Sunday, August 26, 2012

அதிரை மணம் பெற ஆசைப் பூக்கள்!!!!!

பெரியோரை மதிக்க வேண்டும்
.....பெருந்தன்மை சிறக்க வேண்டும்
சிறியோரை அணைக்க வேண்டும்
....சினங்கொள்ளல் ஒழிய வேண்டும்

பெற்றோர்கட் கிணங்க வேண்டும்
....பெருமைகளை விரட்ட வேண்டும்
கற்றோர்கள் பணிவு வேண்டும்
....கயமைகளைக் களைய வேண்டும்

இயக்கங்கள் அழிய வேண்டும்
....எல்லாரும் இணைய வேண்டும்
மயக்கங்கள் வடிய வேண்டும்
....மன்றாடி இறைஞ்ச வேண்டும்

தாய்சொல்லில் மகிழ வேண்டும்
.....தாரத்தைப் புகழ வேண்டும்
வாய்சொல்லை அளக்க வேண்டும்
....வாழத்தான் விளக்கம் வேண்டும்

ஆன்மீகம் உணர வேண்டும்
....அதிரைக்கு பலமாய் வேண்டும்
மேன்மேலும் உயர வேண்டும்
...மேநாட்டு வளமும் வேண்டும்

காக்காக்கள் உரைகள் வேண்டும்
.....காளையர்கள் தொடர வேண்டும்
ஆக்கங்கள் எழுத வேண்டும்
.....ஆதரிக்கும் உளமும் வேண்டும்

காயல்பட் டினம்போல் ஆகணும்
.....கட்டுப்பா டுகள்போட் டாகணும்
வாயல்கள் வசந்தம் பூக்கணும்
...வஞ்சம்போக் கிடவே வாழ்த்தணும்
.





No comments:

Post a Comment