Thursday, September 29, 2011

மனித நேய மக்கள் கட்சி வேட்பு மனு தாக்கல்


 தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் 17 மற்றும் 19ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது  இந்நிலையில் நெல்லிக்குப்பம் நகர மன்ற உறுப்பினர் பதவிக்கு அப்பகுதி முஸ்லிகள் சார்பிலும் மற்றும் மனித நேய மக்கள் கட்சி சார்பிலும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

நெல்லிக்குப்பம் 22 வது வார்டுக்கு முகமது உசேன், 23 வது வார் டுக்கு முகமது சிராஜ், 8 வது வார்டுக்கு அப்துல் ரஹிம், 4 வது வார்டுக்கு பஷிர் அகமது, 21 வது வார்டுக்கு முஜிபூர் ரகுமான் ஆகியோர் மனு தாக்கல் செய்தனர் மேலும் சுயேட்சை வேட்பாளர்களாக 26 வது வார்டுக்கு அன்சாரி, 24 வது வார்டுக்கு ஜிலானி பேகம், 19 வது வார்டுக்கு ஜூனைதா பேகம் ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
இவர்கள் தமுமுக மாவட்ட செயலாளர் ஷேக்தாவுது தலைமையில் கொத்பாபள்ளிவாசலில் இருந்து புறப்பட்டு, நெல்லிகுப்பம் நகராட்சி அலுவலகத்துக்கு வந்து தேர்தல் அதிகாரியிடம் வேட்பு மனு தாக்கல் செய்தனர்..

No comments:

Post a Comment