Monday, August 13, 2012

நோன்பு கஞ்சியும் ...பாத்திரங்களின் பின்னணியும்...!


    ரமலான் மாதத்தில் காலம்காலமாய் பள்ளி வாசல்களில் நோன்பு கஞ்சி காய்ச்சுதல் வழக்கம்.


இது பள்ளிவாசலுக்கு வந்து நோன்பு திறப்போருக்கு 
வசதியாக இருக்கும் ..கால போக்கில் அக்கம் பக்கத்தில் உள்ள 
குடும்பத்தார்கள் கஞ்சி வங்கி தருவதும் வழக்கமாயிற்று அசர் தொழுகைக்கு பிறகு மாலை 4 மணியிலிருந்து 5 மணிக்குள் கஞ்சி ஊற்றுதல் நடை பெரும் .
கஞ்சி ரெடியா?
                  கஞ்சி வாங்குவதற்கு பெரும்பாலும் சிறுவர்கள் தான் வருவார்கள் .இதில் பணக்காரர்கள் ஏழைகள் 
என்ற பேதமில்லை ...எல்லா குழந்தைகளும் தத்தமது வீட்டு பாத்திரங்களை கொண்டு வருவார்கள் ..பணக்காரர்கள் உயர்தரமான பாத்திரங்களை அனுப்பி வைப்பார்கள் ..ஏழை எளியோர் பிளாஸ்டிக் வாளி..அல்லது வளைந்து நெளிந்து போன அலுமினிய பாத்திரங்கள் பெரியதாக கொண்டு வருவார்கள் .ஏழை எளியோர் ..பாத்திரங்கள் பெரியதாக இருக்கும் .நோக்கம் கஞ்சி கூடுதலாக கிடைக்கும் என்பதால் ..,இரவு பொழுதை நோன்பு கஞ்சி மூலம் கழித்து விடலாம் என்றநோக்கம் .,ஆனால் கஞ்சி ஊற்றுபவர்கள் ஏழை பிள்ளைகளுக்கு கொஞ்சமாக அரை குறையாகவும் வசதி படைத்தபிள்ளைகளுக்குகூடுதலாகவும் .,நிறைவாகவும் கஞ்சி ஊற்றுவார்கள்
                              
 பணக்கார வீட்டில் பலவகை பலகாரங்கள் மத்தியில் ..பள்ளிவாசல் 
கஞ்சி ஒதுங்கி நிற்கும் ..அல்லது ஒரு மூலையில் கிடக்கும். பெரும்பாலும் கஞ்சி குடிக்காமல் ..கழனி பானைக்கோ ..குப்பைக்கோ போய் விடும் ..ஆனால் ஏழை வீட்டில் மூன்று..நான்கு குழந்தைக்கு தாய் குறைந்த அளவு கஞ்சி குழந்தைகள் ..உம்மா இன்னும் கொஞ்சம் கஞ்சி தாம என்று ஒரு குழந்தை ..மற்றொரு குழந்தை உம்மா எனக்கு கொஞ்சம் பாவம் கஞ்சி இல்லா  கொடுமை ..மூத்தவன் கூறுவான் ..நாளைக்கு வேறு பள்ளிக்கு போய் நிறைய கஞ்சி வாங்கி வாறேன்..இன்னைக்கு இவ்வளவுதான் என்பான் ..
கஞ்சி கொதிக்குது 
     
வறுமைக்கு விடைகொடுக்கும் 
ரமளானில் இந்த காட்சிகள் தேவையா

 ...கஞ்சி ஊற்றுபவர்களே ...!
பாத்திரங்கள் அறிந்து ஊற்றுங்கள் ..அடுத்த வருடம் கஞ்சி ஊற்றும்போது முகம் பார்த்து கஞ்சி ஊற்றுங்கள்..ஏழை என்றால் கொஞ்சம் கூடுதலாக ஊற்றுங்கள் ...பணக்கார பிள்ளைகளுக்கு அளவாக ஊற்றுங்கள். பிளாஸ்டிக் வாளி என்றால் இன்னும் கொஞ்சம் கூடுதலாக ஊற்றுங்கள் பாத்திரமறிந்து கஞ்சி ஊற்றுங்கள் !

சரியா சகோதரா ..!
(அதிரை சித்தீக்)  

No comments:

Post a Comment