Thursday, May 10, 2012

ஜாஹிலிய்யா பேச்சும்,எழுத்தும்





ஒன்று) மார்க்க அறிவு இல்லாமை.

நமக்கு நம் மார்க்கம் எப்படி நடக்கச் சொல்கிறது என்று தெரியாத காலமெல்லாம் - அந்த அறியாமை இருக்கும் போதெல்லாம் மந்திர-தந்திர,தாயத்து,தட்டுக்கள் இன்னும் இது போன்ற மூட நம்பிக்கைகள் இருந்து கொண்டே இருக்கும்.ஆனால் எப்பொழுது குரான்,ஹதீஸ் இப்படித்தான் போதனை செய்கிறது என நாம் தெரிந்து கொண்டு விடுவோமேயானால் இன்ஷா அல்லாஹ் விழித்துக் கொண்டுவிடுவோம்.உதாரணமாக,சுமார் இருபது வருடங்கள் முன்பு இருந்த அறியாமை இருள் இன்று கொஞ்சம் விலகி இருக்கிறது,காரணம் - குரான்,ஹதீஸ் பற்றிய விழிப்புணர்வு.ஆக மார்க்க அறிவு (குரான்-சுன்னா அடிப்படையில்)இல்லையன்றால் மேற்கண்ட முசீபத்துக்கள் நம்மை ஆட்கொண்டுவிடும்.


இரண்டு) மார்க்கத்தில் சமரசம் செய்தல்,

வாழ்க்கையில் பலவற்றில் சமரசம் செய்து கொள்ளலாம்,ஆனால் அல்லாஹ்,ரசூல் ஸல் அவர்கள்,குரான்-ஹதீஸ்,(இஸ்லாம்)விஷயத்தில் நாம் சமரசம் செய்து கொள்ள முடியாது.உதாரணமாக,நமக்குத் தெரிந்தவர்,வேண்டப்பட்டவர் ஒருவர் ஒரு விஷயத்தை எழுகிறார் அல்லது சொல்கிறார் என வைத்துக் கொள்வோம்.அப்படி சொல்லப்படும்,எழுதப்படும் செய்தியை படிப்பவர்கள் முதலில் அதனை குரான்-ஹதீஸ் கண் கொண்டு நோக்கி,மார்க்க முரண் இல்லாத கருத்தாக இருக்கிறதா என பார்க்க வேண்டும்.(அல்லாஹ்,குரானில் கூறப்படும் விஷயங்களாக இருந்தாலும் சிந்தியுங்கள் எனக் கூறுகிறான்).அது சரியான கருத்தாக இருப்பின்,அதை ஊக்கப்படுத்தலாம்,மற்றவர்களிடம் கொண்டு போகலாம்.
ஒரு சமயம்,அது மார்க்கத்திற்கு முரணாக,குரான்,ஹதீஸ் கருத்துக்கு மாற்றாக இருந்தால்,அந்தக் கருத்தை எத்தனை பேர் ஆதரித்தாலும்,நாம் எதிர்த்து வாதிடவேண்டும்,நம்மை திட்டினாலும்,எள்ளி நகையாடினாலும் அல்லாஹ்வுக்காக நாம் போராடிக்கொண்டே இருக்க வேண்டும்.எழுதினவர் நம்ம சாச்சா,பெரியப்பாதானே,நமக்கு தெரிந்தவர்தானே என்று கொண்டு ,மார்க்க விஷயத்தில் சமரசம் பண்ணிக் கொண்டால் ,அந்த மூடக் கருத்துக்கள் நம் மக்களிடையே பரவி,இதுவும் இஸ்லாத்தில் உள்ளதுதானோ எனும் நிலைக்கு வரும்.அல்லாஹ் பாதுகாப்பானாக.

மூன்று) இது போன்ற வார்த்தை பிரயோகம்.

தாயத்துக் கட்டு,சூடம் கொழுத்து,அணைத்து சத்தியம் செய்,படி கட்டு,( அப்ப நான் என்ன மாரியம்மன் கோயில்லயா “படிக்கட்டு”கிறேன்?)இன்னும் இது போன்றும் இன்னும் மற்ற சில வார்த்தைகளையும் நாம் பயன்படுத்துவதால்,புழங்குவதால் நாம் அறியாமையின் காரணமாக் முன்பு செய்த சில தீய பழக்கங்களை அதே பொருள்தரக் கூடிய,அல்லது அதற்க்கு நெருக்கமாக பொருள் வரக் கூடிய வகையில் இருக்கும் போது ,அல்லாஹ் நம்மை மன்னிக்கட்டும்,நாம் பாவியாகிவிடுகிறோம்.அதனால் இது எவ்வளவு விபரீத செயல்.

அல்லாஹ்,இனி மது அருந்தக் கூடாது என தடை விதித்தவுடன்,சாராய ஊரல்களை போட்டு உடைத்தனர் நம் கண்மணிகள் சஹாபா பெருமக்கள்.ஆனால் மது குடிக்கும் கோப்பைகள்,குடுவைகளை வீட்டில் வைத்து இருந்தார்கள்.ஆனால் நம் தலைவர் நபிகள் நாயகம் ஸல் அவர்கள் அந்தக் கோப்பைகளையும் (மதுக் கோப்பை)இனி பயன்படுத்தக் கூடாது என தடை போட்டார்கள்.சாராயத்தை போட்டு உடைத்தாயிற்று,எனவே அந்த கிண்ணங்களில் தண்ணீர் ஊற்றி வைக்கலாமே?ஏன் நபிகள் நாயகம் ஸல் அவர்கள் - மொத்தமாக தடை செய்தார்கள்.இங்கேதான்,நமக்கு நம் தலைவரின் சைக்காலஜி திறன் புரிகிறது.சாராயம் இனி இல்லை என்றாலும்,அந்தக் குடுவை வீட்டில் இருந்தால்,அந்தக் குடுவையை பார்க்கும் போதெல்லாம் சாராய நினைவு வந்து விடும்,அப்படி வந்து,மீண்டும் குடிக்க நேர்ந்து விடக் கூடாது என்ற கணிப்பு.சுபானல்லாஹ்.

அடுத்து,நம் தலைவர் ஸல் அவர்கள், அய்யாமுல் ஜாஹிளிய்யாஹ் (அறியாமைக் காலம்)கால வார்த்தைகளையும் பேச தடை செய்துள்ளார்கள்.அந்த வார்த்தைகள் எல்லாமும் ஷிர்க்கை அடிப்படையாக,மூட வழக்கத்தை அடிப்படையாக கொண்டவை.நாம் மேற்சுட்டி காட்டிய வார்த்தைகளை யார் பயன்படுத்தியது,மூலம் யார் என இப்போது பாருங்கள்.ஒன்று காபிர்கள்,மற்றது குரான்,சுன்னாவை பேணாத,பித் அத களையும்,தர்காக்களையும்,தரீக்காக்களையும் கட்டி மேயும் எத்தர்கள்,(மார்க்க அறிவு இல்லாதவர்கள்).ஆக அந்த வார்த்தைகளையும்,அன்று அவர்கள் புழங்கிய அந்த வார்த்தைகளையும் நாம் ஒப்பிட்டால்,விடை ஒன்றே.ஆக-இப்படி நாம் பயன்படுத்துபோது,நம்மிடம் அந்த செயல் இல்லை என்றாலும் - அந்த நினைப்பு இருக்கிறது,அதனால்தான் அந்த வார்த்தைகளை நாம் பேசுகிறோம்.எனவே,நாம் திருந்தி விட்டோம் என எண்ணுகிறோம்,ஆனால் உண்மையில் அப்படி இல்லை.ஏனென்றால்,அந்த ஜாஹிலிய்யா வார்த்தைகள் நம் உள்ளத்தில் ஊடுருவிக் கொண்டு,சமயம் வரும்போதெல்லாம் வந்து எட்டிப் பார்க்கிறது,அதனால் ஈமான் பலவீனமைடைந்து,அந்த மூட வார்த்தைகள் வலுப்பெறுகின்றன.இப்படி வரும் சூழ் நிலையில் அந்த மூட செயலை(தட்டு,தாயத்து,மந்திரம்,தந்திரம் இன்னபிற) நாம் செய்யும் நிலை வந்துவிட்டால்????????????இந்த நேரத்தில் சைக்காலஜி அணுகுமுறையை நம் தலைவர் கையாண்ட முறையை மீண்டும் சிந்தியுங்கள்.மதுக் கோப்பைக்கும் தடை,அறியாமைக்கால வார்த்திகளுக்கும் தடை!!!!காரணம்,மனோ தத்துவ ரீதியாகவும் நாம் அந்த தீமைகளில் இருந்து விடுபடவேண்டும்.அந்த நினைப்பே வரக் கூடாது என்பது தானே?

இப்போதுள்ள மருத்துவர்கள் ,மனோ தத்துவ அறிஞர்கள் சொல்வதாக நாம் அறிந்துள்ளோம்,
காலையில் எழுந்து பச்சை பசேல் என்ற காட்ச்சிகளைப் பார்த்தால் மனம் உற்சாகப்படும் என்று.
திரைப்படம் அதிகம் பார்க்கும் ஒருவனிடம் பேசினால்,படங்களில் வரும் காட்ச்சிகளை மேற்கோள் காட்டி பேசுவான்.
பழனி பாபா அவர்களை ஒருவருக்கு மிகவும் பிடிக்கும்,அவர் பேச்சை அதிகம் கேட்கிறார்,அவரை கவனியுங்கள்,பாபாவின் பேச்சும்,மானரிசமும் அவரிடம் ஒட்டிக் கொடிருக்கும்.


ஆக,அல்லாஹ்வும்,ரசூலும் கற்றுத் தராத வார்த்தைகள்(யும்)புறக்கணிப்போம்,ஏனெனில் அது பாரிய விளைவுகளை ஏற்படுத்தும்.


இக் கருத்தில் குறை இருந்தால் சுட்டிக் காட்டுங்கள்,மனிதன் தவறு செய்யக் கூடியவனே.நிறை இருப்பின்,அது அல்லாஹ்வையே சாரும்.அல்லாஹ் நிறைவானவன்,அழகானவன்,மன்னிக்க கூடியவன்.அவனே நமக்கு போதுமானவன்.

No comments:

Post a Comment