Friday, November 30, 2012

தியாகம்








தீயகம் களைவதே
தூயநல் தியாகமாம்
ஐயமில் விருப்பமும்
ஆங்குதான் உதயமாம்

சோம்பலின் எதிரியாம்
சொர்க்கத்தைத் தருவதாம்
காண்பதில் அரியதாம்
கர்ப்பத்தில் உரியதாம்

தூய்மையின் பிறப்பிடம்
தியாகத்தின் உறைவிடம்
தாய்மையின் சிறப்புதான்
தரணிக்கே முதலிடம்

விழுப்புண் போலவே
வியர்வை விழவே
உழைக்கும் தந்தையும்
உயர்வின் தியாகி

தோணியாய்க் கரைசேர்க்கத்
தோழமையின் உணர்வுடன்
ஏணியாய் இருந்தார்கள்
ஏற்றிவிட்ட  தியாகிகள்

வானத்தின் தியாகமதை
வடித்துவைக்கும் மேகமழை
தானத்தின் செடிகளெலாம்
தியாகவிதை   வீசியதே

பசித்தவரின் துயரத்தைப்
பசித்திருக்கும் பயிற்சியினால்
ருசித்துணரும் தியாகத்தை
ருசித்தவர்தான் உணர்ந்திடுவர்

இறையின் கட்டளை
இறுதிக் கடமையை
முறையாய்ச் செய்வதும்
முழுமைத் தியாகமே

அபுல்கலாம் பின் ஷைக் அப்துல் காதிர்
"கவியன்பன்" கலாம், அதிராம்பட்டினம்( பாடசாலை), அபுதபி (தொழிற்சாலை)
அலை பேசி: 00971-50-8351499 / 056 7822844
வலைப்பூந் தோட்டம்: http://www.kalaamkathir.blogspot.com/ (கவிதைச்சோலை)
மின்னஞ்சல்: kalaamkathir7@gmail.com

1 comment:

  1. தியாகம் கவிதையே ஒரு தியாகம்

    ReplyDelete