Friday, June 29, 2012

உயிரின் வேர்கள்..........உன்னத சஹாபாக்களின் உளமார்ந்த வரலாறு,கவிதை வடிவில்

உயிரின் வேர்கள் ....!
இஸ்லாம் எனும் விருட்சம் ..
வளர்ந்த விதம் ,பெரும் உழைப்பு ..,
பாலையில் பசுமைக்கு போராடி ..
வென்ற வரலாறு 

உயிரின் வேர்கள் ..
******
விதை போட்டு வளர்க்க ..
நல்ல நிலம் வேண்டும் 

நீர் வேண்டும் ..
தோண்டி பார்க்கும் நிலத்தில் ..
பா
றை யில்லா குணம் வேண்டும் ..

பாறையிலும் பாலையிலும் ..,
பசுமை புரட்சி செய்த வரலாறு
உயிரின் வேர்கள் ..,
******************
பல தெய்வ கொள்கைகள் ..

பெண்ணுக்கு நிந்தனை
சிசு கொலை ,

குல பெருமை பேசி - பழிவாங்கும்
மடந்தை நிறைந்த காலத்தில்
மனிதம் தழைக்க 

உழைத்த வரலாறு
உயிரின் வேர்கள் .,
*******************
இறைவன் எனக்களித்தான் 

இறைதூது எனும்பதவி ...
என்றுரைத்தார் எம்நபி (ஸல்)...

உண்மையே சொன்னீர்கள்
என நவின்ற நற் தோழர் அபூபக்கர் (ரலி )போன்றோரின்
வரலாறே உயிரின் வேர்கள் ..
****************************
செல்வத்தை துறந்து ..,
உத்தமராம் நபி நாதர் (ஸல் )வழிவந்த
வடித்த செந்நீர் ஓட்டம்தான்
உயிரின் வேர்கள்
************************
சிறு நிலத்தில் தான் நினைக்கும்
செடி கொடிகள் வளர்க்கதான் ...
விவசாயி முயற்சிப்பான் 

கடும் மழையும்
கொடும் வெயிலும் 

தாக்காமல் போராடும் விவசாயி

செடிகொடிகள் வாடினால் 

அவன் வாடி போவான் .
இந்நிலத்தில் பயிர் செய்து 

நமகேதும் பலனில்லை
இடம்பெயர்ந்து நாடோடியாய்

 நல்நிலம் தேடிடுவான் ..
புயல் 
மழை  என்றாலும் ..

கடு கோடை என்றாலும் ..
பயிர் தன்னை உயிராகிய வரலாறு ..
உயிரின் வேர்கள்
*********************
வினோதங்கள் யாதென்றால் ..
விவசாயி தியாகத்தில் விளைபயிரும்
பங்கெடுத்த வரலாறுதான் ..
உயிரின் வேர்கள் ..
*********************
வன் காபிர்  வதைத்த போதெல்லாம்...
வாடாமல் வல்ல இறை பெயர்சொல்லி
உயிர்தாங்கி ..

இஸ்லாத்திற்கு உயிர் கொடுத்த வரலாறு
உயிரின் வேர்கள் ..  
*****************
 உணவளிக்காத போதும் ...
உறவுகளை 
முறித்துக் கொண்ட போதும்

உயிருக்கு உலை வைத்த போதும் ..
கொள்கை குணம் மாறாமல் -
உண்மைநபி (ஸல் )நாதர்
வழிவந்த நபி தோழர் சஹாபாக்களின் வரலாறே
உயிரின் வேர்கள் ...,



அதிரை சித்திக் 




No comments:

Post a Comment