Wednesday, June 23, 2010

அதிரைக்கு கிடைத்தது அங்கீகாரம்

அதிரை. யுனிக்கோட் தேனீ உமர்தம்பி அவர்களுக்கு செம்மொழி மாநாட்டில்: உமர்தம்பி அவர்களின் தன்னலமற்ற தமிழ்ச்சேவைய அங்கீகரிக்கும் வகையில் கோவை உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுடன் இணைந்து நடைபெறும் தமிழ் இணைய மாநாட்டின் ஐந்து அரங்கங்களில் ஒன்றுக்கு உமர்தம்பி அரங்கு என்று பெயரிடப்பட்டுள்ளது

"உலக தமிழ் செம்மொழி மாநாட்டின்" ஒரு நாள் தமிழ் இணைய மாநாடு நடைபெற இருக்கிறது.. 24 ஆம் தேதி... அம்மாநாட்டு அரங்கில் உமர் தம்பி அவர்களின் பணிக்கு சிறப்பு சேர்பிக்கும் வகையில் ஓர் அரங்கிற்கு "உமர் தம்பி அரங்கம்" எனப் பெயர் சூட்டியுள்ளனர் இந்த அங்கீகாரம் கிடைத்தது மிகுந்த மகிழ்ச்சியான செய்தி.

உமர்தம்பி அவர்களுக்கு அங்கீகாரம் கிடைக்கவேண்டி நான் ஒரு பதிவை என் வலைதளமான கலைச்சாரலில் April 21, 2010 8:59.க்கு போட்டேன். அதில் நிறைய சகோதர சகோதரிகளின் ஆதரவும் இருந்தது. அத்துடன் அப்பதிவிலேயே சகோதரர் காஞ்சி முரளி அவர்கள் வலைத்தளப் பதிவில் போட்டால் மட்டும் போதாது. இக்கோரிக்கை நேரடியாகவோ அல்லது பேக்ஸ் மூலமாகவோ தமிழக அரசின் பார்வைக்கு கொண்டு செல்ல வேண்டும். ஏனெனில் இது அரசு சம்மந்தப்பட்டது எதையும் நேரடியாக செய்யவேண்டும் என்றார்கள். அதனால் அவர்களை மெயில்மூலம் தொடர்புகொண்டு என்ன செய்யவேண்டுமென விபரம் கேட்டேன். அவர்கள் மெயில் ஐடிகள் தந்தார்கள்.

இதை இப்படி இப்படிசெய்யவேண்டும். இன்ன இன்னாருக்கு கடிதம் அனுப்பவேண்டுமென விபரமாக சொன்னார்கள். அவர்கள்சொன்னதுபோல் தமிழக துணை முதல்வர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு . Tue, Apr 27, 2010 at 6:40 AM அன்று கடிதம் எழுதினேன்

அக்கடிதத்தோடு, நான் கலைச்சாரலில் போட்ட பதிவிற்கு ஆதரவு தெரிவித்த அத்தனை கருத்துரைகளையும் சேர்த்து மாண்புமிகு துணை முதல்வர் வலைதளத்தின் தலைமை நிர்வாகியான திரு ஹசன் முகம்மது ஜின்னா அவர்களுக்கு, துணை முதல்வர் பெயரில்

Wed, 5 May 2010 10:23:11அன்று உமர் தம்பி தொடர்பான கோரிக்கை அனுப்பினேன்...
இதுதான் நான் துணை முதல்வருக்கு அனுப்பிய கோரிக்கை மனுவிலிருந்து சில.
""மாண்புமிகு தமிழக துணை முதலமைச்சார் திருமிகு. மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு...
என் அன்பான வாழ்த்துக்களுடன்...
வலைதள தமிழை பயன்படுத்தும் தமிழன் என்ற முறையில்,
ஓர் தமிழனுக்கு ஓர் சிறுபான்மை சமூகத்தை சார்ந்தவர்க்கு,
தாங்கள் 'கோவை உலக தமிழ் செம்மொழி மாநாட்டில்' அங்கீகாரம் கிடைக்கும் - தாங்கள் நிச்சயம் செயல்படுத்தி காட்டுவீர்கள் எனும் நம்பிக்கையில்  அயல்நாட்டில் வாழும் தமிழர்களின் சார்பாக
இக்கோரிக்கை மனுவினை தங்கள் முன் வைக்கிறேன்...

அனுப்புனர்:
திருமதி. மலிக்காஃபாரூக்

அடுத்தடுத்து யார் யார்க்கு மெயில் அனுப்பனுமோ அவர்களுக்கெல்லாம் மெயில்கள் அனுப்பினேன். அனுப்பியதோடல்லாமல் இடையிடையே விசாரித்துக்கொண்டேயிருந்தேன்.

அதன் காரணமாய். திரு.ஹசன் முகமது ஜின்னா அவர்கள் மாண்புமிகு தமிழக துணை முதல்வர் அவர்களின் பார்வைக்கு கொண்டுபோய்... துணை முதல்வர் மாநாட்டு செயலாளர் அலாவுதீன் அவர்களுக்கு பரிந்துரை செய்து, இது தொடர்பான குழு அமர்ந்து, இந்த கோரிக்கை குறித்து ஆய்வு செய்து, அதன் தொடர்ச்சியாக மாநாட்டினை முன்னிட்டு மாணவர்களுக்கான கணினி போட்டி நடைபெறுகிறது.. அப்போட்டியில் முதலிடத்தில் வெற்றிபெறும் மாணவருக்கு செம்மொழி இணைய மாநாட்டில் "உமர் தம்பி விருது" வழங்க உத்தேசித்து. பின்பு உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் தமிழ் இணையதள மாநாடு நடைபெறும் ஐந்து அரங்கத்தில் ஓர் அரங்கினுக்கு "உமர் தம்பி அரங்கம்" என உமர் தம்பி அவர்களுக்கு சிறப்பு சேர்த்துள்ளது தமிழக அரசு.

இறைவனின் உதவியால் உமர்தம்பி அவர்களுக்கு இந்த அங்கீகாரத்தை வழங்கிய தமிழக அரசுக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள்.
அதோடு இதற்கு பேருதவியாக இருந்த நல்லுள்ளங்கள். சகோதரர் காஞ்சி முரளி, திருவாரூரில் பிறந்த சகோதரர், வழக்கறிஞர் திரு. ஹசன் முகமது ஜின்னா, உலக தமிழ் மாநாட்டு செயலாளர் திரு. அலாவூதீன். அவர்களுக்கும் எங்களின் மனமார்ந்த நன்றி.

என்னுடைய இந்த அன்பான வேண்டுகோளை ஏற்கச்சொல்லி திரு. ஹசன் முகம்மது ஜின்னா அவர்கள், மாண்புமிகு தமிழக துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களிடம் சொல்லியபோது மறுக்காமல், செய்ய சொல்வதாய் சொல்லியதோடு இல்லாமல் அதை நிறைவேற்றிதந்த

”உமர் தம்பி அரங்கம்” பெயர் வைத்திட முழுக்காரணமாக இருந்த மாண்புமிகு தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களுக்கும், மாண்புமிகு தமிழக துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கும் மற்றும் மாநாட்டு செயலாளர் அலாவுதீன் அவர்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகள்..

ஒரு நல்ல விசயத்துக்காக என்னாலான சிறு உதவி. இந்த நல்ல காரியத்தைச் செய்ய என் மனதில் ஊக்கத்தை ஏற்படுத்திய இறைவனுக்கே என் சிரத்தை தாழ்த்துகிறேன்..

எந்த ஒரு அடியானும் அவன் சக்திக்குமீறி சோதிக்கப்படுவதில்லை.
அதேபோல் எந்த ஒரு நல்ல மனிதருக்கும் அவரின் நல்லதொரு செயல்களுக்கு தகுந்த கூலி வழங்கப்படாமலிருப்பதில்லை என்பது இறை வாக்கு. அதன்படி தான் உயிரோடுயிருக்கும்போது செய்த நல்லதொருக் காரியம், தான் இறந்தபின்னும் உலகவாசிகள் பயனடைவதுபோல் செய்து சென்ற உமர்தம்பி அவர்களுக்கு, தற்போது கிடைத்திருக்கும் அங்கீகாரம் சாலச்சிறந்ததே!

இது நன்மை செய்தவருக்காக இறைவன் அளித்த நற்கூலி அல்கம்துலில்லாஹ். எல்லாப்புகழும் இறைவன் ஒருவனுக்கே...

நான் கலைச்சாரலில் இட்ட பதிவுக்கு ஆதரவு தெரிவித்த அத்தனை நல்லுள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றி நன்றி நன்றி..

டிஸ்கி// எனது தந்தையும் அதிரையென்பதால்
எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி..
இத்துடன் நான் சகோதரர் தாஜுதீன் அவர்களின் பதிவில் இட்ட கருத்துரைகளும். சகோதரரின் பதில்களும்.

அன்புடன் மலிக்கா, Thursday, April 22, 2010
நிச்சியம் கிடைக்கனும். இன்ஷா அல்லாஹ்.
நானும் இப்பதிவை போட்டுள்ளேன்.
http://kalaisaral.blogspot.com/2010/04/blog-post_21.html
தாஜூதீன், Thursday, April 22, 2010
அன்புடன் மலிக்கா.
வருக்கைக்கும், ஆதரவுக்கும் மிக்க நன்றி.
அன்புடன் மலிக்கா, தங்களின் வலைப்பூவிலும் இந்த வெளியிட்டதற்கு மிக்க நன்றி. இந்த முயற்சிகளுக்கு பயன் கிடைக்கும் என்ற நம்பிக்கை பிரகாசமாக உள்ளது.
அன்புடன் மலிக்கா, Sunday, May 02, 2010
அன்புச்சகோதரர் அவர்களுக்கு.
இது சம்மந்தமாக தெரிவிக்கவேண்டி இடத்திற்க்கு என்னால் ஆன ஒரு சிறு முயற்ச்சியை செய்துள்ளேன்.
அந்த முயச்சிக்கு பலன் [கிடைக்குமென்ற நம்பிக்கையிருக்கு]நிச்சயம் கிடைக்க இறைவனை வேண்டிக்கொள்வோம்..
தாஜூதீன், Sunday, May 02, 2010
சகோதரி மலிக்கா அவர்கள், உங்களின் தனிப்பட்ட முயற்சியை நாங்கள் பாராட்டுகிறோம், தேனீ உமர்தம்பி அவர்களுக்கு அங்கீகாரம் கிடைக்க உண்மையில் உங்களை போன்ற மற்ற தமிழ் ஆர்வளர்களின் வேண்டுகோள் நிச்சயம் நிறைவேறும் என்று நம் அனைவரின் நம்பிக்கை.
 நம்பிக்கையின்படியே இறைவன்  நிறைவேற்றித்தந்துவிட்டான்..அல்ஹம்துலில்லாஹ்!

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.


thanks

http://niroodai.blogspot.com/

Sunday, June 20, 2010

ஜெய்லானி காக்காவும்,தனி பாணியும்...........

இவர் பேனாவில் என்ன ஊற்றி எழுதுகிறார் என்றே தெரியவில்லை.அவ்வளவு நளினம்.ஒவ்வொரு கட்டுரையும் தனி ரகம்.சம்பவங்களை சொல்லும் பாங்கு மிக அருமை.

//போனதும்  முட்டை ஃபிரை ஆகிடுமோ
சுட்டதும் அது கேக் ஆகிடுமோ
கடைக்கு வந்த பிறகும் தவிக்கும் இந்தச் மனசு
எதுக்கு இங்கே வெட்டிப் கொக்..கொக்...( கொக்கொரக்கோ..)
தொண்டை தண்ணீர்தானே வத்திப்போச்சு
இன்னும்  ஏது?//

நான் ரசித்து சிரித்த கவிதை.



        //மொபைல் போன் கலாச்சாரமாக மாறியதால்  ஏர் போர்ட் போவதிலிருந்து  விமானம் கிளம்பும் நேரம் வரை பேசிய பேச்சுக்கள எத்தனை எத்தனை..... தனிமையில் வருடங்கள் சில போனாலும் சில மனிநேர பயணம் தவிப்பாய் அல்லவா போகிறது.//


மனம் நமக்கும் கனக்கிறது.சமீபத்தில் ஏர்  இந்தியா விமானம் மங்களூரில் விபத்துக்குள்ளானதை இப்படி விவரிக்கிறார்.

மொத்தத்தில் மகிழ்வோ - சோகமோ எதையும் விலாவரியாக நன்றாக விளக்கும் தன்மை இவரிடம் மேலோங்குகிறது.

நான் ரசிச்சத,நீங்களும் போய்   பார்த்து ரசிங்களேன்.

வாழ்த்துக்கள் ஜெய்லானி காக்கா 
         
http://kjailani.blogspot.com/

Saturday, June 12, 2010

தவறு செய்தார் இங்கிலாந்து கோல்கீப்பர்! * "டிரா' செய்தது அமெரிக்கா

ரஸ்டன்பர்க்: இங்கிலாந்து, அமெரிக்க அணிகள் மோதிய பரபரப்பான உலக கோப்பை லீக் போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் "டிரா'வில் முடிந்தது. இங்கிலாந்து கோல்கீப்பர் ராபர்ட் கிரீன் செய்த தவறு, அமெரிக்காவுக்கு சாதகமாக அமைந்தது.
தென் ஆப்ரிக்காவில் 19வது உலக கோப்பை கால்பந்து தொடர் நடக்கிறது. நேற்று இரவு ரஸ்டன்பர்க்கில் நடந்த "சி' பிரிவு லீக் போட்டியில் இங்கிலாந்து, அமெரிக்க அணிகள் மோதின.
ஜெரார்டு கோல்:
முன்னாள் உலக சாம்பியனான இங்கிலாந்து அணி, எதிர்பார்த்தது போலவே துவக்கத்தில் கலக்கலாக ஆடியது. ஆட்டம் துவங்கிய நான்காவது நிமிடத்திலேயே கேப்டன் ஸ்டீவன் ஜெரார்டு சாமர்த்தியமாக கோல் அடிக்க, இங்கிலாந்து அணி 1-0 என முன்னிலை பெற்றது. 14வது நிமிடத்தில் அமெரிக்காவின் ஆன்யவு தனக்கு கிடைத்த வாய்ப்பை வீணாக்கினார்.
கீப்பர் தவறு:
ஆட்டத்தின் 40வது நிமிடத்தில் அந்த அதிர்ச்சி அரங்கேறியது. அமெரிக்காவின் கிளின்ட் டெம்ப்சி அசுர வேகத்தில் பந்தை அடித்தார். அதனை இங்கிலாந்து கோல்கீப்பர் ராபர்ட் கிரீன் பிடித்து, பின் நழுவவிட, பந்து கோல் லைனை கடந்து உள்ளே செல்ல, அமெரிக்க ரசிகர்கள் உற்சாகத்தில் மிதந்தனர். இங்கிலாந்துக்கு எதிராக கோல் அடித்து வரலாறு படைத்தார் டெம்ப்சி. அதே நேரத்தில் மாபெரும் தவறு செய்த கிரீன், ரசிகர்களிடம் கை அசைத்து மன்னிப்பு கேட்டவாறு சோகத்தில் மூழ்கினார்.
பெக்காம் அதிர்ச்சி:
காயம் அடைந்த நிலையில் களத்திற்கு வெளியில் இருந்து இங்கிலாந்து அணிக்கு உற்சாகம் அளித்த பெக்காம், கீப்பர் செய்த தவறை பார்த்து அதிர்ச்சியில் உறைந்து போனார். இரு அணிகளும் தலா ஒரு கோல் அடிக்க, முதல் பாதி 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிந்தது.
முயற்சி வீண்:இரண்டாவது பாதியில் இங்கிலாந்து வீரர்கள் கோல் அடிக்க கடுமையாக போராடிய போதும், பலன் கிடைக்கவில்லை. 52வது நிமிடத்தில் ஹெஸ்கி, வாய்ப்பை நூலிழையில் நழுவ விட்டார். அமெரிக்க தற்காப்பு பகுதி பலமாக இருந்ததால், லாம்பார்ட், ரூனேயின் முயற்சிகளும் வீணாகின. கோல்கீப்பர் கிரீன் செய்த தவறு, இங்கிலாந்தின் வெற்றியை பறிக்க, போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் "டிரா' ஆனது. இரு அணிகளும் தலா ஒரு புள்ளி பெற்றன.

Friday, June 11, 2010

அர்ஜென்டினா-நைஜீரியா இன்று மோதல்

ஜோகனஸ்பர்க்: உலககோப்பை கால்பந்து தொடரின் இன்றைய முக்கிய லீக் போட்டியில், அர்ஜென்டினா அணி, நைஜீரியாவை எதிர்கொள்கிறது. நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்சி, அர்ஜென்டினாவின் வெற்றிக்கு கைகொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தென் ஆப்ரிக்காவில் 19 வது உலககோப்பை கால்பந்து தொடர் நடக்கிறது. லீக் சுற்றில் இன்று நடக்கும் முக்கிய போட்டியில், குரூப் "பி' பிரிவில் இடம் பெற்றுள்ள அர்ஜென்டினா, நைஜீரியா அணிகள் மோதுகின்றன.
மாரடோனா "வியூகம்':
முன்னாள் வீரர் மாரடோனா தலைமையில், அதிக எதிர்பார்ப்புகளுடன் களமிறங்குகிறது அர்ஜென்டினா அணி. தகுதிச் சுற்றுப் போட்டிகளில், தட்டுத் தடுமாறி வெற்றி பெற்று, உலககோப்பை வாய்ப்பை எட்டியுள்ள அர்ஜென்டினா அணிக்கு, மாரடோனாவின் வியூகங்கள் கைகொடுக்குமா என்பது சந்தேகம் தான். இருப்பினும் நைஜீரியா சற்று பலம் குன்றிய அணி என்பதால், இன்றைய போட்டியில் எளிதில் அர்ஜென்டினா வெற்றி பெற வாய்ப்பு உள்ளது.
மெஸ்சி மந்திரம்:
அர்ஜென்டினா அணியின் நட்சத்திர வீரர் மெஸ்சி, முதல் போட்டியிலேயே முத்திரை பதிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். பார்சிலோன கிளப் அணி சார்பில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இவர், தாய்நாட்டுக்காக பெரிய அளவில் இதுவரை சாதித்து இல்லை. இந்த குறையை நிவர்த்தி செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளார் மெஸ்சி. இவர் தவிர, கேப்டன் ஜேவியர் மஸ்காரனோ, முன்கள வீரர் கார்லஸ் டெவேஸ், மத்திய கள வீரர் டி மரியா, வேரான் ஆகியோர் அர்ஜென்டினாவின் வெற்றிக்கு கைகொடுக்கலாம்.
நைஜீரியா நம்பிக்கை:
இந்த முறை உலககோப்பை தொடரில் கட்டாயம் சாதிப்போம் என்ற நம்பிக்கையுடன் களமிறங்கியுள்ளது நைஜீரியா அணி. அணியின் பயிற்சியாளரான லார்ஸ் லேஜர்பேக், துடிப்புடன் செயல்பட்டு வருவது நைஜீரியாவின் நம்பிக்கையை மேலும் அதிகரித்துள்ளது. கேப்டன் வான்கோ கானு, நைஜீரியாவின் முன்னணி வீரராக அசத்த உள்ளார். இரண்டு முறை ஆப்ரிக்காவின் சிறந்த கால்பந்து வீரருக்கான விருதை வென்ற இவர், முனகளத்தில் கோல் மழை பொழிவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இவருக்கு ஓபாபேமி மார்டின்ஸ், சானிகைட்டு, ஜான் உடேக் ஆகியோர் ஒத்துழைப்பு அளிக்க உள்ளனர். தடுப்பாட்டத்தில் திறமை மிக்க நைஜீரியா அணிக்கு கோல் கீப்பர் வின்சென்ட் என்யேமா கைகொடுப்பது உறுதி.
யாருக்கு வாய்ப்பு?:
ஆப்ரிக்காவின் சிறந்த அணியாக நைஜீரியா இருந்தாலும், இரண்டு முறை (1978, 1986) உலக சாம்பியன் பட்டம் வென்ற அர்ஜென்டினாவின் முன் தாக்குப்பிடிப்பது கடினம் தான். உலககோப்பைக்கு முன்னதாக நட்பு போட்டிகளில், கோஸ்டா ரிகா, ஜமைக்கா, ஜெர்மனி, ஹைதி, கனடா என அனைத்து அணிகளையும் வீழ்த்தி "சூப்பர் பார்மில்' உள்ளது அர்ஜென்டினா. நைஜீரியாவோ பயிற்சி போட்டிகளில் பெருமளவில் "டிரா' மட்டுமே செய்துள்ளது. கடைசியாக வடகொரியாவுக்கு எதிரான ஒரு போட்டியில் வெற்றி பெற்ற உற்சாத்தில் உள்ளது. இதற்கு முன் அர்ஜென்டினா- நைஜீரியா அணிகள் 3 சர்வேதேச போட்டிகளில் மோதியுள்ளன. இதில் அர்ஜென்டினா 2 வெற்றிகளை பெற்றுள்ளது. ஒரு போட்டி "டிராவில்' முடிந்துள்ளது. இதனால் இன்றைய போட்டியில் அர்ஜென்டினா வெற்றியை எட்ட அதிக வாய்ப்பு உள்ளது.
இங்கிலாந்துக்கு சாதகம்:
இன்று நடக்கும் மற்றொரு லீக் சுற்றுப் போட்டியில், குரூப் "சி' இடம் பெற்றுள்ள இங்கிலாந்து, அமெரிக்கா அணிகள் ரஸ்டர்ன்பர்கில் மோதுகின்றன. கடந்த 1966 ம் ஆண்டு உலககோப்பை வென்ற இங்கிலாந்து அதற்குப் பின் பெரிய அளவில் சாதிக்க வில்லை. இந்த முறை கோப்பை வெல்லும் முனைப்புடன் உள்ளது. காயம் காரணமாக நட்சத்திர வீரர் பெக்காம் இல்லாதது அந்த அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தலாம். இருப்பினும் வெய்ன் ரூனேவின் ஆக்ரோஷமான ஆட்டத்தை நம்பியுள்ளது இங்கிலாந்து அணி. கேப்டன் ஸ்டீவன் ஜெரார்டு, ஜான் டெர்ரி, ஹெஸ்கி ஆகியோர் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு போராட உள்ளனர்.
அமெரிக்கா எதிர்பார்ப்பு:
உலககோப்பை கால்பந்து தொடரில் இதுவரை பெரிய அளவில் சாதிக்காத அமெரிக்கா, இந்த முறை எதிர்பார்ப்புடன் களமிறங்குகிறது. இங்கிலாந்துக்கு எதிரான இன்றைய முதல் போட்டியில், கிளைன்ட் டெம்ப்ஸ்கே, மைக்கேல் பிராட்லி, எட்சன் படல், பின்ட்லே ஆகியோர் கைகொடுக்கும் பட்சத்தில் அமெரிக்கா சாதிக்கலாம்.
இங்கிலாந்து, அமெரிக்கா அணிகள் இதுவரை 9 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் அதிகபட்சமாக இங்கிலாந்து 7, அமெரிக்கா 2 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன.
தென் கொரியா-கிரீஸ் பலப்பரீட்சை
போர்ட் எலிசபெத்தில் இன்று நடக்க உள்ள மற்றொரு லீக் சுற்றுப் போட்டியில், குரூப் "பி' பிரிவில் இடம் பெற்றுள்ள தென் கொரியா, கிரீஸ் அணியை எதிர்கொள்கிறது. இப்போட்டியில் ஆசிய அணியான தென் கொரியா வெற்றி பெற அதிக வாய்ப்புகள் உள்ளன. இருப்பினும் முன்னணி வீரர்களின் காயம், அணிக்கு சறுக்கலை ஏற்படுத்தி உள்ளது. கேப்டன் பார்க் ஜி சங் இன்றைய போட்டியில் அசத்தலாம். கிரீஸ் அணி சார்பில் ஜெகாஸ் கைகொடுக்கலாம். உலககோப்பைக்கு முன்னதாக நடந்த பயிற்சி போட்டிகளில் கிரீஸ் பெரிய அளவில் சாதிக்காதது அந்த அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தலாம். தென் கொரியா, கிரீஸ் அணிகள் இதுவரை சர்வதேச போட்டிகளில் மோதியது இல்லை.
"எல்லோ கார்டு' ஸ்பெஷலிஸ்ட்
இங்கிலாந்து, அமெரிக்கா அணிகள் மோதும் இன்றைய போட்டியின், "ரெப்ரியாக' பிரேசிலின் கார்லஸ் சைமன் பணியாற்ற உள்ளார். இவர் மிகவும் கண்டிப்பானவர். வீரர்களுக்கு "எல்லோ கார்டு' வழங்குவதற்கு தயங்காதவர். கடந்த 2006 ம் ஆண்டு நடந்த உலககோப்பை தொடரின் போது, 3 போட்டிகளுக்கு "ரெப்ரியாக' செயல்பட்ட இவர், 17 "எல்லோ கார்டு' மற்றும் ஒரு "ரெட் கார்டு' வழங்கி சர்ச்சை ஏற்படுத்தினார். இன்றைய போட்டியில் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தும் இங்கிலாந்தின் வெய்ன் ரூனே போன்றவர்கள், இவரிடம் தப்புவது மிகவும் கடினம் தான்.
வீரர்களிடம் பணம் திருட்டு
உலககோப்பை கால்பந்து தொடரில் பங்கேற்க, தென் ஆப்ரிக்கா வந்துள்ள கிரீஸ் நாட்டு வீரர்களிடம், திருடர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். உம்லங்காவில் உள்ள ஒரு ஓட்டலில் கிரீஸ் அணி வீரர்கள் தங்கியுள்ளனர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன், வீரர்கள் வைத்திருந்த 1500 யூரோக்கள் (85 ஆயிரம்) திருடு போயுள்ளது. இத்தகவலை போலீசாரும் உறுதி செய்துள்ளனர். தென் ஆப்ரிக்காவில் கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றங்கள் அதிகம் நடக்கும். இந்நிலையில் உலககோப்பையை காண பல்வேறு நாடுகளிலிருந்து சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர். சமூக விரோதிகளிடமிருந்து இவர்களைப் பாதுகாக்க, தென் ஆப்ரிக்கா அரசு திணறி வருகிறது.

Friday, June 4, 2010

அல்லாஹ்வின் வல்லமை,ஏகனை ஏற்பது எப்போது?

அல்குர்ஆன் கூறும் சூராவளிக் காற்று பற்றிய எச்சரிக்கை
உங்களில் யாராவது ஒருவர் இதை விரும்புவாரா? - அதாவது அவரிடம் பேரீச்ச மரங்களும், திராட்சைக் கொடிகளும் கொண்ட ஒரு தோட்டம் இருக்கிறது. அதன் கீழே நீரோடைகள் (ஒலித்து) ஓடுகின்றன. அதில் அவருக்கு எல்லா வகையான கனி வர்க்கங்களும் உள்ளன. (அப்பொழுது) அவருக்கு வயோதிகம் வந்துவிடுகிறது. அவருக்கு (வலுவில்லாத,) பலஹீனமான சிறு குழந்தைகள் தாம் இருக்கின்றன - இந்நிலையில் நெருப்புடன் கூடிய ஒரு சூறாவளிக் காற்று, அ(ந்தத் தோட்டத்)தை எரித்து(ச் சாம்பலாக்கி) விடுகின்றது. (இதையவர் விரும்புவாரா?) நீங்கள் சிந்தனை செய்யும் பொருட்டு அல்லாஹ் (தன்) அத்தாட்சிகளை உங்களுக்குத் தெளிவாக விளக்குகின்றான் (அல்குர்ஆன் 2:266)
  
இங்கு நாம் சிந்திக்க கூடிய அறிவியல் உண்மை என்ன? என்பதையும் சூராவளிகளின் வகைகளையும் அவற்றின் வேகத்தையும் பற்றி ஆராய்ந்து பார்ப்போம் வாருங்கள்!
சூராவளி என்பது என்ன?
சூராவளி என்பது ஒருவகை சுழலும் காற்றாகும். இந்த காற்றின் கட்டுக்கடங்காத வேகத்தில் சுழன்றபடியே மேகங்களை தொட்டுக் கொண்டு நிலப்பரப்பை சூரையாடி பயிர்களையும், வீடுகளையும் நாசம் செய்துவிடும் ஆற்றல் கொண்டவைகளாகும். சூராவளி என்பது ஒரு புனல் (Funnel) வடிவத்தில் காணப்படும் பயங்கரமான சூராவளியின் மேற்பகுதி மேகத்தை தொட்டு கிணறு போன்ற அகன்று காணப்படும் மேலும் இதன் வால் பகுதி கூர்மையான வாள் போன்று வலைந்து காணப்படும். இவற்றிற்கு ஆங்கில்தில் டொர்னடோ (Tornado) என்று பெயர்.
 
சூராவளியின் வேகம்
பல்வேறு சூராவளிகள் குறைந்த பட்ச வேகமாக மணிக்கு 40 மைல்கள் என்ற வேகத்தில் சுழன்றடிக்கும் (அதாவது 64 கி.மீ வேகம்) மற்றும் அதிக பட்சமாக மணிக்கு 110 மைல்கள் என்ற வேகத்தில் சூழன்றடிக்கும் (அதாவது மணிக்கு 177 கி.மீ வேகம்) இந்த வேகம் சுமார் 250 அடி (75 மீட்டர்) நிலப்பரப்பை ஒரு வினாடியில் தாக்கும் வல்லமை படைத்தது.
சூராவளிகள் சுழல ஆரம்பிக்கும் போது எதிர்பாராத விதமாக காற்றின் வேகம் 300 மைல்களாக இருந்தால் இந்த சூராவளிகள் குறைந்தபட்சடம் 1 மைல் (அதாவது 1.6 கி.மீ) பரப்பளவு கொண்ட நிலப்பரப்பை ஒரு வினாடியில் துவம்சம் செய்து அப்படியே மெல்ல நகர்ந்து பல மைல்கள் நகர ஆரம்பிக்கும். இவைகள்தான் சூராவளிகள் அதாவது வானத்தின் சுனாமி என்று கூட கூறலாம்.
 
சூராவளிடொர்னடோ எவ்வாறு உருவாகிறது
ஒரு குறிப்பிடட திசையிலிருந்து வீசக்கூடிய குளிர்ந்த காற்று மற்றும் வரண்ட காற்றும் அதன் எதிர்திசையிலிருந்து வீசக்கூடிய சூடான காற்று மற்றும் ஈரப்பதமான காற்றுடன் மோதுகிறது. இப்படிப்பட்ட பல்வேறு வகையான காற்றுகள் ஒன்றுடன் ஒன்று மோதும்போது அதிலிருந்து ஒரு வெளிப்படும் விசையே சூராவளி எனப்படுகிறது. இந்த மோதல்கள் அதிகமான அளவு நடைபெறும் போது அந்த சூராவளிக்கு பலம் கூடுகிறது. இதற்கு பெயர்தான் டொர்னடோ எனப்படுகிறது.
 
இந்த சூராவளி காற்றின் அறிகுறிகள் என்ன?
டொர்னடோ என்ற பயங்கரமான சூராவளி வீசுவதற்கு முன்னர் ஆலங்கட்டி மழைகள் ஏற்படுமாம் அந்த ஆலங்கட்டியின் தாக்கம் வீடுகளின் கூரைகளை துவம்சம் செய்துவிடுமாம்.
 
இந்த சூராவளி காற்றின் வேகம் என்ன?
வானத்தில் ஒரு பயங்கரமான சூராவளி உருவாகிவிட்டால் அந்த சூராவளி நிலத்தை தொடுவதற்கு எடுத்துக்கொள்ளும் நேரம் வெறும் 12-13 நிமிடங்கள் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். 13ம் வினாடியிலிருந்து இந்த சூராவளி நிலத்தை பதம் பார்த்து அக்குவேறு ஆணிவேராக பிடிங்கி அதை தனக்குள் வசப்படுத்திக்கொண்டு அதே வேகத்தில் நகர ஆரம்பிக்குமாம்.
 
இந்த சூராவளி காற்றின் சக்தி எத்தகையது?
மனிதர்கள், கால்நடைகள் கூட இந்த சூராவளியில் சிக்கி வீசப்படுகிறது. சாலையில் நிருத்தப்பட்டிருக்கும் வாகனங்கள் தூக்கி வீசப்பட்டு வீட்டின் கூரைகளின் மேல் நிற்குமாம் அவ்வளவு பயங்கரமானது இந்த அதிபயங்கர சூராவளிகள்.

சூராவளியின் வகைகள் பார்ப்போம்

SUPERCELL TORNADOES (சூராவளி மேகங்களுடன்)

இந்த வகை சூராவளிகள் SUPERCELL TORNADOES என்று அழைக்கப்படுகின்றன. இந்த வகை சூராவளி மேகங்களை கருவாக கொண்டு சூழன்றடிக்கும்.  ஒரு பக்கம் மேகங்கள் மழைச்சாரல்களை வீசிக்கொண்டும் மற்றொரு பக்கம் சூரைக் காற்றை சூழன்றபடியும் வீசி பல கிலோமீட்டர்களை நாசம் செய்யக்கூடிய ஆற்றல் பெற்றிருக்கும். இந்த வகை சூராவளிகள் ஒரு நிலத்தை தொட்டுவிட்டால் அதன் வேகம் 200 கி.மீ.க்கும் குறைவாக இருக்காது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
 

LANDSPOUT (லேன்ட் ஸ்பவ்ட்)

நிலத்தில் உள்ள மணல் மேடுகளை பதம்பார்த்து மணலை வீசியவண்ணம் சூழன்றடிக்கும் இந்த கொடிய சூராவளிக்கு லேன்ட் ஸ்பவ்ட் என்று பெயர். இது முதலில் கண்ட SUPERCELL TORNADOES-களுக்கு அடுத்தபடியாக வீசக்கூடிய சூராவளியாகும். இவைகள் கனத்த மேகங்களை இழுத்துக்கொண்டு சுழலாமல் பலவீனமான மேகங்களைக் கொண்டு காற்றை சுழன்றடிக்கும் ஆற்றலை பெற்றிருக்கிறது.

GUSTNADO (கஸ்டனாடோ சூராவளி)

இந்த GUSTNADO என்றழைக்கப்படும் சூராவளி பலவீனமானதாகும். இவைகள் சற்று வேகம் குறைந்ததாகவும் விரைவில் நின்றுவிடக் கூடியதாகவும் காணப்படும். இந்த சூரைக்காற்றினால் தூசுப்படலம் சற்று அதிகமாக காணப்படும். இந்த வகை சூராவளிகளுக்கு  மேகங்களுடன் நெருங்கய தொடர்பிருக்காது மாறாக காற்றின் வேகம்தான் இவைகளையும் உருவாக்குகிறது.
 

WATERSPOUT (நீரில் ஏற்படும் சூராவளி)

வாட்டர் ஸ்பவ்ட் எனப்படும் இந்த சூராவளிகள் நீர்நிலைகளில் ஏற்படக்கூடிய சூராவளிகளாகும். இவைகள் நிலத்தில் வீசக்கூடிய SUPERCELL எனப்படும் அதிபயங்கர சூராவளிகளின் வடிவ மேயாகும் ஆனால் இவைகள் நீரில் சூழன்றடிப்பதால் இதனால் ஏற்படும் பாதிப்பகள் மனிதனுக்கு மிக குறைவுதான்.  இந்த சூராவளிகள் நிலத்தை தொடுவதற்குள் அதன் சக்தியை இழந்து விடுகின்றன.
 

DUST DEVILS

இந்த வகை சூராவளிகளுக்க டஸ்ட் டெவில் என்று பெயர் அதாவது தூசுகளின் சாத்தான். இந்த சூராவளி அதிகமாக பாலைவனங்களில் வீசுவதுதான் வழக்கம். இவைகள் உச்சி வெயில் மற்றும் மதிய நேரங்களில் அதிகமாக வீசுகின்றன. இவைகள் மணிக்கு 70 மைல்கள் வேகத்தில் சுழன்றடிக்கும் ஆற்றல் பெற்றிருக்கின்றன. இவைகள் மிகவும் பலவீனமான சூராவளிகளாகும் இவைகளுக்கு மேகங்களுடன் எந்த தொடர்பும் காணப்படாது மாறாக காற்றின் அழுத்தம் இவ்வகை சூரைக் காற்றை வீசிக்கொண்டு சில நிமிடங்களில் தன் சக்தியை இழந்துவிகின்றன. தூசுப்படலத்தை தட்டிச் செல்வதால் கண்களுக்கு மிகவும் பாதிப்புகள் ஏற்படுத்துகின்றன. சற்று அதிகமாக வீசினால் ஒரு வாகத்தை தலை குப்புற கவிழ்த்துவிடும் ஆற்றல் பெற்றிருக்கும்.
 
FIREWHIRLS
நெருப்புச் சுறாவளிகள் அதாவது சூராவளி சூழலும் போது அதன் உராய்வினால் காய்ந்த இழை தழைகள் கருகி நெருப்பு உண்டாகிறது இந்த நெருப்புச் ஜுவாலைகளை சூராவளி தன்னுள் இழுத்தபடியே பிற இடங்களுக்கு பரவி நாசத்தை ஏற்படுத்தும் ஆற்றல் பெற்றுள்ளன. இவைகள் பெரும்பாலும் விவசாய நிலங்கள் மற்றும் காடுகள் உள்ள பகுதிகளில் பேரிழப்பை ஏற்படுத்திவிடுகின்றன.
இந்த நெருப்புச் சூராவளிகள் 1923ம் ஆண்டு ஜப்பான் நாட்டில் உள்ள டோக்கியோவின் Hifukusho-Ato என்ற கிராமத்தில் சுமார் 38,000த்திற்கும் மேற்பட்ட மனிதர்களை வெரும் 15 நிமிட இடைவெளியில் நெருப்பினால் பொசுக்கி அழித்துள்ளது. இவைகள் பெரும்பாலும் 10 முதல் 50 மீட்டர் அகல உயரமும் 10 அடி அகலம் கொண்டதாகவும் காணப்படும். இச்சுறாவளிகள் சூழன்றடிக்கும் போது காற்றின் வேகம் மணிக்கு 160 கீ.மீ என்ற வேகத்தில் காணப்படும். 49 அடி உயரமுள்ள மரத்தை கூட சில வினாடிகளில் அழித்துவிடும்.
 
அல்லாஹ் அருள்மறையில் விவரிக்கும் சூராவளியின் தாக்கம் பற்றி மீண்டும் ஒருமுறை படித்து நல்லுணர்வு பெற முயலலாமே
 உங்களில் யாராவது ஒருவர் இதை விரும்புவாரா? - அதாவது அவரிடம் பேரீச்ச மரங்களும், திராட்சைக் கொடிகளும் கொண்ட ஒரு தோட்டம் இருக்கிறது. அதன் கீழே நீரோடைகள் (ஒலித்து) ஓடுகின்றன. அதில் அவருக்கு எல்லா வகையான கனி வர்க்கங்களும் உள்ளன. (அப்பொழுது) அவருக்கு வயோதிகம் வந்துவிடுகிறது. அவருக்கு (வலுவில்லாத,) பலஹீனமான சிறு குழந்தைகள் தாம் இருக்கின்றன - இந்நிலையில் நெருப்புடன் கூடிய ஒரு சூறாவளிக் காற்று, அ(ந்தத் தோட்டத்)தை எரித்து(ச் சாம்பலாக்கி) விடுகின்றது. (இதையவர் விரும்புவாரா?) நீங்கள் சிந்தனை செய்யும் பொருட்டு அல்லாஹ் (தன்) அத்தாட்சிகளை உங்களுக்குத் தெளிவாக விளக்குகின்றான் (அல்குர்ஆன் 2:266) 
 
 இஸ்லாம் உண்மையான மார்க்கம் என்பதற்கு இந்த சூராவளிகளும் ஆதாரமாக திகழ்கிறது! எனவே இந்த உண்மைகளை அறிந்த நீங்கள் எப்போது இஸ்லாத்திற்குள் வருவீர்கள்!

BY MOHAMED YOUSUF ALI
    PHILADELPHIA USA 

Thursday, June 3, 2010

பயன்படுத்திக்கலாமே

மனப் பிறழ்வு, மனக் குழப்பம் ஆகிய உளவியல் சார்ந்த நோய்களுக்கு உரிய ஆலோசனைகளும் மாணவர்கள் 100க்கு 100 மதிப்பெண்கள் எடுக்க வேண்டுமெனில் என்ன செய்ய வேண்டும் என்பதற்கான ஆலோசனைகளும் முனைவர் அப்துல்லாஹ் வழங்கி வருகிறார். அணுக வேண்டிய முகவரி:

Prof. Dr. Abdullah (Periyar Dhasan),
109, Mahalakshmi Nagar,
Thiruverkadu, Chennai 600077
Tamilnadu, India
Tel : 044-26801919; Cell : +91-9444146444
Email : vperiyardhasan@yahoo.com