குப்பின், இரத்தக்காட்டேறி மோடியை அழைத்தது முதல், அந்த மிருகத்தின் கண்துடைப்பு உண்ணாவிரத நாடகத்துக்கு அமைச்சர்களை அனுப்பியதுவரை தெனாவெட்டாக தன்னுடைய ஃபாஸிஸ புத்தியைக் காட்டிவரும் அம்மையாருக்குக் கருணாவுக்குக் கிடைத்த மரண அடியினைப்போன்ற அடியினைக் கொடுக்கவாவது முஸ்லிம் அமைப்புகள் ஒன்றிணைந்து முயற்சிகளை மேற்கொண்டிருக்க வேண்டும்!

ஆனால் நடப்பதோ வேறு!

ஏற்கெனவே திமுக, காங்கிரஸ், பாமக, மதிமுக, புதிய தமிழகம் ஆகியவை தனியாகவும் பாஜக ஒரு அணியாகவும் தேமுதிக ஒரு அணியாகவும் நிற்கும் நிலையில்,

முஸ்லிம் லீக், மமக ஆகியவையும் தனியாக நிற்கிறார்களாம்!

இது யாருக்கு இலாபத்தைக் கொடுக்கும் என்ற சிறு சிந்தனைகூட இவர்களுக்கு இல்லாமல்போய் விட்டதே!

திமுகவுக்குக் கொடுத்த மரண அடியால் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த அம்மையார், திமுகவினரைச் சகட்டு மேனிக்குக் கைது செய்து சிறையிலடைத்தும் தன் அகங்காரத்தை விட்டுக்கொடுக்காமல் சமச்சீர் கல்வி விஷயத்தில் மாணவர்கள் நலனில் விளையாடி, உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் என கோடிகளைச் செலவழித்து வழக்கு நடத்தி இறுதியில் உச்ச நீதிமன்றத்திடமிருந்து கொட்டு வாங்கித் திரும்பியதும் புதிய தலைமை செயலக விஷயத்தில் கோடிகணக்கான மக்கள் வரிப்பணத்தை நாசமாக்கியதன் மூலமும் மக்களிடம் வெறுப்புக்குரியவராக மாறியிருக்கும் நிலையில், அதிமுகவுக்கு எதிராக அனைவரும் தனித்தனியாக பிரிந்து நின்றால் அது அம்மையாருக்கும் பாஜகவுக்கும்தான் பலனை ஏற்படுத்தும் என்பது இவர்களுக்குப் புரியவில்லையா?

அரசியலில் கத்துக்குட்டியான தீவிரவாதிகளின் சிம்ம சொப்பனம்(!) கேப்டன் விஜயகாந்திற்கு இருக்கும் எண்ணம்கூட இந்த முஸ்லிம் கட்சிகளுக்கு இல்லாமல் போனது ஏனோ?

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமா வளவனுக்கு இருக்கும் பரந்த எண்ணம்கூட இந்த முஸ்லிம் கட்சிகளுக்கு இல்லாமல்போனது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது!

சுமார் 14 முஸ்லிம் அமைப்புகள் + 6 கிறிஸ்தவ அமைப்புகளை ஒன்றுகூட்டி அவர்களுடன் கூட்டணி வைத்து களம் காண்கிறார் திருமா. நல்லவேளை, இந்த அணியில் புதிய எஸ் டி பி ஐ கட்சியும் இணைந்துள்ளது. 
இப்போதைய அரசியல் நிலையில், இந்த அணிக்கு வெற்றி கிடைக்கிறதோ இல்லையோ, ஆனால் இவர்களின் செயல்பாடே சிறிதாவது சிறுபான்மையினர் நலனில் அக்கறை கொண்ட செயல்பாடாக எனக்குத் தோன்றுகிறது.

அம்மாவின் அணியிலிருந்து வெளியேறி தனித்து நிற்கும் மமகவின் அணுகுமுறை, அம்மாவுடன் அண்டர் கிரவுண்ட் அட்ஜஸ்ட்மெண்ட் நடத்தியிருக்குமோ என்ற எண்ணத்தையே ஏற்படுத்துகிறது. ஏனெனில், இவர்கள் தனித்து நிற்பதால், அதன் பலன் நிச்சயம் அம்மையாருக்கும் பாஜகவுக்கும்தான் கிடைக்கும் என்பது வெளிப்படை.

மமக மற்றும் முஸ்லிம் லீக் ஆகிய இரு கட்சிகளும் திருமாவுடன் இணையட்டும். இல்லையேல் இந்தத் தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கியிருக்கட்டும். அல்லாமல், முஸ்லிம்கள் வெற்றிபெற வாய்ப்புள்ள பகுதிகளில் தங்கள் வேட்பாளர்களையும் களமிறக்கி, அதிமுக, பாஜக, திமுக, தேமுதிக என வேறு யாராவது வெற்றிபெற வழிவகுத்தால் அதனை இச்சமுதாயம் ஒருபோதும் மன்னிக்காது!

என் எண்ணத்தில் ஏதாவது பிழைகள் இருப்பின் சகோதரர்கள் சுட்டிக்காட்டுங்கள். திருத்திக் கொள்கிறேன்.

- அப்துர் ரஹ்மான்

Sunday, September 25, 2011

குடிப் பழக்கத்தை ஒழிக்க இஸ்லாம் கூறும் தீர்வு


குடிப் பழக்கத்தை ஒழிக்க இஸ்லாம் கூறும் தீர்வு

படிப்படியாக ஒழிக்கப்பட்ட போதை

புகை மற்றும் போதை

ஆல்க்கஹால் கலந்த மவுத்வாஷ் பயன்படுத்தலாமா ?

டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் பீர்பிராந்தி பாட்டில்களில் கரப்பான் பூச்சிவண்டுசிகரெட் துண்டுபான்பராக் பாக்கெட்அட்டை துண்டு உள்ளிட்டவை மிதப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.

திருவள்ளூர் மாவட்டத்தில் 350க்கும் அதிகமான டாஸ்மாக் கடைகள் உள்ளன. திருவள்ளூரை அடுத்த  காக்களூர் அரசு குடோனில் இருந்து திருவள்ளூர்திருத்தணிபள்ளிப்பட்டுபொன்னேரி,கும்மிடிப் பூண்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளுக்கும் திருமழிசை குடோனில் இருந்து பூந்தமல்லிஆவடிஅம்பத்தூர்மாதவரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் மதுபானங்கள் சப்ளை செய்யப்படுகிறது. டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மது சுத்தமாக இல்லை. பீர்பிராந்தி பாட்டில்களில் கரப்பான் பூச்சிவண்டுசிகரெட் துண்டுபான்பராக் பாக்கெட்அட்டை துண்டு உள்ளிட்டவை மிதப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.

டாஸ்மாக் கடைகளில் உள்ள பார்களில் காலி மதுபாட்டில்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளது. பார்கள் சுத்தமாக இருப்பதில்லை. துர்நாற்றம் வீசுகிறது. காலி டம்ளர்மது பாட்டில்கள் கண்ட இடங்களில் கிடக்கிறது. பார்களில் நடமாடும் கரப்பான் பூச்சிபல்லிஎறும்பு போன்றவை காலி பாட்டில்களில் புகுந்து விடுகின்றன. அந்த பாட்டில்கள் மதுபானம் தயாரிக்கும் கம்பெனிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. மதுபானம் தயாரிக்கும் கம்பெனிகள்பாட்டில்களை சுத்தம் செய்யாமல் அதில் மீண்டும் மதுபானங்களை நிரப்பி கடைகளுக்கு சப்ளை செய்கிறார்கள். பெரும்பாலானோர் இதை கவனிக்காமல் மதுவை குடிக்கிறார்கள். இதனால் கடுமையான நோயால் பாதிக்கப்படுகிறார்கள்.

திருவள்ளூரில் உள்ள டாஸ்மாக் கடையில் சுந்தரம் என்பவர்நேற்று பிராந்தி வாங்கியுள்ளார். அதில் அட்டை துண்டு மிதந்து கொண்டிருந்தது. இது குறித்து டாஸ்மாக் கடை ஊழியர்களிடம் கேட்டதற்கு அவர்கள் அலட்சியமாக பதில் கூறியுள்ளனர்.  


Tuesday, September 20, 2011

அவர் அக்கூட்டத்தைச் சேர்ந்தவரே


நபி(ஸல்) அவர்களைப் பின்பற்றுமாறு ஏவப்பட்ட முஸ்லிம்கள் மாற்று மதத்தவர்களைப் பார்த்து, அவர்கள் செய்வது போன்று செய்கின்றனர். அவர்களைக் கண்மூடிப் பின்பற்றுகின்றனர். இதுவும் பித்அத் தோன்றவும், வளரவும் காரணமாக அமைகின்றது.
 
கிறிஸ்தவச் சகோதரர்கள் இயேசு பிறந்த தினத்தைக் “கிறிஸ்மஸ்” என்ற பெயரில் கொண்டாடுகின்றனர். இதைப் பார்த்த முஸ்லிம்கள் கிறிஸ்தவர்கள் ஈஸா நபியின் பிறந்த தினத்தைக் கொண்டாடும் போது, நாம் முஹம்மத்(ஸல்) அவர்களது பிறந்த தினத்தைக் கொண்டாடாது இருக்கலாமா? எனச் சிந்தித்து “மீலாது-மவ்லித் விழாக்களைக் கொண்டாடி வருகின்றனர்.
 
இலங்கை முஸ்லிம்களின் மார்க்க நடைமுறைகளில் தென்னிந்திய முஸ்லிம்களின் தாக்கம் அதிகமாகும். தென்னிந்திய முஸ்லிம்கள்  இந்து சமூகத்தின் மார்க்க நடைமுறைகளை அவதானித்தனர். பொழுது போக்கிற்காகவும், கலை ஆர்வத்திலும் அவர்கள் செய்த அனைத்தும் இவர்களும் சில அறபுப் பெயர்களைச் சூட்டிச் சின்ன சின்ன மாற்றங்களுடன் செய்தனர். அவற்றுக்கு இஸ்லாமிய சாயமும் பூசினர். முஸ்லிம்கள் கோயில்களுக்கும், இந்து மத வழிபாடு நடக்கும் இடங்களுக்குச் சென்று விடாமலிருப்பதற்காக இவற்றை உருவாக்கியதாகக் காரணமும் கூறிக் கொண்டனர்.ஆனால், இன்று இஸ்லாத்திற்கு முரணான இந்து சமயத் தாக்கத்தின் காரணத்தால் தோற்றுவிக்கப்பட்ட சடங்கு-சம்பிரதாயங்களை அகற்றுவதே பெரும் சிரமமாக மாறியுள்ளது.
 
ஒரு கவிஞன் கூறும் போது;
“சடங்கு-சம்பிரதாயங்கள் சட்டைகளாகவே சமூகத்தில் அணியப் பட்டன! காலப்போக்கில் அவை அட்டைகளாக மாறி, இரத்தம் குடிக்கக் கற்றுக் கொண்டன!” என்று கூறிய கூற்று சமூகத்தின் நிதர்சன நிலையாகி விட்டது.
 
அந்நியர்களைப் பின்பற்றுவது எமது சிந்தனையிலும், நடத்தையிலும் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தக் கூடியதாகும். எனவே, இது குறித்து நாம் விழிப்பாக இருக்கக் கடமைப்பட்டுள்ளோம்.அபூவாகித் அல்லைத்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்; “நாம் இஸ்லாத்தை ஏற்ற புதிதில் நபி(ஸல்) அவர்களுடன் ஹுனைன் போருக்காகப் போய்க்கொண்டிருந்தோம். (இவர்கள் மக்கா வெற்றியின் போது இஸ்லாத்தில் இணைந்தவர்கள்.)
நாம் ஒரு மரத்தைக் கடந்து சென்றோம். காஃபிர்கள் ஒரு இலந்தை மரத்தைப் புனிதமாகக் கருதி வந்தனர். அதற்குத் “தாது அன்வாத்” என்பது பெயராகும்.
 
இந்த மரத்திற்குக் கீழே இஃதிகாஃப் இருந்தனர். போருக்குப் போகும் போது இந்த மரத்தில் வாலைக் கொழுகி வைத்து விட்டு எடுத்துச் செல்வர். (அப்படிச் செய்தால் போரில் வெற்றி பெறலாமென்பது அவர்களது நம்பிக்கையாகும்.)
எனவே நாம் நபி(ஸல்) அவர்களிடம், “அவர்களுக்கு “தாது அன்வாத்” என்ற மரம் இருப்பது போல், எமக்கும் ஒரு “தாது அன்வாத்” என்ற மரத்தை ஏற்படுத்துங்கள்!” என நபி(ஸல்) அவர்களிடம் நாம் கேட்டோம்.
 
இது கேட்ட நபி(ஸல்) அவர்கள், “அல்லாஹு அக்பர்! (அல்லாஹ்வே மிகப் பெரியவன்!) எனக் கூறிப் பின்னர், “பனூ இஸ்ராயீலர்கள் மூஸா நபியிடம் கேட்டது போல் நீங்களும் என்னிடம் கேட்டுள்ளீர்கள். (நாம் கேட்டது பெரிய தவறு என உணர்த்தினார்கள்.)
அப்போது தமது சிலைகளுக்கு வழிபாடு செய்துகொண்டிருக்கும் ஒரு கூட்டத்தாரிடம் அவர்கள் வந்தனர். (அவ்வேளை), அவர்கள், “மூஸாவே! அவர்களுக்குப் பல கடவுள்கள் இருப்பது போல் எமக்கும் ஒரு கடவுளை ஏற்படுத்துவீராக!” என்று கேட்டனர் (7:138) என்ற குர்ஆன் வசனத்தை ஓதிக் காட்டிய பின்னர் உங்களுக்கு முன்பிருந்தவர்களது வழிமுறைகளை நீங்கள் பின்பற்றுவீர்கள்!” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதி 2180)மேற்படி வசனமும், ஹதீஸும் அந்நியர்களைப் பின்பற்ற முற்படுவது மார்க்கத்திலில்லாத பல வழிபாடுகள் உருவாவதற்கும், சமூகங்களின் அழிவுக்கும் காரணமாக அமையுமென்பதைத் தெளிவுபடுத்துகின்றது.
 
பனூ இஸ்ராயீலர்கள் காஃபிர்களைப் பார்த்து விட்டு, அவர்களுக்குப் பல சிலைகளிருப்பது போல் கண்ணால் பார்த்து வணங்கப்படுவதற்கு எமக்கும் ஒரு சிலையிருந்தால் நல்லது! என எண்ணியுள்ளனர்.இவ்வாறே, புதிதாக இஸ்லாத்தையேற்ற சில நபித் தோழர்கள் காஃபிர்களுக்கு இருப்பது போல் எமக்கும் பறக்கத் பெற ஒரு மரமிருந்தால் நல்லது! என எண்ணியுள்ளனர்.
 
அவர்களது இந்தத் தவறான கேள்விக்குக் காஃபிர்கள் போன்று எம்மிடமும் ஏதாவது இருக்க வேண்டுமென்ற எண்ணம் தான் காரணமாக இருந்தது.இதே எண்ணம்தான் மீலாது-மவ்லீது, கத்தம்-கந்தூரி போன்ற விழாக்களையும், கப்று வழிபாடு, உருவ வழிபாடு, கொடி வழிபாடு போன்ற ஷிர்க்குகளையும் இந்தச் சமூகத்தில் தோற்றுவித்துள்ளது.
 
மற்றுமொரு அறிவிப்பில் அபூஸைதுல் குத்ரீ(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்;
“உங்களுக்கு முன்பிருந்தவர்களைச் சாணுக்குச் சாண், முழத்துக்கு முழம் நீங்கள் பின்பற்றுவீர்கள்! அவர்கள் ஒரு உடும்பு பொந்தில் நுழைந்தாலும், (அதிலும்) நீங்கள் அவர்களைப் பின்பற்றுவீர்கள்!” என நபி(ரலி) அவர்கள் கூறினார்கள். அப்போது (எமக்கு முன்பிருந்தவர்கள் என்றால்) “யூதர்களையும், நஸாராக் களையுமா குறிப்பிடுகின்றீர்கள்?” என நாம் கேட்ட போது, “(அவர்களல்லாமல்) வேறு யாரை?” என நபி(ரலி) அவர்கள் கேட்டார்கள். (புகாரி 7320, முஸ்லிம் 2669)
 
இந்த ஹதீஸ் தவறு செய்வதிலும், ஆதாரத்திற்கு முரணாக நடப்பதிலும் முஸ்லிம்கள் எவ்வளவு தீவிரமாக வழிகெட்ட யஹூதி-நஸ்றானிகளின் வழிமுறைகளைப் பின்பற்றுவார்கள் என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.எனவே, யூத-கிறிஸ்தவ வழிமுறைகளை இஸ்லாமிய ரூபத்தில் முஸ்லிம் சமூகத்தில் நுழைப்பவர்கள் குறித்து நாம் விழிப்பாக இருக்க வேண்டும். ஸுன்னாவை ஆதாரத்தின் அடிப்படையில் பின்பற்றுவதில்தான் உறுதியாக இருக்க வேண்டும்.இதில் நாம் சற்றுக் கவனயீனமாக இருந்தாலும், ஷைத்தான் எம்மை வழிகேட்டில் தள்ளி விடுவான் என்பது குறித்துக் கவனமாக இருக்க வேண்டும்.
 
எனவே, குஃப்ஃபார்களின் வழிமுறைப் பின்பற்றுவதை நாம் தவிர்க்க வேண்டும். நாம் அவர்களுக்கொப்பாக நடப்பதற்கும் முற்படக் கூடாது.
“யார் எக்கூட்டத்திற்கு ஒப்பாகின்றாரோ, அவர் அக்கூட்டத்தைச் சேர்ந்தவரே!” ..........(அஹ்மத்) என்ற ஹதீஸைக் கவனத்திற்கொண்டு செயற்படுவோமாக! 
 
 
அல்லாஹ்வின் சாந்தியும், சமாதானமும் நம் மீதும் நம் குடும்பத்தார்கள் மீதும் உண்டாவதாக... உங்களுக்கும் எங்களுக்கும் அல்லாஹ் நேர்வழியை என்றென்றும் காட்டி அதில் நாம் நிலைத்திருக்க அவனிடத்தில் மட்டுமே துஆ செய்து கொள்வோம். 

மதவெறியை தூண்டி மத நல்லிணக்கத்தை எவ்வாறு சீர் குலைப்பது


அமைதிஒற்றுமை மற்றும் சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி 72மணிநேர உண்ணா விரதத்தை குஜராத் முதல்வர் நரேந்திரமோடி மேற்கொண்டுள்ளதை பத்திரிகைகள் பரபரப்பு செய்தியாக வெளியிட்டுக் கொண்டிருகின்றன.

அண்ணா ஹசாரேவை அம்போவென்று விட்டு விட்டு மோடி பக்கம் பல்டி அடித்து விட்டன பார்ப்பனப் பத்திரிகைகள்.

குஜராத் அமைதி இழந்து சமூக நல்லிணக்கம் கெடுவதற்கு வேறு யாராவது காரணமாக அமைந்து அதற்காக மோடி உண்ணாவிரதத்தை மேற்கொண்டால் உலகம் இவரது உண்ணாவிரதத்தை ஏற்றுக் கொள்ளும்.

காந்திப் பிறந்த மண்ணை சிறுபான்மை அப்பாவி முஸ்லீம்களின் இரத்தத்தால் தோய்த்து கலங்கப்படுத்திய கொலை வெறியன் இன்று சமூக நல்லிணக்கத்திற்காக உண்ணாவிரதம் இருக்கிறேன் என்றுக் கூறுவது  அதுவும் பத்தாயிரம் முஸ்லீம்களுடன் வேஷம் என்று உலகுக்குத் தெரியாதா ?

இந்த லட்சனத்தில் இது மதநல்லிணக்கத்திற்கு உலகுக்கே எடுத்துக்காட்டாம் ??? உலறுகிறது தினமலர். 

மதவெறியை தூண்டி மத நல்லிணக்கத்தை எவ்வாறு சீர் குலைப்பது  என்பதை குஜராத்தில் நிகழ்த்தி உலக சியோனிஸ்டுகளுக்கு மோடி க்ளாஷ் நடத்தியதை அவ்வளவு எளிதில் உலகம் மறந்திருக்கும் என்று நினைத்து விட்டதா தினமலர். 
  
நான் மட்டும் முதல்வராக இஇருந்திருக்க வில்லை  என்றால் இந்நேரம் நானே முஸ்லீம்களின் மீது குண்டுகளை வீசி கொன்றொழித்திருப்பேன் முதல்வர் பதவி என்னைத் தடுக்கிறது என்றுக் கூறி சங்பரிவார குண்டர்களுக்கு கொலைவெறி ஊட்டியதையயும்குஜராத்தின் காவல்துறை உயரதிகாரிகளுடன் ரகசிய அமர்வுக்கு ஏற்பாடு செய்து அதில் இரண்டு நாட்கள் சங்பரிவார குண்டர்களின் அட்டூழியத்தை கண்டுகொள்ள வேண்டாம் என்றும் மூன்றாவது நாள் என் பதவியை தக்கவைத்துக் கொள்வதற்காக கட்டுப்படுத்தி விடுங்கள் என்றுக் கூறி உத்தரவிட்டதையும் தெஹல்கா மோடியின் ஒரிஜினல் நரபலி முகத்தை தோலுரித்து உலகுக்குக் காட்டியதை  அவ்வளவு சீக்கிரம் உலகம் மறந்திருக்கும் என்று நினைத்து விட்டதா தினமலர்.    

பத்தாயிரம் அல்ல பத்து லட்சமும் அல்ல பத்து கோடி முஸ்லீம்களை திரட்டி பிரம்மாண்டமான சமூக நல்லிணக்க மாநாட்டை மோடி நடத்தினாலும் 2002ல் முஸ்லீம் பெண்களின் மீதான கற்பழிப்புகள் மற்றும் படுகொலைகளினால் மோடியின் மீது விழுந்த கொலை வெறியன் என்ற கரும் புள்ளி கரையவே கரையாது. குறைந்த பட்சம் நரேந்திர மோடி என்றப் பெயர் நரபலி மோடியாக மாறியதுக் கூட மீண்டும் நரேந்திர மோடியாக மாறுவது கஸ்டம்.

காக்கை எத்தனை தான் விழுந்து விழுந்து குளித்தாலும் கொக்காக மாற முடியாது என்பதை மோடியும்மோடியை ஆஹாஓஹோ வென்று தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடும் பார்ப்பன பத்திரிகைகளும் விளங்கி கொள்ளட்டும்.

இந்தியாவின் மதசார்பின்மையை குழி தோண்டிப் புதைத்து உலக அரங்கில் இந்தியாவை தலைகுணியச் செய்த கயவர்கள் ஒன்று விடாமல் துடைத்தெறியப்படாத வரை இந்தியாவில் அமைதிஒற்றுமைமற்றும் சமூக நல்லிணக்கத்தை ஒருக்காலும் நிலை நாட்டவே முடியாது.

முஸ்லீம்களின் பங்கு
குஜராத்தின் ஐந்து மண்டலங்களிலிருந்து தலா இரண்டாயிரம் முஸ்லீம்களை கொண்டு வந்து சேர்ப்பதை குஜராத் சிறுபான்மை அமைப்புத் தலைவர் தன்வீர் சேட்டிடம் பொறுப்பை ஒப்படைத்து கவனிக்க வேண்டிய முறையில் அவரை கவனித்ததால் அவர் முஸ்லீம்களிடம் சென்று 2002 நிகழ்வுகளை நினைவுபடுத்தி வலுக்கட்டாயமாக கொண்டு வந்து சேர்த்துள்ளார் என்பதுவே நிதர்சனமான உண்மை.

காரணம் 2002  முஸ்லீம்களின் படுகொலைக்குப் பிறகு நடந்த சட்டமன்ற தேர்தலிலும் கூட அதிக வாக்குகுள் முஸ்லீம் தொகுதிகளில் மோடிக்குவிழுந்ததாக தகவல் அப்பொழுதே வெளியாகின அந்த ஓட்டுகள் விழுந்தவைகள் அல்ல விழ வைத்தவைகள் என்பது உலகுக்கேத் தெரியும் இதிலிருந்தே மேல்படி நாடக அரங்கில் கலந்து கொண்ட முஸ்லீம் ஆண்,பெண்கள் அனைவரும் தாமாக பங்கேற்க வில்லைபங்கேற்க வைத்துள்ளனர். 

விரும்பினால் வரலாம் என்று மட்டும் கூறி இருந்தால் தன்வீர் சேட் கூட நாடக மேடையில் கலந்திருக்க மாட்டார்.

அனைவருக்கும் நீதி ?
எனது மாநிலத்தில் அனைவருக்கும் சமநீதி கிடைக்க நான் பாடுபடுகிறேன். நாட்டில் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஏற்படும் வலியை என்னுடையதாக உணர்கிறேன். இதனால் இந்த விரத போராட்டத்தை துவக்குகிறேன் என நாகூசாமல் புளுகி உள்ளார் நாடக அரங்கில் மோடி.

2002 கலவரத்திற்கு முன்பும்பின்பும் முஸ்லீம்கள் குஜராத் அரசு அதிகாரத்தில் எத்தனை பேர் அமர்த்தப்பட்டுள்ளனர் குஜராத்தில் மோடியின் ஆசீர்வாதத்துடன் இயங்கும் பிரபல கம்பெனிகளில் எத்தளை முஸ்லீம்கள் உயர் பெறுப்பில் அமர்த்தப் பட்டுள்ளனர் 

2002ன் கலவரத்தில் வீடு வாசல்களை இழந்து அனாதை ஆஸ்ரமங்கிளில் அடிப்படை வசதிகள் இல்லாமல் பல வருடங்கள் அனாதைகளாய் கிடந்து அல்லல் பட்ட முஸ்லீம்களில் எத்தனை ஆயிரம் பேருக்கு மீண்டும் வாழ்வாதார வசதிகளை செய்து கொடுத்தார் என்றப் புள்ளி விபரங்களை வாசித்துக் காட்டி விட்டு மேற்காணும் அனைவருக்கும் சமநீதி கிடைக்க நான் பாடுபடுகிறேன். என்றுக் கூறி இருந்தால் திருந்தி இருக்கிறார் என்று நம்பலாம் ?


ஏன் இந்த திடீர் ட்ராமா ?
அண்ணா ஹசாரேவின் உண்ணாவிரதத்தை உலக சாதனையைப் போல் பத்திரிகைகள் எழுதி வருவதைக் கண்ட மோடி வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் பதவிக்கு தன்னுடையப் பெயரும் அடிப்பட்டு வருவதை அறிந்த  மோடி ஓட்டுக்காக நாக்கை தொங்கப் போட்டுக் கொண்டு முஸ்லீம்களிடம் வாலாட்டிக் கொண்டு வரவிருக்கிறார். அது தான் இந்த உண்ணாவிரத நாடகம் புரிந்து  கொள்பவர்கள் தெளிவாகப் புரிந்து கொள்வார்கள்.

நரபலி மோடியின் நாடக மேடை கூடுதல் கலை கட்டுவதற்காக தமிழகத்திலிருந்தும் ஜெயலலிதா தனது பிரதிநிதிகைளை அனுப்பி உள்ளதாக தகவல். அனுப்பவில்லை என்றால் தான் ஆச்சரியம் .   

அவர்களின் உள்ளங்களில் நோய் இருக்கிறது. அல்லாஹ்வும் அவர்களுக்கு நோயை அதிகமாக்கி விட்டான். பொய் சொல்வோராக இருந்ததால் அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு.2:10

''பூமியில் குழப்பம் செய்யாதீர்கள்!'' என்று அவர்களிடம் கூறப்படும் போது''நாங்கள் சீர்திருத்தம் செய்வோரே'' எனக் கூறுகின்றனர்.2:11

கவனத்தில் கொள்க! அவர்களே குழப்பம் செய்பவர்கள்எனினும் உணர மாட்டார்கள்.2:12

Sunday, September 18, 2011

முன்மாதிரி கிராமம்- வி.களத்தூர்


வரதட்சணை என்ற கொடி நோயை விரட்டி நாட்டிற்கே நல்ல முன் மாதிரியாகவும் பல ஊர்களுக்கும் முன்னோடியாக விளங்கி வருவது பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த வி.களத்தூர் கிராமம்.

1999-லேயே வி.களத்தூரில் வரதட்சணை ஒழிப்புக்கான கருத்தாய்வு செய்யபட்பட்டு இதற்கான முன்வடிவை ஐமாஅத் ஒருங்கிணைந்த வி.களத்தூர் முஸ்லிம் பொதுமக்கள் கொண்டுவந்தனர். இது பலவிதமான பரீட்சார்த்த முறைகளை கண்டறிந்து சோதனைக் காலமாக இரண்டு வருடம் நடைமுறைப்படுத்திää பின் இறுதிகட்ட வடிவைக் கண்டது. இறுதிக் கட்டவடிவை ஒரு சட்ட நூலைப் போல் உண்டாக்கி அதை வி.களத்தூர் முஸ்லிம்கள் அனைவர்களுக்கும் விநியோகித்தனர். அதன் பிறகு வரதட்சணை எனும் கொடிய நோய் அல்லாஹ்வின் அருளால் வி.களத்தூரிலிருந்;து விரட்டியடிக்கப்பட்டு விட்டது.

திருமணத்தின்போதே வரதட்சணை வாங்கவோ கொடுக்கவோ இல்லை என்றும் இனியும் வாங்கவோ கொடுக்கவோ மாட்டோம்  என்றும் அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு உறுதிமொழி வாங்கிவிடுகின்றனர்.

நிச்சயதார்த்த நிகழ்ச்சி; தேநீர் பிஸ்கட்டுடன் எளிமையான முறையில் நடைபெற முறைப்படுத்தப்பட்டுள்ளது. பெண் அழைப்புதிருமணத்திற்கு பிறகான விருந்து போன்ற இன்னபிற ஆடம்பர செலவினங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இப்போது அங்கே பெண் கொடுப்பதும் வாங்குவதும் எளிதாகிவிட்டது. இவ்வூரின் சமுதாய சீர்திருத்தத்தைக் கண்ட பெரம்பலூர் மாவட்டத்தின் பிற ஊர்களும் நடைமுறைப் படுத்திவருகின்றனர். அங்கும் வரதட்சனை ஒழிப்பு நூல் வெளியிடப்பட்டு பொதுமக்களிடம் பிரச்சாரம் செய்யப்படுகிறது என்பது வி.களத்தூர் ஐமாஅத் மற்றும் இளைஞர்களின் முயற்சிக்குக் கிடைத்த மாபெரும் வெற்றியாகும்.

இவை அனைத்தும் வி.களத்தூரில் நடைமுறையில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு
வருகிறது.  தற்போது ரமளானில் இருந்து  ஜகாத் பவுண்டேஷன் செயல் பட துவக்கியுள்ளார்கள்.இந்நடைமுறைகள் அனைத்து ஜமாஅத்களிலும் செயல்படுத்தபட வல்ல அல்லாஹ்விடம் இருகரம் ஏந்தி துஆ செய்தவனாக வி.களத்தூர் ஜமாஅத்தினர்களையும் எமது திருபுவனம் வலைதளம் சார்பாக பாராட்டுகிறேன்.

தனக்கு என்று வாழ்வதைவிட நமக்கு என்று வாழ்வது சிறப்பு, அதனினும் நம் சுற்றத்தாரின் துயர் துடைக்க பொதுநலனுக்காக வாழ்வது சிறப்பு. அந்த நல்ல சிந்தனையை மனதில் கொண்டு நமதூர் சகோதரர்களால் வி.களத்தூர் ஜக்காத் பவுண்டேஷன் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஜக்காத் பவுண்டேஷன் நமதூரில் ஒரு புதிய புரட்சி ஒன்றை மலரச்செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்ஷா அல்லாஹ்…
இந்த ஜக்காத் பவுண்டேஷன் அமைப்பதற்காக கடந்த வாரம் புஷ்ரா, ஐஎம்சிடி மற்றும் பொதுச்சேவையில் நாட்டம் உள்ளவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அழைப்பினை ஏற்று அனைவரும் வருகை தந்தனர். வெள்ளிக்கிழமை (05.08.2011) இரவு துபை பிஸ்மில்லா ரூம் மாடியில் கூட்டம் நடந்தது. சிறப்பு மிக்க இந்த கூட்டத்தில் வி.களத்தூர் ஜக்காத் பவுண்டேஷன் என்ற அமைப்பு உறுவாக்கப்பட்டு கீழ்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டது.
இந்த ஜக்காத் பவுண்டேஷன் மூலமாக நமதூர் மக்களிடம் அவர் அவர்களின் ஜக்காத் தொகை மற்றும் சதக்காவினை வசூல் செய்து நமதூரில் மிகவும் பின்தங்கிய குடும்பங்களுக்கு கொடுத்து அவர்களை ஏழ்மையில் இருந்த வெளிவரச்செய்வது இதன் முக்கிய நோக்கமாகும். இந்த அரவனைப்பின் மூலம் அடுத்த அடுத்த ஆண்டுகளில் அவர்கள் மற்றவர்களுக்கு ஜக்காத் தரக்கூடிய சூழலை உருவாக்க நாடியுள்ளது. இன்ஷா அல்லாஹ்..
இந்த ஜக்காத் பவுண்டேஷன் பற்றி உங்களுக்கு சில கேள்விகள் தோன்றும் அதாவது முதலில் நமது சொந்த பந்தங்களுக்கு ஜக்காத் கொடுப்பது தானே சிறப்பு. இந்த அமைப்பிற்கு நாம் நம்முடைய ஜக்காத் தொகையை கொடுத்துவிட்டால் ஜக்காத் வாங்குவதற்காக நமது வீடு தேடி வரும் நமது சொந்த பந்தங்களுக்கு என்ன செய்வது, அவர்களுக்கு எப்படி இல்லை என்று சொல்வது, நாம் கொடுக்கும் தொகையை நமது சொந்த பந்தங்களுக்கு கொடுப்பார்களா? என்று என்ன தோன்றும். ஜக்காத் தொகையை நமது சொந்த பந்தங்களுக்கு தான் கொடுக்க வேண்டும் அது தான் சிறந்ததும் ஆகும். ஆனால் நீங்கள் கொடுக்கும் சிறு தொகையை வைத்து அவர்களுக்கு அன்றாட வாழ்விற்குத்தான் சரியாக இருக்கும். அதுவே அனைத்து ஜக்காத் தொகையும் ஒன்றாக இனைத்து கொடுக்கும் போது அது அவர்களின் வாழ்வாதாரத்திற்கும் உதவுவதோடல்லாமல் ஏழ்மையில் இருந்து விடு பட ஏதுவாக இருக்கும்.
அதற்காக இதுவரைவந்து ஜக்காத்தை வாங்கி சென்றவர்களிடம் இல்லை என்று சொல்ல வேண்டாம். அவர்களுக்கும் கொடுங்கள் உங்களுடைய ஜக்காத் தொகையில் ஒரு குறிப்பிட்ட பகுதியை அல்லது சதக்காவாக நமது ஜக்காத் பவுண்டேஷனுக்கு கொடுங்கள். இந்த வருடம் நாம் செய்ய இருக்கும் வினியோக முறைகளைப் பார்த்து அடுத்தடுத்த வருடங்களில் ஜக்காத் தொகை கூடுதலாக வரும்போது நமதூரை எழைகளே இல்லாத ஊராக மாற்றலாம். இது சற்றென்று முடியும் காரியமல்ல என்பது எல்லோருக்கும் தெரியும் சில வருடங்கள் ஆகலாம் ஆனால் மாற்ற முடியும் ஆண்டவன் உதவியுடன்.
நீண்ட, நெடிய ஆலோசனைகளுக்குப் பிறகு இந்த ஜக்காத் பவுண்டேஷன் நிறுவப்பட்டுள்ளது. இது எந்த ஒரு சேவை அமைப்பையும் சார்ந்ததல்ல நமதூருக்கு பொதுவானது. நமதூரின் சேவை அமைப்புகளின் பிரதிநிதிகளையும் பொதுச்சேவை மணம் கொண்டவர்களையும் மார்க்க ஆலோசனைகளுக்காக ஆலிம்களையும் இனைத்து நமதூருக்காக துவக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் வசூல் செய்யப்படும் அனைத்து ஜக்காத் மற்றும் சதக்காக்களை முறையாக வினியோகம் செய்ய இருக்கிறார்கள். வரவு செலவுகள் முறையாக ஆடிட்டிங் செய்யப்பட்டு அறிவிக்கப்படும்.
இந்த வி.களத்தூர் ஜக்காத் பவுண்டேஷன் தலைவராக மௌலவி. எம்.ஹெச். நூருல்லாஹ், அவர்கள் செயல்படுவார்கள். துபையில் ஜனாப். எப். அலிராஜா, ஜனாப். சேட் சர்புதீன் (வி.களத்தூர் துபை சங்க துணை தலைவர்) சகோதரர் பி. அஹமது அலி (தலைவர் ஐஎம்சிடி), எப். அப்துர் ரஹ்மான் (பொருளாளர் புஷ்ரா சேவை அமைப்பு) ஆகியோர் நிர்வாகிகளாக செயல் படுவார்கள்.
2:277 إِنَّ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ وَأَقَامُوا الصَّلَاةَ وَآتَوُا الزَّكَاةَ لَهُمْ أَجْرُهُمْ عِندَ رَبِّهِمْ وَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ
2:277. யார் ஈமான் கொண்டு, நற் கருமங்களைச் செய்து, தொழுகையை நியமமாகக் கடைப் பிடித்து, ஜகாத்தும் கொடுத்து வருகிறார்களோ, நிச்சயமாக அவர்களுக்கு அவர்களுடைய இறைவனிடத்தில் நற்கூலி இருக்கிறது; அவர்களுக்கு அச்சமுமில்லை அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.
1403. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ் யாருக்கேனும் செல்வதைக் கொடுத்து அவன் அதற்கான ஜகாத்தை நிறைவேற்றவில்லையாயின் கியாமத் நாளில் அச்செல்வம் கடுமையான நஞ்சுடைய பாம்பாக மாறும். அது அவனுடைய கழுத்தில் சுற்றிக் கொண்டு தன்னுடைய இரண்டு விஷப் பற்களால் அவனுடைய தாடையைக் கொத்திக் கொண்டே, ‘நானே உன்னுடைய செல்வம்” ‘நானே உன்னுடைய புதையல்” என்று கூறும்.”
இதைக் கூறிவிட்டு, ‘அல்லாஹ் தன் அருளினால் தங்களுக்குக் கொடுத்திருக்கும் பொருட்களில் உலோபித்தனம் செய்கிறவர்கள் அது தமக்கு நல்லதென எண்ணவே வேண்டாம். அவ்வாறன்று! அது அவர்களுக்குத் தீங்குதான்; அவர்கள் உலோபித்தனத்தால் சேர்த்துவைத்த (பொருள்கள்) எல்லாம் மறுமையில் அவர்கள் கழுத்தில் அரிகண்டமாக போடப்படும்.” என்ற (திருக்குர்ஆன் 03:180) வசனத்தை ஓதினார்கள்.
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஆதாரம் : ஸஹீஹ் புஹாரி 1403
உங்களுடைய ஜக்காத் தொகை கீழ்கண்ட நபர்களிடம் கொடுக்கவும்.
துபை
1. எப். அலிராஜா மொபைல் – 050 6523501
2. சேட் சர்புதீன் மொபைல் – 055 9828616
3. பி. அஹமது அலி மொபைல் – 050 5848935
4. எப். அப்துர் ரஹ்மான் மொபைல் – 050 6402386
அபுதாபி
1. நூருல் ஹக் மொபைல் – 050 5660780
2. கெ. அப்துல் ஹக்கீம் மொபைல் – 050 3440786
3. எம். ஜாபர் சாதிக் மொபைல் – 050 7565955
ராசல் கைமா
1. ஜெ. பாருக் மொபைல் – 055 4434452
2. எஸ். சாதிக் பாஷா மொபைல் – 050 3230329
சார்ஜா
1. எ. சேக் தாவுத் மொபைல் – 055 4813518
சவுதி அரேபியா
1. பி. அப்துல் காதர் மொபைல் – +966558930403
2. நூர் முஹம்மது மொபைல் – +966595957492
கத்தார்
1. அப்துல் சுபஹான் மொபைல் – +97455201235
குவைத்
1. முஹம்மது யூனுஸ் மொபைல் – +96597239359
பஹ்ரின்
1. அன்ஸர் பாஷா மொபைல் – +97339774852
தாங்கள் எந்த நாட்டில் இருக்கின்றீர்களோ அந்தந்த நபர்களை தொடர்பு கொண்டு உங்களின் ஜக்காத் தொகை அல்லது சதக்காவை கொடுக்கவும். முக்கியமா ஜக்காத் கொடுத்தால் ஜக்காத்திற்கா என்றும் சதக்கா கொடுப்பதாக இருந்தால் சதக்கா என்றும் தெளிவாக சொல்லி கொடுக்கவும்.
உங்களுடைய ஜக்காத் தொகையை கணக்கிடுவதில் ஏதும் சந்தேகம் இருந்தால் மௌலவி எம்.ஹெச் நூருல்லாஹ் ஹஜ்ரத் அவர்களிடம் தொடர்பு கொள்ளவும். தொடர்புக்கு 050 3486824
ஜஸாக்கல்லாஹ் கைர்:

முஸ்லிம்கள் பெரும்பாண்மையான ஜமாஅத்களில் இது நடைமுறை சாத்தியம்தான். 
முயற்சி செய்யுங்கள் சகோதரர்களே! 
வல்ல அல்லாஹ் துணையிருப்பானாக! 

முஸ்லிம் மாயன்கள்...


அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு...

நம் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும், சமாதானமும் நிலவுவதாக...ஆமீன்.

========================
Please Note:

இந்த பதிவில் காணப்படும் ஜெர்மன் மற்றும் ஸ்பானிஷ் வார்த்தைகளின் உச்சரிப்புகளில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. தவறு இருப்பின் சுட்டிக்காட்டவும். ஜஸாக்கல்லாஹ்.
========================

மாயன்கள் - இந்த பழங்குடியினத்தவரை சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ஹாலிவுட் திரைப்படமான '2012' மிகவும் பிரபலமாக்கியது. மாயன்களின் காலண்டர் Dec, 2012-டுடன் முடிவதாகவும், அதுவே உலகின் அழிவுக்காலம் என்பது போலவுமான புரளிகள் உலகை வலம் வர ஆரம்பித்து, "யார் இந்த மாயன்கள்?" என்று இவர்களைப் பற்றி அறிந்திடும் ஆர்வத்தை தூண்டின.

யார் இவர்கள்?

மத்திய அமெரிக்காவின் பூர்வக்குடிமக்களான இவர்களின் நாகரிகம் மிகவும் பழமையானது. கி.மு 2600-வாக்கில் தோன்றியதாக கணக்கிடப்படும் மாயா நாகரிகம், பல ஆச்சர்ய தகவல்களை தன்னிடத்தே கொண்டதாக அமைந்துள்ளது. (வட, மத்திய மற்றும் தென்) அமெரிக்காவின் பண்டைய நாகரிகங்களிலேயே முழுமையான எழுத்து மொழியை கொண்டிருந்த இவர்கள், கணிதம், கட்டிடக்கலை என்று பல துறைகளில் மேம்பட்டிருந்தாக அறியப்படுகின்றது. 

இன்றைய மத்திய அமெரிக்க நாடுகளான ஹோண்டுரஸ், குவாதமாலா, பெலிஸ், எல் சால்படோர், மெக்ஸிகோ போன்ற நாடுகளை உள்ளடக்கி விரிவடைந்திருக்கின்றது மாயா நாகரிகம். 


பல்வேறு மொழிகளை பேசிய இவர்கள் சிறு சிறு குழுக்களாக இருந்திருக்கின்றனர். இந்த நாகரிகம் வீழ்ச்சியடைந்தற்கான காரணங்கள் பல சொல்லப்படுகின்றன. பஞ்சம் போன்ற இயற்கை சீரழிவுகளால் சிதைந்து போயிருந்த இந்த இனத்தவரை மேலும் சீரழித்தார்கள் ஸ்பெயின் ஆக்கிரமிப்பாளர்கள். 

ஆம், பதினைந்தாம் நூற்றாண்டில் கொலம்பஸ் அமெரிக்காவில் காலடி வைத்த பிறகு, ஸ்பெயின் தன்னுடைய காலனி ஆதிக்கத்தை அமெரிக்காவில் நிலைநாட்ட தொடங்கியபோது, பல்வேறு பழங்குடியினர் கொன்றொழிக்கப்பட்டனர். அதற்கு மாயன்களும் விதிவிலக்கல்ல. 

மாயா நாகரிகம் வீழ்ச்சியடைந்தது.  

மாயன் இனத்தவரின் இன்றைய நிலை:

இன்றளவும், சுமார் ஆறு லட்சம் மாயன்கள் மத்திய அமெரிக்கா முழுவதும் பரவியிருக்கின்றனர். 

ஆனால், இவர்கள் மீதான அடக்குமுறை மட்டும் குறைந்ததாக தெரியவில்லை. இனவெறி தலைவிரித்தாடுகின்றது. 

இவர்கள் அதிகம் வாழும் மெக்ஸிகோவின் தென்மாநிலமான ஷீயபாஸ் (Chiapas) போன்ற பகுதிகளில் கூட இவர்கள் இரண்டாம்தர குடிமக்களாகவே நடத்தப்படுகின்றனர். நடைப்பாதையில் வெள்ளையின மக்கள் எதிரே வந்தால் இவர்கள் நடைபாதையில் இருந்து சாலைக்கு இறங்கி விட வேண்டுமாம். 

சகிக்க முடியாத இந்த இனவெறிதான், சில மாயன்களை போராடத் தூண்டி, மெக்ஸிகோ அரசுக்கு எதிரான புரட்சிப்படையை உருவாக்க வைத்தது. 

1990-க்களின் மத்தியில், ஸபதிஸ்தா தேசிய விடுதலை ராணுவம் (Ejército Zapatista de Liberación Nacional, EZLN) என்ற அரசுக்கு எதிரான அமைப்பை துவங்கி, இனவெறி மற்றும் அடக்குமுறைகளுக்கு எதிராக போராடத் தொடங்கினர் மாயன்களில் ஒரு பகுதியினர். இன்றளவும் போராடிக்கொண்டு இருக்கின்றனர். 

முஸ்லிம் மாயன்கள்:

2005-ஆம் ஆண்டு, ஜெர்மனியின் பிரபல ஊடகமான தே ஷ்பிகேல் (Der Spiegel), பலரது கவனத்தையும் ஈர்க்கும்படியான ஒரு செய்தியை வெளியிட்டது.

மெக்ஸிகோவில் வாழும் பழங்குடியின மாயன் மக்கள் நூற்றுக்கணக்கில் இஸ்லாத்தை தழுவி வருவதாக கூறிய தே ஷ்பிகேல், பல சுவாரசிய தகவல்களை அந்த கட்டுரை முழுக்க அள்ளி தெளித்திருந்தது. அவற்றில் சில,

  • சுமார் 300 மாயன்கள் சமீப காலங்களில் இஸ்லாத்தை தழுவியுள்ளனர். 
  • பள்ளிவாசல், மதரசா, இஸ்லாமிய மையம் போன்றவை இவர்களிடையே இருக்கின்றது. 
  • மாயன்கள் ஹஜ் செய்கின்றனர். 
  • ஷீயபாஸ் மாநிலத்தின் இரண்டாவது பெரிய நகரான சன் கிறிஸ்டோபாலில், ஹிஜாப் அணிந்த பெண்களை காணுவது இயல்பாகி விட்டது. 

தே ஷ்பிகேல் ஊடகத்தின் இதுப் போன்ற தகவல்கள் உலகளாவிய முஸ்லிம்களுக்கு பெருத்த ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும். சிறிய அளவிலான முஸ்லிம்கள் மெக்ஸிகோவில் வாழ்கின்றனர் என்பது பலரும் அறிந்திருந்த செய்திதான். ஆனால், மாயன் இனத்தவரில் முஸ்லிம்கள் என்பது பலருக்கும் தெரிந்திராத செய்தியாகவே இருந்திருக்க வேண்டும்.  

உலகின் எங்கோ ஒரு மூலையில், தாங்கள் பெரிதும் அறிந்திடாத பழங்குடியினத்தவரில் தங்களின் மார்க்க சகோதரர்களை கண்டுக்கொண்டனர் முஸ்லிம்கள். 

தே ஷ்பிகேலின் 2005-ஆம் ஆண்டு செய்தி, சுமார் முன்னூறு முஸ்லிம் மாயன்கள் மெக்ஸிகோவில் இருப்பதாக தெரிவித்தாலும், மிக சமீபத்திய அல்-ஜசீரா ஊடகத்தின் செய்தி சுமார் ஐநூறு முஸ்லிம் மாயன்கள் அங்கிருப்பதாக தெரிவிக்கின்றது. 

மாயன்களிடையே எப்படி இஸ்லாம்?

1990-க்களின் மத்தியில், ஸ்பானிஷ் பேசும் ஐரோப்பிய முஸ்லிம்கள் இஸ்லாமிய அழைப்பு பணி மேற்கொள்ள ஷீயபாஸ் மாநிலத்திற்கு வந்தனர். அவர்களுக்கு தலைமை தாங்கியவர் ஆவுரெலியனோ பெரெஸ் (Aureliano Perez) என்பவராவார். 

இனவெறிக்கு எதிராக போராடிக்கொண்டிருந்த ஸபதிஸ்தா போராளிகளுக்கு தன்னுடைய ஆதரவை தெரிவித்த பெரெஸ், இஸ்லாமிய போதனைகளுக்கு மாயன் பழங்குடியினத்தவர் ஆர்வம் காட்டுவதை அறிந்துக்கொண்டார். 

ஷீயபாஸ்சில் இவர்களது அழைப்புபணிக்கு, இறைவன் கிருபையால், மகத்தான ஆதரவு கிடைக்க அதிக அளவிலான மாயன்கள் இஸ்லாமை தங்கள் வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டனர். 

...there have been reports of indigenous Mayans and Tzotzils converting to Islam in large numbers - wikipedia. 
பழங்குடியின மாயன்கள் அதிகளவில் இஸ்லாத்தை தழுவுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன - (extract from the original quote of ) wikipedia 

இதில் கவனிக்க வேண்டிய மற்றொரு தகவல் என்னவென்றால், இப்படி இஸ்லாத்தை தழுவியவர்கள், தங்களோடு அதனை நிறுத்திக்கொள்ளாமல் தங்கள் குடும்பத்தாரிடையே இறைச்செய்தியை கொண்டு செல்வதில் தீவிரமாக இருக்கின்றனர். உதாரணத்திற்கு, தே ஷ்பிகேல் ஊடகம், ஆனஸ்டசியோ ரொமெஸ் (Anastasio Gomez) என்ற மாயன் முஸ்லிம் சகோதரரை பேட்டி கண்டிருந்தது. இந்த சகோதரர் தன் குடும்பத்தார் அனைவரையும், இறைவன் கிருபையால், இஸ்லாத்தின்பால் கொண்டுவந்து விட்டார். இதில் அவரது நூறு வயது பாட்டியும் அடக்கம்.  

தற்போது இப்ராஹீம் என்று அறியப்படும் ரொமெஸ் தன் போன்ற பதினைந்து பழங்குடியினருடன் சேர்ந்து ஹஜ் செய்திருக்கின்றார்.  

'இஸ்லாத்தில் இனம்/ஜாதி போன்றவற்றிற்கு இடமில்லை' என்று மகிழ்ச்சியுடன் கூறும் மாயன்களை, மது மற்றும் வட்டி மீதான இஸ்லாத்தின் கடுமையான அணுகுமுறை பெரிதும் கவர்ந்திருப்பதாக RNW (Radio Netherlands Worldwide) தெரிவிக்கின்றது. 

அதிவிரைவான மாற்றங்கள் மாயன்களிடையே நடப்பதைக் கண்ட மெக்ஸிகோ அரசு கலவரமடைந்தது. மாயன் முஸ்லிம்களுக்கும், அல்-குவைதா போன்ற தீவிரவாத இயக்கங்களுக்கும் தொடர்பு இருக்கலாமென வெளிப்படையாக குற்றஞ்சாட்டியது. அதுமட்டுமல்லாமல், மாயன்களை தீவிரமாக கண்காணிக்கவும் தொடங்கியது. மெக்ஸிகோ அரசின் இந்த குற்றசாட்டிற்கு எந்தவொரு வலுவான ஆதாரமும் கொடுக்கப்படவில்லை என்கின்றது RNW.

மாயன்களோ இந்த குற்றசாட்டை முற்றிலுமாக மறுக்கின்றனர். மெக்ஸிகோவிற்கு வெளியேயான முஸ்லிம்களுடன் எந்தவொரு தொடர்பும் இல்லாத நிலையில் இது எப்படி சாத்தியம் என்று கேட்கின்றனர் அவர்கள்.    

பல்வேறு எதிர்ப்புகளுக்கு இடையேயும் இஸ்லாம் தொடர்ந்து மாயன்களை தன்னுள் அரவணைத்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. 

"இந்த பள்ளிவாசலை சார்ந்து தற்போது பதினேழு முஸ்லிம் மாயன் குடும்பங்கள் உள்ளனர். படிப்படியாக நிறைய மக்கள் இஸ்லாத்தை பற்றி அறிவதில் ஆர்வம் காட்டுகின்றனர்" என்று கூறுகின்றார் சன் கிறிஸ்டோபால் நகருக்கு அருகில் உள்ள பள்ளிவாசலின் இமாமான சால்படோர் லோபெஸ் (Salvador Lopez).

"இஸ்லாம் மெதுவாக, அதே நேரம் உறுதியாக இங்கு வளர்ந்து வருகின்றது. Yes, I think we are here to stay" 

இன்ஷா அல்லாஹ், இன்றிலிருந்து நம்முடைய துஆக்களில் இவர்களையும் சேர்த்துக்கொள்வோம்.

இறைவன் நம் அனைவரையும் நேர்வழியில் செலுத்துவானாக...ஆமீன்.

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்.

Topic Initiation:
1. Brother Peer Mohamed.

German and Spanish Pronunciations helped by: 
1. Sister Shameena.

My sincere thanks to:
1. Der Spiegel.
2. Radio Netherlands Worldwide.
3. Br. Peer Mohamed.
4. Sr. Shameena

References:
1. Praying to Allah in Mexico, Islam Is Gaining a Foothold in Chiapas - Spiegel Online, 28th May 2005. link
2. Islam is the new religion in rebellious Mexican state Chiapas - RNW, 17th December 2009. link
3. Inside Mexico's mud-hut mosque - Aljazeera, 30th August 2011. link
4. Islam in Mexico - wikipedia. link
5. Maya Indians - howstuffworks. link
6. El Islam en México - M Semanal. 15th May 2011. link
7. மாயன் நாகரீகம்-நவீன நாகரீகத்தின் திறவுகோல் - உயிர்மை. link
8. மாயன் நாகரீகம் - Ehow, 25th June 2011. link
9. Mayans and Muslims? - ALAMEDA ISLAMICA, 6th May 2008. link
10. Islam spreading in southern Maya Mexico - Catholic Online, 31st Aug 2011. link
11. Muslims In Mexico Under Greater Scrutiny From U.S - Islamophobia today, 23rd May 2011. link
12. Spiegel Online, Der Spiegel, 2012 Phenomenon, RNW, Tzotzil people, Tzotzil Lanugauge, Mayan Languages - wikipedia.

வஸ்ஸலாம்,

உங்கள் சகோதரன், 
ஆஷிக் அஹமத் அ. 

கலவர வழக்கை சீர்குலைக்க எனது வக்கீல்களுக்கு லஞ்சம் கொடுத்தார் மோடி- மல்லிகா சாராபாய்

 2002ம் ஆண்டு நடந்த கோத்ரா சம்பவத்திற்குப் பின்னர் நடந்த பெரும் கலவரம் தொடர்பாக நான் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த பொது நலன் வழக்கை சீர்குலைக்க, எனது வக்கீல்களுக்கு லஞ்சம் கொடுத்தார் முதல்வர் நரேந்திர மோடி என்று பிரபல நடனக் கலைஞர் மல்லிகா சாராபாய் பரபரப்புக் குற்றம் சாட்டியுள்ளார்.

குஜராத்தில் 2002ம் ஆண்டு நடந்த பெரும் கலவரத்திற்குப் பின்னர் அந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் உச்சநீதிமன்றத்தில் ஒரு பொது நலன் மனுவைத் தாக்கல் செய்தார் சாராபாய். அதில் குஜராத் கலவரத்தைத் தடுக்க மாநில அரசும், முதல்வர் நரேந்திர மோடியும் ஆக்கப்பூர்வமாக, தீவிரமாக செயல்படவில்லை என்று குற்றம் சாட்டியிருந்தார். இந்த நிலையில் இந்த வழக்கை சீர்குலைப்பதற்காக மக்கள் பணத்தை எடுத்து எனது வக்கீல்களுக்கு லஞ்சமாக கொடுத்தார் மோடி என்று இன்று குற்றம் சாட்டியுள்ளார் சாராபாய்.

இதுகுறித்து அவர் கூறுகையில், அப்போது மாநில உளவுத்துறை தலைவராக இருந்த ஆர்.பி.ஸ்ரீகுமார் மற்றும் ஐபிஎஸ் அதிகாரி சஞ்சீவ் பட் ஆகியோரை அழைத்து, எனது வக்கீல்களுக்கு வழக்கை சீர்குலைப்பதற்காக ரூ. 10 லட்சம் பணம் தரும்படி உத்தரவிட்டார் மோடி.

இதுதொடர்பாக ஸ்ரீகுமார் சமீபத்தில் நானாவதி மற்றும் அக்ஷய் மேத்தா கமிஷன் முன்பு நேரில் ஆஜராகி இதுதொடர்பாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

மேலும் கடந்த மே மாதம் நானாவதி கமிஷன் முன்பு ஆஜரான சஞ்சீவ் பட்டும், வக்கீல்களுக்கு லஞ்சம் கொடுக்க உளவுத்துறைக்கு ஒதுக்கப்படும் நிதியை பயன்படுத்துமாறு தனக்கு மோடி உத்தரவிட்டதாக கூறியுள்ளார் என்றார் சாராபாய்.

Friday, September 16, 2011

வேணும்... ஆனா வேணாம்


உப்பில்லா பண்டம் குப்பையிலே... என்று சொல்லி விட்டுப் போய்விட்டனர்.
உப்பை குறையுங்கஇல்லேதீராத தொல்லை தான் என்று பயமுறுத்திவிட்டனர் டாக்டர்கள்.
உப்பு பற்றி உப்பு பெறாத விஷயம் என்று யாரும் நினைக்கத் தயாரில்லை. ஆனால்,உடம்புக்கு வராத வரை உப்பு பற்றி கவலைப்படுவதும் இல்லை. சிலரை பார்த்தால்,தட்டில்அரை ஸ்பூன் உப்பை போட்டு வைத்திருப்பர். தேவைப்படும் போதுஇவர்களே,சாம்பார் முதல் தயிர் சாதம் வரை சேர்த்துக்கொள்வர்.
கொழுப்பு தேவைஅதிகமானால் ஆபத்துஎண்ணெய் தேவைஅதிகமானால் ரத்த அழுத்தம் தான். இனிப்பு தேவைஅதிகமானால் ஷுகர். இப்படித்தான் உப்பு தேவை தான்அதிகமானால் ரத்த அழுத்தம் எகிறிவிடும்மாரடைப்பு வருமோ என்ற பீதி கிளம்பும்.
அப்படி என்ன தான் இருக்கு?
சோடியம் - குளோரின் ஆகிய இரண்டு ரசாயனங் களும் சேர்ந்தது தான் உப்புஇயற்கை கனிமங்களில் ஒன்று சோடியம் குளோரைடு கலவைகளில் ஒன்று. வெண்மை நிறம் கொண்டது சோடியம்குளோரினோபச்சை மஞ்சள் கலந்ததுதண்ணீரில் கரைந்து விடும்காற்றில் வாயுவாகி விடும்.
பல்வேறு உப்புகள் உள்ளன: 
சோடியம் பைகார்பனேட்: பேக்கிங் சோடா என்பது இது தான். சுத்தம் செய்ய பயன்படுவது. மருத்துவ குணங்கள் கொண்டது.
சோடியம் நைட்ரேட்: உரம்வெடிக்கு பயன்படுவது.
சோடியம் ஹைட்ராக்சைடு: பேப்பர் சோப்புசில உணவு வகைகளில் பயன்படுத்தப்படும் காஸ்டிக் சோடா எனப்படுவது.
வேணும்... ஆனா வேணாம்
உடலில் உப்பு தேவைஅதிக அளவில் உப்பு வியர்வைசிறுநீர் மூலம் வெளியேறி விட்டால்அதை ஈடு செய்ய வேண்டி உப்பு கரைசல் தேவை. உடலில் உப்பு குறைந்தால் தண்ணீர் வற்றிய நிலைக்கு தள்ளப்படுகிறது. அப்போது வாந்திமயக்கம் வருகிறது. அதை தீர்க்க அதிக அளவில் தண்ணீர்எலக்ட்ரால் கரைசல் குடிக்க செய்கின்றனர் டாக்டர்கள்.
உடலில் அதிக உப்பு சேர்ந்தாலும் தொல்லை தான். அதிக உப்பு உள்ளவர்களுக்கு அடிக்கடி தாகம் எடுக்கும்அடிக்கடி சிறுநீர் போவர். சிறுநீர் மூலம் தான் அதிகப்படியான உப்பு வெளியேற்றப்படுகிறது.
உப்புல சூப்பர் பலன்
வெது வெதுப்பான தண்ணீரில் உப்பை கரைத்து தொண்டையில் நிறுத்தி கொப்பளித்தால் தொண்டை கரகரப்பு போய்விடும். புண் இருந்தாலும் போய் விடும்.
தேய்க்கும் பற்பசையில் உப்பு உள்ளதுஅதுபோல சோப்பிலும் உள்ளது. உடலில் உள்ள எரிச்சல்தோல் பிரச்னை இதனால் போய் விடும். பல் பாதுகாப்புக்கு உப்பு முக்கியம்.
எவ்ளோ ஓகே
நாம் குடிக்கும் தண்ணீரில் உப்பு உள்ளது. அதனால்உணவில் சேர்ப்பது உட்பட ஒருவரின் உப்பு தேவை ஒரு டீஸ்பூன் தான் என்பது தான் நிபுணர்களின் கருத்து.
உப்பு போட்டாலேஉணவு அயிட்டங்களுக்கு தனி சுவை வந்து விடும் தான்ஆனால்,அதற்காக நாற்பதை தாண்டியும் உப்பை குறைத்துக் கொள்ளாமல் இருந்தால் தொல்லை தான்.
ரத்த அழுத்தம் அதிகமாக உள்ளவர்கள் கண்டிப்பாக உப்பை குறைத்துக்கொள்ள வேண்டும். உப்பினால் இவை ஏற்படுகிறதா என்று சர்வதேச சர்ச்சை நீடித்தாலும்,உப்பை குறைத்தால் இதய நோய் கட்டுப்படுகிறது என்பது உண்மை .
பிரஷர் குறையும்
"லப் டப்என்று இதயத்துடிப்பு கேட்கிறதேஅப்போது இதயம் சுருங்கிவிரியும். அப்போது ஏற்படும் அழுத்தம் தான் "சிஸ்டாலிக்என்று அழைக்கப்படுகிறது. 
மற்ற உறுப்புகளுக்கு ரத்தம் செலுத்தப்படுவது அந்த அழுத்தம் மூலம் தான். 
இதயத்துடிப்புகளுக்கு இடையே உள்ள இடைவெளியில் மட்டும் தான் இதயம் ஓய்வெடுக்கிறது. இந்த இடைவெளியில் ஏற்படும் அழுத்தம் தான் ரத்த அழுத்தம் "டயஸ்டாலிக்என்று பெயர்.
ரத்த அழுத்தம் 130/85 என்பது நார்மலானதுசுருங்கி விரியும்போது எடுக்கப்படுவது தான் முதலானதுஅதை டாப் நம்பர் என்பர்அதுபோலஇரண்டாவது குறிக்கப்படுவது தான் டயஸ்டாலிக்.
மருந்துமாத்திரைகள் மட்டுமின்றிஉப்பு குறைக்கப்பட்டாலேரத்த அழுத்த அளவு தானாகவே குறைந்து விடும்.
எதை கைவிடணும்?
பிரஷ் பழங்கள்காய்கறிகளை சாப்பிட பழகலாம்உப்பு குறைத்து உணவு சாப்பிட பழக வேண்டும்.
பாட்டில் பானங்களை கண்டிப்பாக கைவிட வேண்டும். அதில் உப்பு அதிகம்.
பாக்கெட்டில் அடைக் கப்பட்ட உணவுநீண்ட நாள் பாதுகாப்புக் காக சோடியம் பயன் படுத்தப்படுகிறது. உப்பு அதிகமாக உள்ளதால் அவற்றை தவிர்க்க வேண்டும்.
ஊறுகாய்உப்பு போட்ட நொறுக்குகளை மறந்து விட வேண்டும்.