Saturday, June 30, 2012

உயிரின் வேர்கள் -2


அறியாமையை போக்கி .....
நன் நெறியை நோக்கி ...
இஸ்லாத்தின் வெற்றி ..
வள்ளல் நபி முகம்மது (ஸல் ) அவர்கள் ..
மறைவு செய்தி கேட்ட உமர் ரலி  
வாள் எடுத்தார்.
மறைந்தார் என சொன்னவனை 
கொய்திடுவேன் என
சிம்மமென கர்ஜித்தார் ,,
சினம் வேண்டாம் உமர் ரலியே 
சினம் ஏன் என உணரு ...
சினத்துக்கும்
சிந்தனைக்கும் 
அறிவான இஸ்லாத்தில்
அழகான இடமுண்டு 
என 
சித்தீக் (ரலி ) குளிர செய்தார்
ஒவ்வொரு ஆன்மாவும் ...
மரணத்தை ருசித்தே ஆக வேண்டும் 
என்று
குர் ஆனில் கூறப்பட்டதை 
நாம் நன்கறிவோம் ..
வள்ளல் நபி வாக்குப்படி 
நாம் நடப்போம் 
வாரும் மென்றார் ..

சினம் தணித்தார் 
உமர் ரலியும் 
மூத்தோர் சொல் கேட்பதுவும்
 அறிவார்ந்த நற்பண்பு
வீரத்தின் விளைநிலமாம் உமர் (ரலி ) அவர்கள்
விவேகத்தின் 
உரைவிடமும்தான்
முகம்மது (ஸல் ) அவர்கள் 
உற்ற தோழர்களின்
உறுதுணை நன்குணர்ந்து
தான் செய்த பணிதம்மை
தோழர்கள் தொடவார்கள் என 
தனக்கு இறை அழைப்பை
என்றோ அவர் சொல்லிருந்தார் ,
தூதர் சொன்ன வாக்கு தன்னை 
அற்புதமாய்
செய்திடவே 
வள்ளல் நபி ஆசானிடம்
செம்மையாக கற்றிருந்த சஹாபாக்கள் 
நபி
விட்டு சென்ற பணிதம்மை செய்திடவே 
அற்புதமாய்
பயிற்சி தன்னை வள்ளல் நபி (ஸல் ) வாழ்நாளில்
கொடுத்திருந்தார் ..
தான் விட்ட பணிதன்னை 
தடையில்லாமல்
சென்றிடவே செம்மையாக வகுத்திருந்தார்
செம்மல் நபி (ஸல் ) நாதருமே
வெற்றிடமாய் இருந்ததில்லை ..வள்ளல் நபி (ஸல்) சேவையுமே
வகை சூடி வாழ்ந்த வேந்தர்
ஆனாலும்,
வேந்தராக சொகுசு காணவில்லை
அவ்வழியே நபி தோழர்களும் நடந்து வந்த சரித்திரமே
உயிரின் வேர்கள் 
மாந்தரே கேளீரோ!

விண்ணகம் அழைத்தான் 
இறைவன்
சென்று வந்தேன்,
தொழுகை கொண்டு வந்தேன்
அங்கு நபி ஆதம் அலை முதற்கொண்டு
பல நபிமார்கள் கண்டு வந்தேன்,
இன்னும் சொர்க்கம்,நரகம் 
நிலவும் காட்சிகளை 
பார்த்து வந்தேன்
என்றுரைத்தார்கள் அண்ணல்
மாற்றாரோ மறுதலிக்க
"விண்ணகம் சென்றேன் என 
அண்ணலா சொன்னார்கள்
அப்படியென்றால் "ஆம்"உண்மைதான்
என அடித்து சொன்னார்கள்
அபூபக்கர் ரலியுமே.

சத்தியம் சொன்ன 
உத்தமர் அவரின் 
பெயரின் பின்னே 
சித்திக் எனும்
செல்லப் பெயரும் 
சேர்ந்து கொண்டது...
அந்த உத்தமரின் 
சரிதம் கேளீரோ
மாந்தரே-வாருங்கள் 


தொடரும் இன்ஷா அல்லாஹ் 

அதிரை சித்திக்  

No comments:

Post a Comment