Monday, December 31, 2012

பர்தா போடுதல் சரிதான்!



வைரமதைப் பெட்டகத்தில் பாது காத்து
..வைக்கவேண்டும் என்றுணர்ந்து கொண்ட நீதான்
வைரமணிப் பெண்மணிகள் ஊரைச் சுற்ற
...வைப்பதிலும் கவனமாக இருக்க வேண்டும் 
மெய்ரணமா கும்வரைக்கும் காமு கர்கள்
...மேய்ந்திட்ட மேனிமீதுக் காமப் பார்வைப்
பெய்தவிடம் தாக்காமல் பாது காக்கப்
...பெருங்கேட யம்போலாம் பர்தாப் போர்வை!


கண்ணியத்தைப் போற்றுகின்ற பெண்கள் கற்பைக்
...காத்துநிற்கும் பர்தாவை வேணடாம் என்றால்
பெண்ணியத்தைப் பேசுகின்ற பெண்கள் நீங்கள்
...பெண்ணுக்கு ஏதேனும் பாது காப்பை
மண்ணுலகில் தந்துவிட்டுப் பேச வேண்டும்
....மலிந்துவரும் இக்கொடுமை நீங்க வேண்டி
கண்ணிமைபோல் பெண்களையும் காத்து நிற்கும்
....காலத்தின் கட்டளையாம் பர்தா என்பேன்

ஆதிவாசி அன்றிருந்தாள் அறியா வேளை
...ஆடைகளை உடுத்தவுமே தெரியா மூளை
ஓதியோசித் துணரத்தான் தந்தான் திட்டம்
...ஓரிறையின் மறைதனிலே ஆடைச் சட்டம்
ஆதிவாசிப் போலிருந்தால் கூழாங் கல்லு
...ஆறறிவு பெற்றவளா நீயும் சொல்லு
பாதிபாதி உடையணிந்தால் உன்றன் மேனி
...பார்ப்பவர்கள் கண்கட்குத் தானே தீனி!




அபுல்கலாம் பின் ஷைக் அப்துல்காதிர்

“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்( பாடசாலை), அபுதபி (தொழிற்சாலை)
அலை பேசி: 00971-50-8351499 / 056 7822844
வலைப்பூந் தோட்டம்: http://www.kalaamkathir.blogspot.com/ (கவிதைச்சோலை)
மின்னஞ்சல்: kalaamkathir7@gmail.com


Monday, December 24, 2012

கவிதைச் சமையற்குறிப்பு:









கவிதைச் சமையற்குறிப்பு:

சாடல் நெருப்பைச்
சட்டென மூட்டி
பாடல் பதியும்
பாத்திரம் வைப்பாய்

அறிவால் அறிந்த
அனைத்துப் பொருட்களும்
நிறைவாய்ப் பகிர்ந்து
நிறைநெய்த் தமிழிடு

கருவிளம் என்னும்
கறிவேப்பிலையும்
தரு(ம்)மணம் என்றும்
தனியாய்ச் சுவைக்கும்


சீரசை  பிரித்தல்
சீரகம் தரும்குணம்
நேரசை புரிதல்
நேசமாய் நறுமணம்

சாம்பலைப் பிரித்தல்
சோம்பலைத் துறத்தல்
சோம்புடன் மிளகும்
சேர்த்திடச் சுவைக்கும்



எதுகை மோனை
ஏலம் கிராம்புமாய்
விதிகள் பாவில்
வீசும் நறுமணம்

கருவாய் அமையும்
கருத்தை அழகாய்த்
தருவாய்ச் சமையல்
தகிக்கும் தருவாய்

புளிமா கொஞ்சம்
பதமுடன் கலந்தால்
புளிபோல் மிஞ்சும்
புதுசுவை உணர்வாய்

தேமாங்காய் போன்ற
தேங்காய்ப் பாலுடன்
மாமாங்காய்க் கீற்றும்
மாற்றும் பாவினம்

“அசலாய்” சேர்த்த
அறிவுப் பெட்டக
”மசலா” கொஞ்சம்
மணக்கச் சேர்த்திடு

சுண்டி இழுக்கும்
சுவைமிகு உவமை
கிண்டிக் கிளறும்
”கரண்டியின்” பெருமை

ஒற்றுப் பிழைபோல்
உப்பின் குறைதான்
கற்றுத் தருவர்
கல்வி நிறைந்தோர்

ஆவி அடங்க
ஆறப் போட்டிடு
கூவி அழைத்து
கூடிச் சாப்பிடு


மாசிலா வாழ்வை
மணத்துடன் வாழ
மாசிபோல் தூய
மரபினைப் போடு



பாலும் பருப்பும் பசுநெய்யும் சேர்ந்தது
போலுன்றன் பாடலைப் போடு

(இக்குறட்பா போலிருக்கும் அப்”பா”யாசம்)



அபுல்கலாம் பின் ஷைக் அப்துல்காதிர்

“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்( பாடசாலை), அபுதபி (தொழிற்சாலை)
அலை பேசி: 00971-50-8351499 / 056 7822844
வலைப்பூந் தோட்டம்: http://www.kalaamkathir.blogspot.com/ (கவிதைச்சோலை)
மின்னஞ்சல்: kalaamkathir7@gmail.com

Friday, December 21, 2012

மாயன் ஏமாந்தான்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!




காயம் படாமல்
கழிந்தது இன்று
மாயன் ஏமாந்தான்
மனிதர்களை மூடர்களாக்கி

உடைந்தது மூடநம்பிக்கை
உலகம் அழிவென்பது
படைத்தவன் கைவசம்
பாருணர்ந்துப் பார்க்குமா?

குர்-ஆன் ஹதீஸ் வாக்குறுதி
குறைவிலாச் செயலுறுதி
ஒருநாளும் பொய்க்காது
ஒப்புக்கொள் மானிடனே!
இரவல் கொடுத்தவன்
இறைவன் ஒருவன்
இரவும் பகலும்
இயக்கும் அருளவன்!

அழிந்து விட்டதாய்
அங்கலாய்த்த மாயானர்
கழிந்தக் குற்றத்தை
கணமேனும் அறிவாரோ?



















அபுல்கலாம் பின் ஷைக் அப்துல்காதிர்

“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்( பாடசாலை), அபுதபி (தொழிற்சாலை)
அலை பேசி: 00971-50-8351499 / 056 7822844
வலைப்பூந் தோட்டம்: http://www.kalaamkathir.blogspot.com/ (கவிதைச்சோலை)
மின்னஞ்சல்: kalaamkathir7@gmail.com

Wednesday, December 12, 2012

அருள்மறையாம் அல்-குர்-ஆன் அகிலத்தின் பொதுமறை.










ஒப்பில்லா உயர்மறையாய் விளங்கும்அல் குர்ஆன்
.. உலகத்து மாந்தரினம் உய்க்கவேவந் தவேதம்
செப்பிவைத்தான் திருமறையில் சிறப்பாக அல்லாஹ்
.. செழுமைபெறும் நல்வழியாயல் சிறக்கவொரு  வேதம்
இப்புவிக்குப் போதுமென ஏற்றவர்கள் உரைப்பார்
.. இம்மகிழ்ச்சி உலகத்தில் வேறெங்கு முண்டோ?
அப்பழுக்கே இலாவாழ்க்கை அமைந்திடவே அறங்கள்
.. அளிக்கின்ற திருமறையும் உலகமாந்தர்ச்  சொத்து!

அறமுரைக்கும் திருமறையை அறபுமொழி  யிலிருந்(து)
.. அகிலமொழி யனைத்திலுமே மொழிபெயர்ப்புச் செய்து
சிறப்புறவே அதிலுள்ள கருத்துரைகள் உணர்ந்து
.. செய்கின்ற நம்வாழ்க்கை முறையொழுக்க நெறியாம்
திறன்வியந்து போற்றுகிறார் உலகப்பேர் அறிஞர்
.. திக்கெல்லாம் இறைபெருமை திகழவைக்கும் குர்ஆன்
மறந்துவிடா வண்ணம்சொல் லடுக்குகளாய்க் கோக்கும்
.. மனனத்தில் ஏற்றிவைக்கும் ஓசைநயம் ஈர்க்கும்

ஒன்றுபட்டச்  சமுதாயம் உருவாக வேண்டி
.. ஓரிறையை வழிபடவே ஓர்மறையைத் தந்தான்
நன்றுபலக் காட்டுகளாய் வரலாறும் பேசும்
.. நாமின்று  காணுகின்ற அறிவியலும் வீசும்
குன்றுகளை மேகத்தை ஒட்டகத்தைப் பார்த்துக்
.. கூரறிவுச் சீராக்கச் சொல்லுமிந்த வேதம்
இன்றுவரை இவ்வேதம்  அழியாமல் காக்கும்
.. இறைவனவன் வாக்குறுதி மெய்யாகக் காணீர்!

அபுல்கலாம் பின் ஷைக் அப்துல்காதிர்

“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்( பாடசாலை), அபுதபி (தொழிற்சாலை)
அலை பேசி: 00971-50-8351499 / 056 7822844
வலைப்பூந் தோட்டம்: http://www.kalaamkathir.blogspot.com/ (கவிதைச்சோலை)
மின்னஞ்சல்: kalaamkathir7@gmail.com

Saturday, December 8, 2012

மனிதனுக்கு நீதி வாழட்டும்!( நூல் வெளியீட்டு விழாவுக்கு என் வாழ்த்துப்பா


அன்புள்ள டாக்டர் இப்றாஹிம் அன்சாரி காக்கா அவர்கட்கு,
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹமத்துல்லாஹி வபரக்காத்தஹு

தங்களின் நூல் வெளியீட்டு விழாவில் அடியேன் கலந்து கொள்ளாவிட்டாலும், என் கவிதையை என் சார்பாக மூத்த தமிழறிஞர் என் ஆசான் அதிரை அஹ்மத் காக்கா அவர்கள் வாசித்து அவ்விழாவில் என் பங்களிப்பை நிறைவு செய்ய வேண்டுகிறேன்.


தலைப்பு: மனிதனுக்கு நீதி வாழட்டும்!


வெடிக்கின்ற வென்னீரின் ஊற்று வெள்ளம்;
.....விரிந்துமணம் வீசுகின்ற மலரின் உள்ளம்;
துடிக்கின்ற தீக்கனலின் வெம்மை வீச்சு;
.....சொடுக்கிவிட்ட சிந்தனையின் சீறும் மூச்சு;
நடிக்கின்ற வொருசாரார்ச் செய்யும் கேட்டை
.....நயபுடைக்கு(ம்) இந்நூலில் சுழற்றும் சாட்டை
வடிக்கின்ற மறுசாரார்க் கண்ணீர் போக்க
......மறுபடியும் எழுதிடுவாய் நூலும் நீரே!



(வேறு)



புதிய உலகமே செய்வோம் - இந்தப்
பூமியின் வளமெலாம் பொதுவாம்
எதிரிகள் எவருமில் லாமை - என்னும்
இனிய திசையில் செல்வோம்
சாதியினைச் சொல்லியே ஏய்ப்பார் - ஏதோ
சாதியுர்வு என்றுதான்  மாய்ப்போர்
சதியினால் எளியரைத் தூற்றுவோர் - இங்கே
சகலமும் தமக்கெனச் சாற்றுவோர்

சிந்திக்க வைத்தத் தொடர் - மக்கள்
சேவைக்கு ஏற்றுஞ் சுடர்
நிந்திக்கா(த) வண்ண நூலாம் - அறிவுக்கு
ஞாயிற்றின் கீற்றைப்  போலாம்

அறிவியல் சிந்தனை தழைக்கும் - கல்வி
அளித்தநற் புத்தியும் செழிக்கும்
நெறிமுறை தந்திடும் புத்தகம் -  வாழ்வின்
நெடுகிலும் காட்டிடும் தத்துவம்
பேச்சிலும் மூச்சிலும் நாடு - மேன்மை
பெற்றிட என்றுமே நாடு
தீச்சுடர் போலவே கேடு - அழித்திட
திறமையாய்ச் சாற்றிடும் ஏடு



--
அபுல்கலாம் பின் ஷைக் அப்துல்காதிர்

“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்( பாடசாலை), அபுதபி (தொழிற்சாலை)
அலை பேசி: 00971-50-8351499 / 056 7822844
வலைப்பூந் தோட்டம்: http://www.kalaamkathir.blogspot.com/ (கவிதைச்சோலை)
மின்னஞ்சல்: kalaamkathir7@gmail.com

Sunday, December 2, 2012

ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசிய தினம்


அமீரகம்..
அன்பின் அகம்
பண்பின் சுகம்
நட்பிகளில் பேரிடம்
நானிலத்தின் ஓரிடம்
 
எண்ணெய்ச் சுரங்கம்
என்னை வார்தெடுத்த
எழில்மிகு அரங்கம்
 
அதிரைப்பட்டினம்
அடியேனின் பாடசாலை
அபுதபிப் பட்டணம்
அடியேனின் தொழிறசாலை
 
பாலைவனத்தையும்
பசுஞ்சோலையாக்கிய
வேலையாட்களை
வேகமாய் உயர்த்திய
வேகம் குறையாததால்
மோகம் கொண்டு
மொய்க்கின்றோம்!
 
“யாதும் ஊரே
யாவரும் கேளிர்”
அன்று படித்தோம்
அதிரைப் பள்ளியில்
இன்று உணர்ந்தோம்
இத்தேசப் புள்ளியில்
 
ஒன்றே இனம்
என்றே மனம்
பாசக் கயிற்றால்
நேசம் கொண்டு
அரவணைக்கும்
அரபி அனைவர்க்கும்
உடன்பிறப்பாய்க்
கடன்பட்டுக் கிடப்பர்!
 
”உண்ட வீட்டுக்கு
ரெண்டகம் செய்வோரும்”
உண்டிங்கே என்பதுதான்
மண்டைக்குள் வேதனை!
 
மொழி,மதம் வேறுபாடின்றி
வழிபாட்டுத் தலங்களைக்
கட்டிக்கொள்ள வைத்தவர்களைக்
கட்டிக்கொள்வோம் தேசிய தின
வாழ்த்துரைத்து...

--அபுல்கலாம் பின் ஷைக் அப்துல்காதிர்
 
“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்( பாடசாலை), அபுதபி (தொழிற்சாலை)
அலை பேசி: 00971-50-8351499 / 056 7822844
வலைப்பூந் தோட்டம்: http://www.kalaamkathir.blogspot.com/ (கவிதைச்சோலை)
மின்னஞ்சல்: kalaamkathir7@gmail.com