Saturday, February 27, 2010

அறஞ்சொல்லி

என்மனம் புகழ்ந்தால் புல்லரிக்காது,
இகழ்ந்தால் இறந்துபோகாது!

சகோதரர் சக்தியின் தளத்தின் முக அறிவிப்பு இது.உள்ளே சென்றதும் கட்டிப்போடுகிறார் நம்மை.சிந்தனையை தூண்டும் எளிய நடையில் கவிதைகள்,கருத்துரைகள் என.

தளத்தின் பெயரும் வித்தியாசமாகவே உள்ளது,

அறஞ்சொல்லும் நெஞ்சத்தான் ..!

நான் கவிஞனும் இல்லை, நல்ல ரசிகனும் இல்லை..!


சொல்ல வரும் செய்தி எல்லாமும் அறமானது,உண்மையானது என சொல்ல வருவதை தலைப்பிலேயே கோடிட்டு காட்டி விட்டார்.அவருடைய எண்ணமும்,அவர் பிற தளங்களில் இடும் பின்னூட்டத்தை அவதானிக்கும் போதும் இதை உணர முடிகிறது.


அவரிடம் எந்த வெறியோ,காழ்ப்புணர்வோ இல்லை என்பதும்,பரந்த,திறந்த மனதுடன் ஏனைய மார்க்கத்தை அலசும் உன்னத பாங்கு அவருக்கு இருக்கிறது என்பதும் மிக பாராட்டுக்குரியது.அந்த மனித எனக்கு பிடித்திருக்கிறது,அதனால் இந்த தளத்தை வெளியிட ஆவல் பூண்டேன்.


இனி அவருக்கு வந்த சில பின்னூட்டங்கள்

thenammailakshmanan சொன்னது…

//கண்டதெல்லாம் கடவுள் இல்லை - நாம்
கண்டதிளெல்லாம் கடவுள் இல்லை//

உண்மை சக்தி

பாத்திமா ஜொஹ்ரா சொன்னது…

அருமை

goma சொன்னது…

அருமையாக எழுதுகிறீர்கள்.அடிக்கடி எழுதுங்கள்.

-----------------------------------------------

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்


கண்டதெல்லாம் கடவுள் இல்லை - நாம்
கண்டதிளெல்லாம் கடவுள் இல்லை

காண முடிந்தது கடவுள் இல்லை - நம்
கருத்துக்கு இசைந்தது கடவுள் இல்லை

பிணம் ஆனவன் கடவுள் இல்லை - சிறு
மனம் கொண்டவன் கடவுள் இல்லை

மதம் கொண்டவன் கடவுள் இல்லை - பெரு
சினம் கொண்டவனும் கடவுள் இல்லை

அகமிருப்பது கடவுள் இல்லை - வெறும்
சுகம் தருவது கடவுள் இல்லை

உருகொண்டது கடவுள் இல்லை - யாரும்
உருகொடுப்பது கடவுள் இல்லை

ஓராயிரம் கடவுள் இல்லை - இது
அறியாதவர் சொல் கடவுளே இல்லை.

நெத்தியடி,வேறன்ன சொல்ல.
ஆகட்டும் சக்தி,வெளுத்துக்கட்டுங்கள்.

http://sakthispoem.blogspot.com/

1 comment:

  1. i was little busy on my business. sorry for the late reply, well, this is really a honer to me. thank you very much...

    ReplyDelete