Saturday, August 18, 2012

ஈகைத் திருநாள் ஈத்பெருநாள் வாகை தரும்நாள் வல்லான் அருள்நாள்!!

ஈந்துவக் கும்திரு நாளாம் இகமதில் ஈத்பெருநாள்
நீந்திய பாவம் கடக்கப் புரிந்தநம்    நீள்தவத்தை
ஏந்திய நோன்பால் விளைந்த பரிசினை ஏற்றிடத்தான்
சாந்தியாம் சொர்க்கம் கிடைக்கும் உறுதியைச்  சாற்றிடுமே

புண்ணியம் செய்தவ ரென்றும் மகிழ்ந்துப் புகழ்ந்திடத்தான்
எண்ணிலா நன்மை பொழிந்திடச் செய்யும் இறையருளால்
மண்ணிலி  றங்கிச்  சலாமுடன் வாழ்த்தும் மலக்குகளால்
கண்ணியம் செய்வதை யென்றும் நினைத்துக் களிப்புறவே

இற்றைத் திருநாள் நமக்குப் பிறையாய் இறங்கியது
பெற்ற கொடையை விடாமல் நுகர்வோம் பெருமிதமாய்
கற்ற பயிற்சிகள் நிற்க மனத்திற் கவனமுடன்
சற்று முயற்சி எடுப்பதில் நீயும்   தயங்கிடாதே

-----
அபுல்கலாம் பின் ஷைக் அப்துல்காதிர்

“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்( பாடசாலை), அபுதபி (தொழிற்சாலை) அலை 
பேசி: 00971-50-8351499 / 056 7822844 வலைப்பூந் தோட்டம்: 
http://www.kalaamkathir.blogspot.com/ (கவிதைச்சோலை)
மின்னஞ்சல்: kalaamkathir7@gmail.com

2 comments:

  1. அருமையான கவிதை !

    காலச்சூழலுக்கேற்ற கவிதைகள் எழுதுவதில் கவிக்குறளும் ஒருவராக முன்னணியில் உள்ளார்..... வாழ்த்துகள் கவிக்குறளுக்கு !

    “பேனாமுனை” வலைப்பூவின் வாசகர்கள் அனைவருக்கும் என் ஈத் பெருநாள் நல் வாழ்த்துகள் !

    ReplyDelete