Thursday, July 5, 2012

உயிரின் வேர்கள் -6


கண்கலங்கிய பெருமானார்
சஹாபா கண்மணிகளிடம் 
அறிவுரை வழங்கலானார்கள் ...
உற்ற நண்பர்கள்
நபியவர்களின்
 தோழர்கள் 
யாரசூலே!  அல்லாஹ்வின் அழைப்பு 
வெகு அருகில் உள்ளதாலோ 
எங்களுக்கு
நல்லுபதேசம் 
எச்சரிக்கையுடன் தருகிறீர்களோ ..
பகர்ந்தனர் சஹாபா பெருமக்கள் 


நன்றாக கேளுங்கள் 
என் அருமை தோழர்களே ..!
கருப்பரேயானாலும் 
தலைவராக வந்தால்
அதை ஏற்று நடந்திடல் 
வேண்டும் 
இறையச்சம் பேண வேண்டும்


காத்தமுன் நபி நாதர் (ஸல் )
சொல்லதனை
கடமை வீர சஹாபாக்கள் 
கண்ணியமாய் ஏற்றனரே.


சஹாபா பெருமக்கள் .
சிறப்பு தன்னை 
பெருமானார் சொன்னதை
நாம் விளங்கிடுவோம் 
சஹாபா பெருமக்கள் 
ஒரு கையளவு தர்மங்கள்
 மலையளவு மதிப்பாகும் .

சஹாபா பெருமக்கள்
 மேன்மக்கள் மேன்மக்களே ..!
நாம் செய்யும் 
மலையவு தர்மங்கள்
சஹாபாக்களின்
கையளவு தர்மம் போல் 
மலையளவு தர்மம் செய்து
சஹாபாவின் கையளவு ஆகிடுவோம் ..!
அபூபக்கர் சித்தீக் (ரலி )அவர்கள்
வரலாறு 
பெரும் ஏடு  
இச்சிறு கவியில்
சிந்தைக்கு ஏற்றி விட 
என்னால் முடியாது
விவரங்கள் பல அறிய 
நூலதனை படித்திடு வீர்
சிறு குறிப்பு தந்து
 நானும் உமர் (ரலி)வாழ்வை நாம்
பார்த்திடுவோம்.
அபூபக்கர் சித்தீக் (ரலி )பற்றி 
சிறு குறிப்பு தந்து 
நானும் அடுத்து அத்யாயம் 
செல்கின்றேன்

அபூபக்கர் சித்தீக் (ரலி )சிறப்பு பற்றி 
சிறு நிகழ்வு
விளக்கம் கேட்டு ஒரு பெண் .
நபிகளிடம் சென்றார் 

தங்கள் சமூகத்தில்
தாங்கள் இல்லையென்றால் 
யாரிடம் விளக்கம்
பெறுவது என்று அவள் கேட்டதுமே 
அபூபக்கரிடம் (ரலி )சென்று கேள் 
என்றுரைத்தார்கள் நன்னபி நாயகம் (ஸல் )
வள்ளல் நபி நாயகத்தின் (ஸல்) ..
உற்றதொரு தோழராக
நல்லதொரு சீடராக
சித்தீக் எனும் தோழரவர்
 நாளும் அவர் வாழ்ந்து வந்தார் ...
காலங்கள் செல்ல செல்ல
கருணை நபி (ஸல்) நாயகத்தின் ..
வபாத்து காலம் நெருங்கியது-நிழலாக இருந்த 
 நண்பர் வெளியில் சென்றிருக்க ..
வள்ளல் நபி நாயகமும் ..
உலகை விட்டு பிரிந்தார்கள் 
உலுக்கும் அந்த செய்தியுமே ...
உற்ற தோழர் அபூபக்கர் சித்தீக் (ரலி )அவர்களிடம்
சென்றதுமே ..சட்டென புரவியேறி ...
பாலை மணல் புழுதி பறக்க ..
விரைந்திட்டார்  இறை தூதர் வீடு நோக்கி ..
வள்ளல் நபி நாயகத்தின் ..ஜனாஸா ..
போர்வையதில் போர்த்திருக்க ..
பார்த்ததுமே பதை பதைதிட்டார் ...
பயகம்பர் உடல் நோக்கி விரைந்திட்டார்
அருமை நாயகதினையே கடைசியாக
பார்த்திடவே முகம் திறந்து முகம் பார்த்து
நெத்தியில் முத்தமிட்டார் ...
வள்ளல் நபி முகத்தினிலே ...
கஸ்தூரி வாசம் வீசுவது நிற்கவில்லை ..
ஜனாஸா ..குணமில்லா ..மனம் கமிழுகிறது
என மனமுருகி நவின்றார்கள் ...
தூதர் நபி பிரிந்த சோகம் ஒரு புறம் ..
தூக்கி நிறுத்தும் பொறுப்பு மறுபுறம் ..
இஸ்லாத்தின் கொள்கை தன்னை
தொடர்ந்து நாளும் போதிக்கவே ..
நபி விட்டுசென்ற பணிதன்னை
கடைசி உம்மத் வரை இருப்பதினால்
கடும் சுமையாய் நினைக்க வில்லை ..
நபியவர்கள் கண்ணுக்கு பின் ..
முதலாம் கலிபாவாக ...
அபூபக்கர் சித்தீக் (ரலி )பதவியதை ஏற்று கொண்டார்
மென்மையான அபூபக்கர் சித்தீக் (ரலி )
ஆட்சி அருமையாய் அமைந்தது 
ஜகாத் விசயத்தில் 
செல்வந்தர்கள் மறுத்ததற்கு
கடினமான ஆணையிட்டு 
மக்கள் குறை தீர்த்து வைத்தார்

இரு வருடத்தில்
 அபூபக்கர் சித்தீக் (ரலி)
இறைவனடி சேர்ந்தார்கள் ..

(இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி வூன் )
அடுத்து .....உமர் (ரலி ) உயிரின் வேர்கள் தொடரும் 

அதிரை சித்திக் 

No comments:

Post a Comment