Monday, April 12, 2010

யுனிகோட் உமர் தம்பி மாமா ............

"சிறு வயதிலிருந்து இஸ்லாமிய பற்று, ஒற்றுமையை வழியுறுத்துவதில் அதிக ஆர்வம், இன்னும் நம் சமுதாயத்தை நிறைய திருத்த வேண்டியிருக்குதே என்ற நீண்ட ஏக்கத்துடன் அனைத்து இயக்கத்தவர்கள் செய்யும் நல்ல காரியங்களை மட்டும் எந்த கருத்து வேறுபாடுமில்லாமல் ஒற்றுமை நோக்கத்தில் பங்கு கொள்வதில், பாராட்டுவதில் ஆருவம் செலுத்துகிறேன். நம் சமுதாயம் எப்போது ஒற்றுமையாகும் என்ற ஏக்கம் கொண்ட கேள்வி சிறு வயதிலிருந்து ஒவ்வொரு நாளும் என் மனதில் வருகிறது."

"யூனிகோட் உமர்தம்பி அவர்கள் என் தாயாருடன் பிறந்தவர்கள், எங்கள் யூனிகோட் உமர்தம்பி மாமாவை நல்ல விசையங்களை பற்றி எழுதும் தமிழ் உலகுக்கு ஞாபகப்படுத்திக் கொண்டிருக்க வேண்டும், அவர்கள் நினைவாக என் சார்பாக ஒரு வலைப் பூவை வைத்திருக்கிறேன். http://thaj77deen.blogspot.com/

படிப்பு முதுகலை பட்டம் (MBA Marketing), சாகும் வரை ஹலான முறையில் சம்பாதிக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் செய்யும் வேலையிலும், செயலிலும் அல்லாஹ்வுக்கு பயந்து கவணமாக இருந்து வருகிறேன். அல்லாஹ் தான் கடைசி வரைக்கும் பாதுகாக்க வேண்டும்."

"சினிமாக்கள், டீவி சீரியல்கள், சிகரேட், குடிபோதை, விபச்சாரம், வட்டி, ஸிர்க், இஸ்லாம் எதிர்ப்பு கருத்துக்கள், இஸ்லாத்தில் குழப்பம் ஏற்படுத்துவது, மாற்று கருத்து என்ற போர்வையில் கண்டதை உளறுவது மற்றும் பல தடுக்கப்பட்ட பாவங்கள் இவை அனைத்துக்கும் அடிமையானவர்களுக்கு தகுந்த முறையில் இஸ்லாமிய அடிப்படையில் எனக்கு தெரிந்தவரை பதிலளிப்பது, முடிந்தால் எதிர்த்து பகிரங்கமாக குரல் கொடுப்பது, முடிந்தால் வீதிக்கு வந்து போராடுவது."

"இஸ்லாமிய ஒற்றுமையை எப்படியாவது ஏற்படுத்த வேண்டும் என்ற நீண்டகால குறிக்கோளுடன் அனைத்து சகோதரர்களுடன் பழகி வருகிறேன். "

மேற்கண்ட சிறு குறிப்புடன் நம்மிடையே அறிமுகமாகிறார் சகோதரர் தாஜுதீன்.இன்றைய இளைஞர்கள் இவரிடம் பாடம் படிக்க வேண்டியுள்ளது நிறைய உள்ளது.எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்,எப்படி வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம்,என்ன செய்தாவது பணம் பண்ணினா சரிதான் என்ற மனோபாவம் நிறைந்துள்ள இத்தருணத்தில்,ஹலாலைப் பேணி,ஹராமைப் புறந்தள்ளி இஸ்லாத்தின் உன்னத கொள்கைகளே லட்சியம் என வாழத்துடிக்கும் இந்த சகோதரரின் இத்தளத்தை http://thaj77deen.blogspot.com/ இன்று அறிந்து கொள்வதில் மிக்க மகிழ்வு கொள்கிறது.

தன் பிளாக்கின் பெயராக தன் தாய் மாமா,தமிழுக்கு யுனிகோடு முறையை தந்த யுனிகோடு உமர்தம்பி அவர்களின் பெயரை சூட்டியுள்ளார்.

தன் ஒவ்வொரு கட்டுரையிலும் சினிமாவுக்கு எதிரான - ஆபாச பாடல்களுக்கு எதிரான அவர் போக்கு - சமுதாயத்தின் மேல் உள்ள அக்கறை வெளிப்படுகிறது.புதிதாக எழுதியுள்ள 'உணவு விடுதியில் காலை உணவு சாப்பிடும்போது.....'
என்ற கட்டுரையில் தாய்,தந்தை,சகோதரிகளின் வாழ்வு - அவர்களின் முன்னேற்றம் பற்றியுள்ள அந்த பாசம்,தியாகியாக எத்தனையோ அண்ணன்கள்,தம்பிகள் உலாவருவதை நிதர்சனமாய் காணமுடிகிறது.

இப்படி சமுதாய சிந்தனை - வாஞ்சை நிரம்பி எழுதும் இந்த http://thaj77deen.blogspot.com/  தளத்தை நாமும் பார்த்து,படிப்பினை பெறுவோமே!
பீஸ் ட்ரைன் குழுமத்தில் ஒருவராக இணைந்தமைக்கு இத்தருணத்தில் வாழ்த்துக்களும்,நன்றிகளும் என சொல்லி.......
இனி அடுத்த புதிய செய்திகள்,பிளாக் தகவலோடு சந்திப்போமே இன்ஷா அல்லாஹ்.

1 comment:

  1. ரொம்ப அருமையான அறிமுகம், தாஜுதின்னுக்கு வாழ்த்துக்கள்,

    ReplyDelete