Friday, September 30, 2011

காங்கிரசின் பினாமியா அட்வகேட் முனாப்!

கே கே ஹாஜா அவர்களுக்கும் மேலேத்தெரு வாடி (எம் எம் எஸ்) வகையரக்களுக்கும் இரகசிய உடன்படிக்கை

மேலேத்தெரு எம் எம் எஸ் வாடி குடும்பத்தினர் கேட்டுகொண்டதினர்கிணங்க அரசியலில் நூறு வருட பெருமைக்குரிய முஸ்லிம் லீக்கின் அதிரை முக்கிய பொறுப்பாளர் கே கே ஹாஜா அவர்கள் தனக்கு கிடைத்த அதிரை பேருர் ஆட்சி தலைவர் போட்டிக்கான வாய்பை, முன்பு சூல் நிலைக்கு ஏற்ப பல கட்சிகளில் அங்கம் வகித்த தற்பொழுது தன்னை முஸ்லிம் லீக்கில் இணைத்துள்ள அதிரை வழக்கறிஞர் (அப்பாவி ) அப்துல் முனாப் அவர்களுக்கு தனக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்பை வழங்கியதன் மூலம் சம்சுல் இஸ்லாம் சங்கத்திற்கு உட்பட்ட இரண்டு பிரதான கட்சிகளின் வேட்பாளர்களில் ஒருவர் வெற்றிபெற வாய்ப்பு இருப்பதினால் இதனை தடுக்கவேண்டும் என்ற குறுகிய நோக்கோடு இதை கவனத்தில் கொண்டு எம் எம் எஸ் குடும்பத்தினர், அவர்கலுக்கு நெருங்கிய உறவான கே கே ஹாஜா அவர்களை சரிகட்டி நீங்கலும் நம் முஹல்லாவில் நின்றால் நாம் இருவரும் தேர்தலில் தோர்த்து விடுவோம் அந்த வாய்ப்பை நடுத்தெரு சம்சுல் இஸ்லாம் பகுதி உள்ளவர் களுக்கு வழங்கிவிட்டால் நாம் (எம் எம் எஸ் குடும்பத்தினர்) வெற்றிபெற்று விடலாம் நான் வெற்றி பெற்றால் நீங்களும் வெற்றி பெற்றதுவாக இருக்கும் என்று கூறி கே கே ஹாஜா அவர்களை சரிகட்டி உள்ளதாக நம்பதகுங்தா வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.



 இதனால் வழக்கறிஞர் முனாப் அவர்கள் (கே கே ஹாஜா அவர்களை) நம்பி மோசம் போய் விட்டார் என்று நோக்கர்கள் கருதுகின்றனர்.

மேலத்தெரு வாசி நம்மிடையே கூறும் பொழுது 


ஒவ்வொரு சட்ட மன்ற பாராளுமன்ற தேர்தலிலும் காங்கிரஸ் வெற்றி பெற்றதும் எம் எம் எஸ் வாடிக்கு தேவையானதை அல்லது எதிர் பார்த்ததை கவனமா அவர்கள் வாங்கி கொள்கின்றனர். ஆனால் அதற்காக ஓட்டுப் போட்ட மக்களோ கொசுக்கடியையும், சாக்கடை நாற்றத்தையும் நோய் நொடியையும் தனதாக்கிக் கொள்கின்றனர் என்று தாஜுல் இஸ்லாம் சங்கத்திற்கு கட்டுப் பட்டா ஓர் வாசகர் தன் ஆதங்கத்தை பகிர்ந்து கொண்டார்.



இறைநேசன் mohamed 


இப்படி ஒரு செய்தியை மேற்கண்ட நபர் பல வலைத் தளங்களில் பதிவிட்டுள்ளார்.அவர் கூற்று உண்மையோ-பொய்யோ அல்லாஹ் அறிவான்.இதற்கிடையில் சகோதரர் அட்வகேட் முனாப் அவர்கள் அதற்கு மறுப்பு வெளியிட்டுள்ளார்.அதனை கீழே காணவும். 



முஸ்லிம் லீக் கட்சியின் ஆதரவுடன் சுயேட்சையாக சேர்மன் பதவிக்குப் போட்டியிடும் சகோ.அட்வகேட் முனாஃப் அவர்கள் சார்பில் இன்று வெள்ளிக்கிழமை (30-09-2011) அதிரையின் அனைத்து ஜும்ஆ பள்ளிகளிலும் விநியோகிக்கப்பட்ட அறிவிக்கை. அதன் விபரம் வருமாறு:

பேரன்புமிக்க அதிரை நகரப் பெரியோர்களே, வாக்காளப் பெருமக்களே! அஸ்ஸலாமு அலைக்கும்.

இன்ஷா அல்லாஹ், நடைபெறவுள்ள அதிராம்பட்டினம் பேரூராட்சி மன்ற தேர்தலில் தலைவர் பதவிக்கு உங்கள் நல்வாழ்த்துக்களுடன் போட்டியிட எண்ணியுள்ளேன். அதன் வெற்றியை முறியடிக்கும் கெட்ட நோக்கத்தில் சில குழப்பவாதிகள் நான் M.M.S குடும்பத்தினரால் நிறுத்தப் பட்டுள்ளேன் என்றும், இந்த தேர்தலைப் பொறுத்தவரை அவர்களின் பினாமி என்றும் அவதூறு பரப்பி வருகின்றார்கள்.

இது முழுமையான பொய் என்று அல்லாஹ்வின்மீது சத்தியம் இட்டு என்னால் நிரூபிக்க முடியும். எனவே, பொதுமக்கள் வீண் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

நமது ஊர் மக்களின் நன்மையைக் கருதி எந்த குறைபாடுகளும் இல்லாமல் எல்லோரும் வியக்கும் வண்ணம் நம் ஊரின் வளர்ச்சியை செம்மை படுத்த வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் உளத்தூய்மையுடன் அல்லாஹ்விற்காக களம் இறங்கி உள்ளேன்.

உங்களின் மேலான ஒத்துழைப்பை நல்கி வெற்றி பெற உதவிடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

இப்படிக்கு,
A.அப்துல் முனாஃப் B.A.B.L
அட்வகேட் & நோட்டரி பப்ளிக்

சகோதரர்களே அவதூறு குறித்து திருக்குரானும் - நபிகள் நாயகம் ஸல் அவர்களும் பல்வேறு வகைகளில் எச்சரித்துள்ளார்கள்.எனவே மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டுகிறோம்.
அவதூறு சொல்பவர்கள் இந்த லிங்கில் சென்று பார்வை இட வேண்டுகிறோம்.



1 comment:

  1. வக்கீல் படித்த ஒருவரை அப்பாவி என்று சொல்லும் அப்பாவியோ உனக்கு படிப்பின் அருமை தெரியவில்லை அதுபோல் வக்கீல் முனபின் அருமையும் புரியவில்லை!

    ReplyDelete