Saturday, July 13, 2013

சாதி ஒழிய இஸ்லாம் அன்றி வேறில்லை!

சாதியை ஒழித்து விடலாம் என்றென்னி
அன்றையிலிருந்து இன்றைக்கு வரை பல
தலைவர்கள் என்னென்னமோ செய்து பார்த்தார்கள்!
இருப்பினும் சாதியை ஒழிக்க முடிந்ததா?

கல்வியை கற்றுக்கொண்டு உயர்ந்த பொறுப்பில்
தாழ்த்தப்பட்டவர்கள் வந்து விட்டால் சாதியை
ஒழித்து விடலாம் என்றென்னி அவர்களுக்ககாகவே
தனி மதிப்பெண் பட்டியலை உருவாக்கினார்கள்!
இருப்பினும் சாதியை ஒழிக்க முடிந்ததா?

அதிகார பதவிகளில் தாழ்த்தப்பட்டவர்களை அமர்த்தி
விட்டால் சாதியை ஒழித்து விடலாம் என்றென்னி
அவர்களுக்காகவே அரசியலில் ரிசர்வு தொகுதி
அமைக்கப்பட்டு பெரிய பதவிகளில் அமர்த்தினார்கள்!
இருப்பினும் சாதியை ஒழிக்க முடிந்ததா?

சமத்துவபுரம் என்ற ஒன்றை உருவாக்கி அதில்
பல சாதிக்காரர்களை குடியமர்த்தி சகஜமாக பழக
விட்டால் சாதியை ஒழித்து விடலாம் என்றென்னி
நாடெங்கும் பல சமத்துவ புரங்களை உருவாக்கினார்கள்!
இருப்பினும் சாதியை ஒழிக்க முடிந்ததா?

என்னென்னமோ திட்டங்கள் இதுவரை சாதியை
ஒழித்த பாடில்லை!

ஆனால் இஸ்லாம் எப்படி சாதியை ஒழித்தது?
உலகில் வாழக்கூடிய 200 கோடி முஸ்லிம்களிடம்
எந்த ஏற்றத்தாழ்வும் இல்லையே காரணம் என்ன?
அதற்கு இந்த ஒற்றை வரிதான் காரணம்!!!

மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை
ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம்;
நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும்
பொருட்டு. பின்னர், உங்களைக் கிளைகளாகவும்,
கோத்திரங்களாகவும் ஆக்கினோம்; (ஆகவே) உங்களில்
எவர் மிகவும் பயபக்தியுடையவராக இருக்கின்றாரோ,
அவர்தாம் அல்லாஹ்விடத்தில், நிச்சயமாக மிக்க
கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிபவன்
(யாவற்றையும் சூழந்து) தெரிந்தவன். திருகுர்ஆன் 49:13

உலகத்தில் சாதியை ஒழிக்கக்கூடிய சக்தி இஸ்லாமிடம்
மட்டும் தான் உள்ளது! முடிந்தால் அதை அமல் படுத்துங்கள்.

No comments:

Post a Comment