Saturday, July 7, 2012

இவர்கள்தான் நபிகள் நாயகம் ஸல்


மனிதனின் முதல் தேவை உணவு தான்உணவு சுவைபட இருக்க வேண்டும் என்பதற்காகத் தான் மனிதன் அதிகம் சம்பாதிக்கிறான்.முறைகேடுகளிலும் ஈடுபடுகிறான்.
நபிகள் நாயகம் (ஸல்அவர்கள் ஆட்சித் தலைவராகவும்ஆன்மீகத் தலைவராகவும் உயர்ந்து நின்ற காலத்தில் அவர்கள் எத்தகையஉணவை உட்கொண்டார்கள் என்பதை முதலில் ஆராய்வோம்.
 
'மாமன்னர்கள் உண்ட உணவுகளை நபிகள் நாயகம் (ஸல்அவர்கள் கண்களால் கூட கண்டதில்லைசராசரி மனிதன் உண்ணுகின்றஉணவைக் கூட அவர்கள் உண்டதில்லைஎன்பதற்கு அவர்களின் வரலாற்றில் ஏராளமான சான்றுகள் உள்ளன.

'
எங்கள் வீடுகளில் மூன்று மாதங்கள் அடுப்புப் பற்ற வைக்கப்படாமலே கழிந்திருக்கிறதுஎன்று நபிகள் நாயகம் (ஸல்அவர்களின் மனைவிஆயிஷா (ரலிகூறினார். 'என் சிறிய தாயாரேஅப்படியானால் உயிர் வாழ எதை உண்பீர்கள்?' என்று நான் கேட்டேன்அதற்கு ஆயிஷா (ரலி) 'பேரீச்சம் பழமும்தண்ணீரும் தான் எங்கள் உணவாக இருந்தனசில நேரங்களில் பக்கத்து வீட்டைச் சேர்ந்த தோழர்கள் கறந்த பாலைஅன்பளிப்பாகத் தருவார்கள்அதை அருந்துவோம்என விடையளித்தார். அறிவிப்பவர் : உர்வா நூல் : புகாரி 2567, 6459

'
நபிகள் நாயகம் (ஸல்அவர்கள் தோல் நீக்கப்பட்ட கோதுமையில் தயாரான ரொட்டியைச் சாப்பிட்டதுண்டா?' என்று நபிகள் நாயகத்தின்பணியாளர்களில் ஒருவரான ஸஹ்ல் பின் ஸஅத் (ரலிஇடம் கேட்டேன்அதற்கு அவர் 'நபிகள் நாயகம் (ஸல்அவர்களை இறைவன் தனதுதூதராக அனுப்பியது முதல் அவர்கள் மரணிக்கும் வரை லிக்கப்பட்ட மாவில் தயாரான ரொட்டியைச் சாப்பிட்டதேயில்லைஎன்றார். 'நபிகள் நாயகம் (ஸல்அவர்களின் காலத்தில் உங்களிடம் சல்லடைகள் இருந்தனவா?' என்று கேட்டேன்அதற்கவர் 'நபிகள் நாயகம் (ஸல்)அவர்களை அல்லாஹ் தனது தூதராக அனுப்பியது முதல் அவர்கள் சல்லடையைப் பார்த்ததில்லைஎன்றார். 'தோல் நீக்கப்படாத கோதுமைமாவைச் லிக்காமல் எப்படிச் சாப்பிடுவீர்கள்?' என்று நான் கேட்டேன்அதற்கவர் 'தீட்டப்படாத கோதுமையைத் திருகையில் அரைப்போம்.பின்னர் வாயால் அதை ஊதுவோம்உமிகள் பறந்து விடும்எஞ்சியதைத் தண்ணீரில் குழைத்துச் சாப்பிடுவோம்என்று விடையளித்தார்.அறிவிப்பவர் : அபூ ஹாஸிம் நூல் : புகாரி 5413
 
'நபிகள் நாயகத்தின் குடும்பத்தினர் நபிகள் நாயகம் (ஸல்அவர்கள் மரணிக்கும் வரை மூன்று நாட்கள் தொடர்ந்து எந்த உணவையும்வயிறார உண்டதில்லைஎன நபிகள் நாயகத்தின் நெருங்கிய தோழர் அபூ ஹுரைரா (ரலிகூறுகிறார். நூல் : புகாரி 5374
 
'நபிகள் நாயகம் (ஸல்அவர்கள் மதீனாவுக்கு வந்தது முதல் அவர்கள் மரணிக்கும் வரை அவர்களது குடும்பத்தினராகிய நாங்கள் தொடர்ந்துமூன்று நாட்கள் வயிறார உண்டதில்லைஎன நபிகள் நாயகத்தின் மனைவி ஆயிஷா (ரலிகூறுகிறார். நூல் : புகாரி 5416, 6454
'ஹஜ் பெருநாள் பண்டிகையின் போது கறிக் குழம்பில் மீதமாகக் கிடக்கும் ஆட்டுக் காலை பதினைந்து நாட்களுக்குப் பிறகு (நபிகள் நாயகம்(ஸல்அவர்கள் சாப்பிடுவதற்காகஎடுத்து வைப்போம்அதை நபிகள் நாயகம் (ஸல்அவர்கள் சாப்பிடுவார்கள்என்று நபிகள் நாயகத்தின்மனைவி ஆயிஷா (ரலிகூறினார். 'இதற்கு என்ன அவசியம் நேர்ந்தது?' என்று அவர்களிடம் கேட்கப்பட்டதுஅவர் சிரித்து விட்டு 'குழம்புடன்கூடிய ரொட்டியை நபிகள் நாயகம் (ஸல்அவர்களின் குடும்பத்தினராகிய நாங்கள் மூன்று நாட்கள் வயிறார உண்டதில்லையேஎனவிளக்கமளித்தார். நூல் : புகாரி 5423
 
நபிகள் நாயகம் (ஸல்அவர்களிடம் பத்தாண்டுகள் பணியாளராக இருந்த அனஸ் (ரலிஇடம் நாங்கள் சென்றோம்ரொட்டி தயாரிப்பவர்ரொட்டி தயாரித்துக் கொண்டிருந்தார்எங்களை நோக்கி 'சாப்பிடுங்கள்என்று அனஸ் (ரலிகூறி விட்டு 'நபிகள் நாயகம் (ஸல்அவர்கள்மிருதுவான ரொட்டியைச் சாப்பிட்டதில்லைதமது கண்களால் எண்ணெய்யில் பொறிக்கப்பட்ட ஆட்டைப் பார்த்ததில்லைஎனக் கூறினார்.அறிவிப்பவர் : கதாதா நூல் : புகாரி 5385, 5421, 6457.
 
நபிகள் நாயகம் (ஸல்அவர்கள் பசியோடு இருந்ததை அறிந்து) 'எனது வீட்டிருந்து கோதுமை ரொட்டியையும்வாசனை கெட்டகொழுப்பையும் கொண்டு சென்றேன்அவர்களின் வீட்டில் ஒரு சந்தர்ப்பத்திலும் ஒரு மரக்கால் கோதுமையோஅல்லது வேறு ஏதேனும்தானியமோ இருந்ததில்லைஎன்று நபிகள் நாயகத்தின் பணியாளர் அனஸ் (ரலிகூறுகிறார். நூல் : புகாரி 2069, 2508
 
நபிகள் நாயகம் (ஸல்அவர்கள் பள்ளிவாசலில் வயிறு ஒட்டிய நிலையில் படுத்திருந்ததை நான் பார்த்தேன்உடனே என் தாயார் உம்முசுலைம் (ரலிஇடம் வந்து இதைக் கூறினேன்அதற்கவர் 'என்னிடம் ஒரே ஒரு ரொட்டித் துண்டும்சில பேரீச்சம் பழங்களும் தான் உள்ளன.நபிகள் நாயகம் (ஸல்அவர்கள் மட்டும் வருவார்களானால் அவர்களின் வயிறு நிரம்பும்யாரையேனும் உடன் அழைத்து வந்து விட்டால்அவர்களுக்குப் போதாமல் போய் விடும் என்றார்என நபிகள் நாயகத்தின் பணியாளர் அனஸ்
(
ரலிஅறிவிக்கிறார்.நூல் : முஸ்லிம் 3802
 
நபிகள் நாயகம் (ஸல்அவர்களின் நெருங்கிய தோழராக இருந்த அபூ ஹுரைரா (ரலிஒரு கூட்டத்தினரைக் கடந்து சென்றார்அவர்கள்முன்னே பொறிக்கப்பட்ட ஆடு வைக்கப்பட்டிருந்ததுஅவர்கள் அபூ ஹுரைராவையும் சாப்பிட அழைத்தனர். 'நபிகள் நாயகம் (ஸல்அவர்கள்தீட்டப்படாத கோதுமை ரொட்டியையே வயிறார சாப்பிடாத போது நான் இதைச் சாப்பிட மாட்டேன்என அபூ ஹுரைரா (ரலிமறுத்துவிட்டார். நூல் : புகாரி 5414
நபிகள் நாயகம் (ஸல்அவர்கள் தமது குடும்பத்தினரிடம் 'குழம்பு ஏதும் உள்ளதா?' எனக் கேட்டனர். 'வினிகரைத் தவிர வேறு ஏதும்எங்களிடம் இல்லைஎன்று குடும்பத்தினர் கூறினார்கள்அதைக் கொண்டு வரச் செய்து அதைத் தொட்டுக் கொண்டு சாப்பிட்டார்கள். 'வினிகர்சிறந்த குழம்பாக இருக்கிறதேஎன இரு முறை கூறினார்கள். நூல் : முஸ்லிம் 3824
நான் எனது வீட்டின் நிழலில் நின்று கொண்டிருந்தேன்அப்போது நபிகள் நாயகம் (ஸல்அவர்கள் என்னைக் கடந்து சென்றார்கள்.அவர்களைக் கண்டதும் அவர்களை நோக்கிச் சென்று அவர்களின் பின்னால் நடக்கலானேன். 'அருகே வாஎன்று அவர்கள் அழைத்ததும்அருகில் சென்றேன்என் கையைப் பிடித்துக் கொண்டு நடந்தார்கள்தமது வீட்டுக்குச் சென்றவுடன் 'காலை உணவு ஏதும் இருக்கிறதா?' என்றுகேட்டார்கள்வீட்டிலுள்ளவர்கள் 'இருக்கிறதுஎன்று கூறி விட்டு மூன்று ரொட்டியைக் கொண்டு வந்து வைத்தார்கள். 'குழம்பு ஏதும் உள்ளதா?'என்று நபிகள் நாயகம் (ஸல்கேட்டார்கள். 'சிறிதளவு வினிகரைத் தவிர வேறு ஏதும் இல்லைஎன்று குடும்பத்தினர் கூறினார்கள்நபிகள்நாயகம் (ஸல்அவர்கள் 'அதைக் கொண்டு வாருங்கள்என்றார்கள்வீட்டிலுள்ளவர்கள் கொண்டு வந்தனர்எனக்கும்அவர்களுக்கும் தலாஒரு ரொட்டியை முன்னால் வைத்தார்கள்மூன்றாவது ரொட்டியைச் சரி பாதியாக்கி ஒரு பாதியை எனக்கு முன்னால் வைத்து விட்டுஇன்னொரு பாதியைத் தமக்கு வைத்துக் கொண்டார்கள் என்று ஜாபிர் (ரலிஅறிவிக்கிறார். நூல் : முஸ்லிம் 3826
 
'நபிகள் நாயகம் (ஸல்அவர்களின் முகத்தில் பசியின் அறிகுறியைக் காண்கிறேன்எனவே அவர்களுடன் சேர்த்து ஐந்து நபர்களுக்கானஉணவைத் தயார் செய்வீராக!' என்று அபூ ஷுஐப் (ரலிதமது ஊழியரிடம் கூறினார்பின்னர் நபிகள் நாயகம் (ஸல்அவர்களை விருந்துக்குஅழைத்தார்அப்போது அவர்களுடன் (விருந்துக்கு அழைக்கப்படாதஇன்னொருவரும் சேர்ந்து கொண்டார். 'இவர் எங்களைப் பின்தொடர்ந்துவந்து விட்டார்இவருக்கும் அனுமதியளிப்பதாக இருந்தால் அனுமதியளிப்பீராகஇல்லாவிட்டால் இவர் திரும்பிச் சென்று விடுவார்!' எனநபிகள் நாயகம் (ஸல்அவர்கள் கூறினார்கள்அப்போது அபூ ஷுஐப் (ரலி) 'இவருக்கும் அனுமதி அளிக்கிறேன்என்றார்.நூல் : புகாரி 2081, 2456, 5434, 5461
ஒரு நாள் நபிகள் நாயகம் (ஸல்அவர்கள் வெளியே புறப்பட்டனர்அப்போது அபூபக்ர் (ரலி), உமர் (ரலிஆகியோரைக் கண்டனர்இந்தநேரத்தில் வீட்டை விட்டு வெளியே வரக் காரணம் என்னஎன்று அவர்களிடம் நபிகள் நாயகம் (ஸல்அவர்கள் கேட்டனர்அவ்விருவரும்பசிஎன்றனர்அதற்கு நபிகள் நாயகம் (ஸல்அவர்கள் 'நீங்கள் எதற்காக வெளியே வந்துள்ளீர்களோ அதற்காகவே நானும் வந்துள்ளேன்'என்றார்கள்... ஹதீஸ் சுருக்கம்.நூல் : முஸ்லிம் 3799
இந்த வரலாற்றுச் சான்றுகளைப் பல கோணங்களில் நாம் அலசிப் பார்க்க வேண்டும். 
ஏழ்மையிலேயே காலத்தைக் கழிக்கும் ஒருவர் மிகவும் எளிமையான உணவை உட்கொள்வதில் எந்த ஆச்சரியமும் இல்லை.
ஆனால் நபிகள் நாயகம் (ஸல்அவர்கள் 25 வயது முதல் நாற்பது வயது வரை மிகப் பெரிய செல்வந்தராக இருந்தார்கள்காய்ந்து போனரொட்டியைச் சாப்பிடும் நிலையில் அவர்கள் இருந்ததில்லை.
செல்வச் செழிப்பை ஏற்கனவே அனுபவித்து பழக்கப்படாதவாய்ப்பும் வசதியும் கிடைக்கப் பெறாத ஒருவர் இத்தகைய உணவுப் பழக்கத்தைக்கடைப்பிடித்தால் நாம் ஆச்சரியப்பட முடியாது.
ஆனால்நபிகள் நாயகம் (ஸல்அவர்கள் வலிமை மிக்க ஆட்சித் தலைவராக இருந்தார்கள்அந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி எல்லாவசதிகளையும் அனுபவிக்கும் வாய்ப்பு அவர்களுக்கு இருந்ததுஅவர்கள் அனுபவித்தால் யாரும் எதிர்க் கேள்வி கூட கேட்க மாட்டார்கள்என்ற நிலையும் இருந்ததுஅவர்கள் உருவாக்கிய அரசாங்கக் கருவூலத்தில் ஒரு வேளை பணம் இருந்திருக்காது என்று யாரும் நினைத்துவிட வேண்டாம்.
அவர்கள் உருவாக்கிய அரசாங்கம் தன்னிறைவு பெற்றிருந்தது போல் உலகில் இன்று வரை எந்த அரசாங்கமும் தன்னிறைவு பெற்றதில்லை. (இதைப் பின்னர் நாம் விளக்குவோம்)

அப்படி இருந்தும் தோல் நீக்கப்படாத கோதுமை ரொட்டியைச் சாப்பிட்டு அந்த மாமன்னரால் எப்படி வாழ்க்கை நடத்த முடிந்தது?

குழம்பு கூட இல்லாமல் வினிகரில் தொட்டு அதையும் ருசித்துச் சாப்பிடுவது எப்படி அவர்களுக்குச் சாத்தியமானது?

காய்ந்த ரொட்டியும்வினிகரும் கூட இல்லாமல் வெறும் பேரீச்சம்பழத்தை மட்டும் சாப்பிட்டுக் கொண்டுபச்சைத் தண்ணீரை மட்டும்குடித்துக் கொண்டு பல மாதங்களை அவர்களால் கழிக்க முடிந்தது எப்படி?

அந்த உணவைக் கூட தினமும் சாப்பிட முடியாத நிலையை எப்படி அவர்களால் சகித்துக் கொள்ள முடிந்தது?

ஒரு நாள் தயாரிக்கப்பட்ட பழைய குழம்பை பதினைந்து நாட்களுக்குப் பிறகு பயன்படுத்துவதற்கு நிகரான வறுமையான வாழ்க்கையைஉலக வரலாற்றில் நம்மால் காண முடியுமா?

முதலாளியின் பசியைக் கண்டு அவரிடம் வேலை பார்ப்பவர் பரிதாபப்பட்டு தனது வீட்டிலிருந்து உணவு கொண்டு வந்து கொடுக்கும்நிலையை உலகில் எந்த மன்னரேனும்எந்த முதலாளியேனும் சந்தித்திருக்க முடியுமா?

காய்ந்த ரொட்டியையும்தொட்டுக் கொள்ள வாசனை ஏதும் இல்லாத உருக்கிய கொழுப்பையும் தமது வேலைக்காரர் வீட்டிலிருந்து வாங்கிபசியை நீக்கிய தலைவர் கற்பனைக் கதையில் கூட இருக்க முடியுமா?

பசிக் களைப்பை அவர்களின் முகத்தில் கண்டு சாதாரணக் குடிமகன் ஒருவர் விருந்துக்கு அழைக்கும் அளவுக்கு அவர்களின் வாழ்க்கைஎளிமையாக இருந்துள்ளது எப்படி?
இந்தச் சான்றுகளை ஒரு முறைக்குப் பல முறை படித்துப் பாருங்கள்நபிகள் நாயகம் (ஸல்அவர்கள் தமது பதவியைப் பயன்படுத்திபொருள் திரட்டவில்லைசெல்வத்தைக் குவிக்கவில்லை என்பது விளங்கும்.
இந்த உணவுப் பழக்கத்தை மட்டும் வைத்து நபிகள் நாயகம் தமது பதவியைப் பயன்படுத்தி செல்வத்தைக் குவிக்கவில்லை என்று எப்படிக்கூற முடியும்எளிமையான உணவுப் பழக்கம் உடைய எத்தனையோ பேர் வளமான நிலையில் உள்ளனரேவேறு வகையானசுகபோகங்களை அனுபவிக்கின்றனரேஅது போல் நபிகள் நாயகமும் தமது பதவியின் மூலம் செல்வத்தைக் குவித்து வேறு வகையான சுகபோகங்களை அனுபவித்தார்களா என்றால் அதுவும் இல்லை.

1 comment:

  1. அற்புதமான ஆக்கம்..

    அனைவரும் படித்து பார்க்க பேனா முனை

    தளத்திற்கு வருகை தந்திட வேண்டும் ...

    ReplyDelete