Saturday, September 22, 2012

முயலாமையைத் தோல்வியடைச் செய்வோம்!



விரிக்காதவரைச்
சிறகுகள் கூடப் பாரம்தான்
விரித்து விட்டால்
வானம்கூட தொட்டுவிடும் தூரம்தான்
முறுக்காதவரை
மீசை கூட வேசம் தான்
முறுக்கி விட்டால்
வீரம் தானாய் பேசும்தான்
பெருக்காதவரை
வீடுகூட நரகம் தான்
பெருக்கிவிட்டால்
“பர்கத்” பொங்கும் சுவர்க்கம்தான்
படிக்காதவரைப்
பாடம்கூடச் சுமைதான்
படித்து விட்டால்
பாடம் சொல்லும் வாழ்க்கைப் பாடம்தான்
முடிக்காதவரைச்
செயல்கள்கூட முடக்கம்தான்
முடித்து விட்டால்
முயலாமைக்குத் தோல்வியே என்றாகும்!
உழாதவரை
நிலம் கூடப் புஞ்சைத்தான்
உழுது விட்டால்
புஞ்சையும்கூட நஞ்சைதான்
எழாதவரை
உடல்கூடப் பிணம்தான்
எழுந்து விட்டால்
பணம்தேடும் யாக்கைதான்
பிறக்காதவரைக்
குழந்தைகூடக் கருதான்
பிறந்து விட்டால்
கருகூட முழுமையான உருதான்
கறக்காதவரைப்
பால்கூட மடியில்தான்
கறந்துவிட்டால்
பாலும் பல்கிப்பெருகும் சத்தாகத் தான்
முயலாதவரைக்
கால்களும் முடமேதான்
முயன்று விட்டால்
உன்வாழ்வும் முன்னேற்றப் “படிக்கட்டில்” தான்!
அபுல்கலாம் பின் ஷைக் அப்துல்காதிர்

“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்( பாடசாலை), அபுதபி (தொழிற்சாலை)
அலை பேசி: 00971-50-8351499 / 056 7822844
வலைப்பூந் தோட்டம்: http://www.kalaamkathir.blogspot.com/ (கவிதைச்சோலை)
மின்னஞ்சல்: kalaamkathir7@gmail.com

No comments:

Post a Comment