Thursday, August 9, 2012

பாவமன்னிப்பு


நானே வளர முடிந்திடுமா
          நல்ல உணவும் கிடைத்ததனால்
தானே வளர்ந்தேன் உனதருளால்
          தேடும் வளமும் கிடைத்தனவே
ஆனால் மறந்தேன் உனதருளை
        ஆளும் இறைவா இனியெனது
பேனா வனையும் கவிகளிலே
         பொய்மை கலவா திருப்பதுவே

தாயின் கருவில் வளர்ந்திடவே
         தங்கி நலமாய் வெளிவரவே
நீயும் உணவு தருவதையும்
         நித்தம் மறந்து விலகினனே
வாயும் உளறும் கெடுதிகளால்
       வாழ்வு குலைந்து முடிவினிலே
தீய நரகம் புகுவதற
       தீமை அகல வரமருளே

கல்விக் கலைகள் வளமுடனே
           கற்பித் ததனால் உனதருளால்
செல்லும் இடந்த(னில்) சிறப்புடனே
           செம்மைப் பெறவே முடிந்ததுவே
பொல்லாச் செயலால் பெரும்பிழைகள்
          பெற்றுப் பழிகள் வருவதனால்
எல்லா மறிந்த உனதருகில்
          என்றும் திருந்தி வருவதுவே


அபுல்கலாம் பின் ஷைக் அப்துல்காதிர்

“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்( பாடசாலை), அபுதபி (தொழிற்சாலை)
அலை பேசி: 00971-50-8351499 / 056 7822844
வலைப்பூந் தோட்டம்: http://www.kalaamkathir.blogspot.com/ (கவிதைச்சோலை)
மின்னஞ்சல்: kalaamkathir7@gmail.com


No comments:

Post a Comment