Sunday, April 3, 2011

அத்தீன்


அளவற்ற அருளாளனும்நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்...
1. 
அத்தியின் மீதும்ஒலிவ மரத்தின் மீதும் சத்தியமாக!
2. 
தூர் ஸீனீன் மலையின் மீதும் சத்தியமாக!
3. 
அபயமளிக்கும் இவ்வூர் மீதும் சத்தியமாக!34
4. 
மனிதனை அழகிய வடிவில் படைத்தோம்.
5. 
பின்னர் அவனை இழிந்தவனிலும் இழிந்தவனாக்கினோம்.
6. 
நம்பிக்கை கொண்டு நல்லறம் செய்தோரைத் தவிர. அவர்களுக்கு முடிவு
 இல்லாத கூலி உண்டு.
7. 
இதன் பின்னர் தீர்ப்பு நாளைஉம்மால் எப்படிப் பொய்யெனக் கருத முடியும்?
8. 
தீர்ப்பளிப்போரில் அல்லாஹ் மேலான தீர்ப்பளிப்பவன் இல்லையா?
திருக் குர்ஆன் விளக்கவுரை  அத்தீன்-அத்தியாயம்  95
Source Link Pls Click Here -

உலகில் இறைவனை வணங்கு வதற்காக முதன் முதலில் எழுப்பப்பட்ட
ஆலயம் கஅபா. இந்த ஆலயம் மக்களின் அபய பூமியாகத் திகழும் எனத்
திருக்குர்ஆன்-கூறுகிறது.
கஅபாஅபய பூமி என அறிவிக்கப்பட்டு 14 நூற்றாண்டுகளைக் கடந்த
பின்பும்எத்தனையோ ஆட்சி மாற்றங்கள் நடந்த பின்பும் அது
இன்றளவும் அபய பூமியாகவே அமைந்துள்ளது. 14
நூற்றாண்டுகளாக எந்தத் தாக்குதலுக்கும் உள்ளாகாத வரலாற்றுச்
சிறப்புமிக்க ஆலயமாகவும் அது இருந்து வருகிறது. திருக்குர்ஆன் கூறியவாறு
அது அபய பூமியாகவே நீடித்து வருவது திருக்குர்ஆன் இறைவனின்
வார்த்தைகள் தாம் என்பதற்குச் சான்றாக அமைந்துள்ளது.
(இக்குறிப்புக்குரிய வசனங்கள்: 2:125, 3:97, 5:97, 14:35, 28:57, 105:1-5, 106:4)
-----------------------------------------
ஆலிவ் எண்ணெய் 
சருமத்திற்கு வெண்மையும், கேசத்திற்கு போஷாக்கும் அளிக்கிறது.. இதன் இலை மேற்புறம் கரும் 
பச்சை வண்ணத்திலும் அடிப்புறம் வெளிர் பச்சை நிறத்திலும் இருக்கும். கனியின் நடுவில் கடினமான 
விதையும் சுற்றி திடமான சதைப் குதியும் இருக்கும். கனிகள் உருண்டை, நீளுருண்டை எனப் பலவடிவில் 
இருக்கும். காய் பச்சை நிறத்திலும், கனிந்த பின் பழுப்பு, சிவப்பு அல்லது கறுப்பு நிறத்திலுமிருக்கும்.
இலைகளில் எண்ணெய்ச் சத்து அதிகம். தவிர தாதுப் பொருள்களும், வைட்டமின் ’, வைட்டமின்
சி’, முதலான ஊட்டச்சத்துக்களும் அடங்கியுள்ளன. ஆலிவ் மரம் நன்கு வளர சூரிய ஒளியும், உலர் நிலமும், 
நல்ல கோடை வெயிலும், மிதமான குளிரும் தேவை. ‘திரவத்தங்கம் என்று இந்த எண்ணெய் மதிக்கப்படுகிறது.
மார்பகப் புற்றுநோயைத் தடுக்கும் ஆலிவ் எண்ணெய்

தூய்மையான ஆலிவ் எண்ணெயில் காணப்படும் பாலிஃபீனால், மார்பகப் புற்றுநோயை வராமல் தடுப்பதுடன், 
மார்பகப் புற்றுநோய் இருப்பவர்களுக்கு குணப்படுத்துவதற்கும் தவும் என்று கண்டறியப்பட்டுள்ளது.

இந்த பாலிஃபீனால் மார்பகப் புற்றுநோய் செல்களை அழிக்கும் தன்மை கொண்டதாக உள்ளது என்று 
கண்டறியப்பட்டுள்ளது.
 ஸ்பெயின் நாட்டின் ஐசிஓ அமைப்பும், கிரனடா பல்கலைக்கழகமும் ணைந்து நடத்திய ஆய்வு முடிவு 
இதனைத் தெரிவித்துள்ளதுஆலிவ் எண்ணெயில் இருந்து பிரித்து வடிகட்டப்பட்டு, பின்னர் திடப் 
பொருளாக்கப்பட்டதைக் கொண்டு நடத்திய ஆய்வில், மார்பகப் புற்றுநோயை தடுக்கும் ஆற்றம் 
இருப்பது தெரிய வந்துள்ளது.
எனவே மார்பகப் புற்றுநோய் வராமல் இருக்கவும், அந்நோய் உள்ளவர்கள் அதில் இருந்து நிவாரணம் 

No comments:

Post a Comment