Saturday, December 8, 2012

மனிதனுக்கு நீதி வாழட்டும்!( நூல் வெளியீட்டு விழாவுக்கு என் வாழ்த்துப்பா


அன்புள்ள டாக்டர் இப்றாஹிம் அன்சாரி காக்கா அவர்கட்கு,
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹமத்துல்லாஹி வபரக்காத்தஹு

தங்களின் நூல் வெளியீட்டு விழாவில் அடியேன் கலந்து கொள்ளாவிட்டாலும், என் கவிதையை என் சார்பாக மூத்த தமிழறிஞர் என் ஆசான் அதிரை அஹ்மத் காக்கா அவர்கள் வாசித்து அவ்விழாவில் என் பங்களிப்பை நிறைவு செய்ய வேண்டுகிறேன்.


தலைப்பு: மனிதனுக்கு நீதி வாழட்டும்!


வெடிக்கின்ற வென்னீரின் ஊற்று வெள்ளம்;
.....விரிந்துமணம் வீசுகின்ற மலரின் உள்ளம்;
துடிக்கின்ற தீக்கனலின் வெம்மை வீச்சு;
.....சொடுக்கிவிட்ட சிந்தனையின் சீறும் மூச்சு;
நடிக்கின்ற வொருசாரார்ச் செய்யும் கேட்டை
.....நயபுடைக்கு(ம்) இந்நூலில் சுழற்றும் சாட்டை
வடிக்கின்ற மறுசாரார்க் கண்ணீர் போக்க
......மறுபடியும் எழுதிடுவாய் நூலும் நீரே!



(வேறு)



புதிய உலகமே செய்வோம் - இந்தப்
பூமியின் வளமெலாம் பொதுவாம்
எதிரிகள் எவருமில் லாமை - என்னும்
இனிய திசையில் செல்வோம்
சாதியினைச் சொல்லியே ஏய்ப்பார் - ஏதோ
சாதியுர்வு என்றுதான்  மாய்ப்போர்
சதியினால் எளியரைத் தூற்றுவோர் - இங்கே
சகலமும் தமக்கெனச் சாற்றுவோர்

சிந்திக்க வைத்தத் தொடர் - மக்கள்
சேவைக்கு ஏற்றுஞ் சுடர்
நிந்திக்கா(த) வண்ண நூலாம் - அறிவுக்கு
ஞாயிற்றின் கீற்றைப்  போலாம்

அறிவியல் சிந்தனை தழைக்கும் - கல்வி
அளித்தநற் புத்தியும் செழிக்கும்
நெறிமுறை தந்திடும் புத்தகம் -  வாழ்வின்
நெடுகிலும் காட்டிடும் தத்துவம்
பேச்சிலும் மூச்சிலும் நாடு - மேன்மை
பெற்றிட என்றுமே நாடு
தீச்சுடர் போலவே கேடு - அழித்திட
திறமையாய்ச் சாற்றிடும் ஏடு



--
அபுல்கலாம் பின் ஷைக் அப்துல்காதிர்

“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்( பாடசாலை), அபுதபி (தொழிற்சாலை)
அலை பேசி: 00971-50-8351499 / 056 7822844
வலைப்பூந் தோட்டம்: http://www.kalaamkathir.blogspot.com/ (கவிதைச்சோலை)
மின்னஞ்சல்: kalaamkathir7@gmail.com

1 comment:

  1. மனிதனுக்குள்ளும் நீதி வாழட்டும்

    ReplyDelete