Saturday, May 14, 2011

சர்க்கரை நோய்க்கு ஒரு மருந்து :


சர்க்கரை நோய்க்கு ஒரு எளிமையான சிகிட்சை.முயற்சித்துப் பார்க்கலாமே!
மருந்து :

வெந்தையம் - 50 கி
கருஞ்சீரகம் - 25 கி
ஓமம் - 25 கி
சீரகம் - 25 கி

இவற்றை ஒன்றாக சேர்த்து வறுத்து பொடி செய்து கொள்ளவும்.
(வறுத்தபின் மிக்‌ஷியில் போட்டு பொடி செய்து கொள்ளவும்).

தினமும் காலை சிறிய ஸ்பூன் -ல் 1 ஸ்பூன் அளவு எடுத்து
வாயில் போடவும். கசப்பாக இருக்கும். வெறும் வயிற்றில் சாப்பிட்டால்
மேலும் நல்லது. ( தண்ணீர் தேவைப்பட்டால் குடிக்கலாம்).
ஒரு வாரத்திற்கு பின் மருத்துவரிடம் சென்று சுகர் சோதித்து
பார்த்துக் கொள்ளவும். 

வேறு நோய்கள் இருப்பவர்கள் மருத்துவரிடம் ஆலோசனை
பெற்ற பின் செய்யவும்.


நன்றி- இயற்கை உணவு உலகம்


Mohammad Sultan

Monday, May 9, 2011

மணிவிளக்கு


தமிழ்நாட்டு மக்களின் மொத்த ஜனத்தொகை 5 கோடி ஆகும்.
தொடக்க நிலை, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 9 இலட்சத்து 25 ஆயிரம். அகில இந்திய அடிப்படையில் பார்க்கும்போது, தமிழகம் பள்ளிக்கல்வியில் முன் வரிசையில் இருக்கிறது எனச் சொல்லமுடியும்.
தமிழகத்தில் உள்ள தொடக்க நிலைப் பள்ளிகள் 29118-ல் 50 இலட்சத்து 43 ஆயிரம் மாணவர்கள் கல்வி கற்கின்றனர்.
உயர்நிலை-மேல்நிலைப் பள்ளிகள் 4123 -இல் ஒரு இலட்சத்து நாலாயிரம் மாணவர்கள் கற்று வருகின்றனர்.
இந்தப் புள்ளி விவரங்களில் முஸ்லிம்கள் நிலை என்ன?

தமிழ்நாட்டில் வாழும் 5 கோடி மக்களில் 50 இலட்சம் பேர் முஸ்லிம்கள். அதாவது 10 சதவிகிதத்தினர்.
ஆனால், அரசு தரும் கணக்கில் 6.6 சதவிகிதத்தினர்தான் முஸ்லிம்கள் எனக் குறிப்பிடுகிறார்கள். அதை மறுத்து நம்முடைய உண்மைக் கணக்கை நிலைநாட்டப் போதுமான ஆதாரங்கள் நம்மிடம் இல்லை.
எனவே, அரசு தரும் எண்ணிக்கை அடிப்படையில் பார்க்கும் போது கூட இந்தக் கல்வி நலனில் நமது பங்கு 6 சதவிகிதமாவது-குறைந்தது-இருந்தாக வேண்டும்.
அப்படியானால் பள்ளிகளுக்குச் சென்று வரும் சுமார் 1 கோடி மாணவர்களில், 6 லட்சம் முஸ்லிம் மாணவர்கள் இருக்க வேண்டும். ஆனால் இரண்டு லட்சம் மாணவர்கள்கூட பள்ளிகளில் பயின்று வரவில்லை என்பதைச் சமுதாயம் எண்ணிப் பார்க்க வேண்டும்.
தமிழகத்தில் மொத்தம் உள்ள 28,932 பள்ளிகளில் சுமார் 2,500 பள்ளிக்கூடங்களாவது முஸ்லிம்களின் நிர்வாகத்தில் நடத்தப்பட வேண்டும்.
ஆனால் எல்லா நிலை பள்ளிகளிலுமாகச் சேர்த்து சுமார் 300 பள்ளிகள் கூட நம்முடைய நிர்வாகத்தில் இல்லை.
ஏறத்தாழ நம்மையொத்த எண்ணிக்கையுடைய கிறிஸ்தவ சமுதாயத்தினர், நம்மைவிட 10 மடங்கு அதிகமாக பள்ளிக்கூடங்களை நடத்தி வருகிறார்கள்.
கல்லூரிக் கல்வியைப் பொறுத்தவரை மொத்தம் உள்ள 187 கல்லூரிகளில் அரசினர் நிர்வாகத்தில் 54 கல்லூரிகளும், தனியார் நிர்வாகத்தில் 133 கல்லூரிகளும் செயல்படுகின்றன. இவற்றில் 13 கல்லூரிகள் முஸ்லிம்களுடைய நிர்வாகத்தில் இயங்கிவருகின்றன.
அண்மைக் காலத்தில் இரு பொறியியல் கல்லூரிகளை நம் சமுதாயத்தினர் தொடங்கி இருக்கிறார்கள் என்பது மகிழ்ச்சிக்கு உரிய செய்தியாகும்.
கடந்த தலைமுறையில் சுமார் 30 ஆண்டு காலம் கல்லூரிக் கல்வியின் இன்றியமையாமை ஆழமாக வலியுறுத்தப்பட்டு அதற்கான சூழ்நிலைகளும் உருவாக்கப்பட்டதன் காரணமாகச் சமுதாயத்தில் ஒரு விழிப்புணர்ச்சி ஏற்பட்டது.
ஆண்டு ஒன்றுக்கு ஏறத்தாழ 1,000 முஸ்லிம் மாணவர்கள் பல்கலைக்கழகங்களில் தேறிப் பட்டதாரிகளாக வெளிவரும் காட்சியை சமுதாயம் கண்டு மகிழ்ந்தது.
ஆனால், ஆண்டுக்கு ஆண்டு வளர்ந்து வரவேண்டிய இந்த எண்ணிக்கை குறைந்து வருகிறது என்ற புள்ளி விவரம் நமக்குப் பெருத்த வேதனையைத் தருகிறது.
என்ன இருப்பினும் கலைக்கல்லூரிகளில் சேர இடமில்லாத காரணத்தால் ஒரு முஸ்லிம் மாணவன் தன் மேற்கல்வியைத் தொடர முடியவில்லை என்ற சரித்திரத்தைச் சமுதாயம் மாற்றி அமைத்துவிட்டது. இன்னும் சொல்வதாயின் சமுதாய நிர்வாகத்தில் நடைபெறும் கல்லூரிகளில் சகோதர சமுதாயத்தைச் சேர்ந்த மாணவர்களே 50 விழுக்காட்டிற்கு அதிகமாகப் பயின்று வருகிறார்கள் என்பதும் உண்மையாகும். இந்த வகையில் நாட்டின் உயர்கல்வி வளர்ச்சிக்கு நம்மால் இயன்ற பங்கினை அளித்து வருகிறோம் என்ற மனநிறைவும் நமக்கு உண்டு.
எல்லாவற்றையும்விட நமக்கு வேதனை தரும் செய்தி, ஆரம்ப-நடுநிலை-உயர்நிலைப் பள்ளிகளில் நம் மாணவர் எண்ணிக்கை மிகக் குறைவான அளவில் இருப்பது ஆகும்.
சமுதாயத்தில் பட்டதாரிகள் எண்ணிக்கை அதிகரிப்பது ஒரு விதத்தில் பெருமை அளிக்கக்கூடியது என்றாலும், தொடக்கப் பள்ளிகளில் நம் மாணவர் எண்ணிக்கை குறைகிறது என்பது அபாய அறிவிப்பாகும்.
ஏனெனில், வாழ்க்கையில் எந்தத் துறையில் படித்து முன்னேற வேண்டுமாயினும், ஆரம்ப – அடிப்படைக் கல்வி அவசியமாகும்.
தமிழகத்தில் 1 முதல் 8-ஆம் வகுப்பு முடிய உள்ள ஆரம்ப-நடுநிலைப் பள்ளிகளில் சுமார் 80 லட்சம் மாணவர்கள் பயின்று வருகின்றனர். அப்படியானால் இந்தப் பள்ளிகளில் 4,80,000 முஸ்லிம் மாணவர்களாவது பயின்று வர வேண்டும். அப்போதுதான் நாட்டின் கல்வி வளர்ச்சியோடு நம் சமுதாயமும் சேர்ந்து நடைபோடுகிறது என்று சொல்ல முடியும்.
இந்த குறைபாடுகளை எல்லாம் இப்போதே நாம் களையாவிட்டால், ஏற்கனவே கல்வித்துறையில் பின்னடைந்த சமூகம் என்ற முத்திரையை முகத்திலேயே குத்தி வைத்திருக்கும் நாம் மிகவும் பின்னடைந்த சமூகத்தில் சேர்க்கப்பட வேண்டியவர்களாவோம்.
குறிப்பாக ஆரம்பக் கல்வி நிலையங்களை முஸ்லிம்கள் வாழும் இடங்களில் எல்லாம் தோற்றுவிக்கும் முயற்சியைப் போர்க்கால நடவடிக்கையைப் போல், அவசியமாகவும், அவசரமாகவும் மேற்கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு மாவட்ட, வட்ட, ஒன்றியங்கள் அளவிலும், முஸ்லிம் கல்வி மாநாடுகளைக் கூட்டி, இவற்றைக் களைய மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகளை அறியாத கிராம மக்களுக்கும் மற்றவர்களுக்கும் சொல்லிக் காட்ட வேண்டும்.
“கற்றவர்களாக இருங்கள். கற்றுக் கொடுப்பவர்களாக இருங்கள். கற்பவர்களுக்கும், கற்றுக் கொடுப்பவர்களுக்கும் உதவி செய்பவர்களாக இருங்கள்” என காருண்ய நபி (ஸல்) அவர்கள் நமக்கு உபதேசித்திருக்கிறார்கள்.
அதிலும், கற்பதை, ஆணுக்கும், பெண்ணுக்கும் கடமையாக்கியுள்ள நெறி இஸ்லாமியத் திருநெறியாகும்.
அறிவு ஞானத்தைத் தேடுவதற்காக வீட்டை விட்டு வெளியேறுபவர்கள், அதைப் பெற்று திரும்பும் வரை இறைவனுடைய பாதுகாப்பில் அரவணைக்கப்பட்டவர்களாக இருக்கிறார்கள் என்ற பொருள்பட பெருமானார் (ஸல்) அவர்கள் பேசியிருக்கிறார்கள்.
எல்லாவற்றையும்விட “கல்விக்காக உயிர் நீப்பவர், ஒரு போதும் மரணமடைவது இல்லை” என்றும் அந்த மாநபி அவர்கள் மனித குலத்திற்கு உணர்த்தியிருக்கிறார்கள்.
எனவே கல்வி நலனைப் பேணுவதிலும், அதற்காக உதவுவதிலும் நம் சமுதாயம் ஒருபோதும் மெத்தனமாக இருக்கமுடியாது. இருக்கவும்கூடாது.
தலைதெறிக்கும் வேகத்தில் மற்ற சமுதாயங்கள் எல்லாம் கல்வித் துறையிலும், பிற துறைகளிலும் முன்னேறிக் கொண்டிருக்கும்போது, மந்தமாக இஸ்லாமிய சமுதாயம் மட்டும் பின்னோக்கிச் செல்கிறது என்பது மிகவும் பயங்கரமான உண்மையாகும்.
ஆரம்ப அடிப்படைக் கல்வியில் நம் எண்ணிக்கைக்கேற்ப பிரதிநிதித்துவம் பெற வேண்டுமானால் ஒரு ஐந்தாண்டுத் திட்டத்தை வகுத்துக் கொண்டு நாம் செயல்பட்டாக வேண்டும்.
தமிழ்நாட்டில் சுமார் 7,000 மஸ்ஜிதுகள் இருக்கின்றன. இவற்றில் சுமார் 5,000 மஸ்ஜிதுகளிலாவது முறையான ஜமாஅத் நடந்து வருகிறது. அப்படிப்பட்ட இடங்களில் எல்லாம் மஸ்ஜிதை ஒட்டி, திருக்குர்ஆனை ஓதித் தரும் ‘மக்தப்’களும், மார்க்க நடைமுறைகளைக் கற்றுக் கொடுக்கும் ‘மத்ரஸா’க்களும் இருந்து வருகின்றன.
இவற்றில் முஸ்லிம்கள் வாழும் பகுதிகளுக்கு அருகில் பள்ளிக்கூடங்கள் இல்லாத எல்லா மஸ்ஜிதுகளிலும் உள்ள மத்ரஸாக்களை ஆரம்பப் பள்ளிக்கூடங்களாக மாற்றும் முயற்சியில் ஆங்காங்கு பொறுப்பில் உள்ள ஜமாஅத்துகள் ஈடுபட வேண்டும்.
ஆரம்பப் பள்ளிகளைத் தொடங்கப் பெரிய நிதி தேவையில்லை. அரசு அனுமதியை முன்னதாகப் பெறாமலே பள்ளிகளைத் தொடங்கிக் கொள்ள சிறுபான்மை சமுதாயத்தவர் என்ற முறையில் நமக்கு அரசியல் சட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.
ஆரம்பமாக, ஓராசிரியர் பள்ளியாகவேகூட இதைத் தொடங்கலாம். பிறகு முறையாக அதிகாரிகளை அணுகி அனுமதி பெற்றால், ஆசிரியருக்கான ஊதியம் மற்றும் செலவுகளை அரசு வழங்க முற்படும்.
ஒரு ஆரம்பப் பள்ளியில் குறைந்தது முப்பது மாணவர்களைச் சேர்த்து, அப்படி சேர்க்கப்பட்ட மாணவர்கள் வறுமை காரணமாகவோ, பெற்றோர்களின் மெத்தனத்தினாலோ, இடையில் படிப்பதை நிறுத்திவிடாமல் கண்காணித்து அவர்கள் படிப்பைத் தொடர வழிவகை செய்வோமானால், சமுதாயம் செழிப்புறும்.
ஒவ்வோர் ஆண்டும் ஒவ்வொரு வகுப்பாக அதிகரிப்பது என்றாலும், ஐந்தாண்டுகளில் அது சுமார் 150 மாணவர்களைக் கொண்ட முழு நிறை ஆரம்பப் பள்ளியாகத் திகழும்.
இவ்வாறு குறைந்தது ஆயிரம் மஸ்ஜிதுகளில் அதன் தாழ்வாரங்களிலோ அல்லது முற்ற வெளிகளிலோ அல்லது அடுத்துள்ள வெற்றிடங்களில் அமைக்கப்படும் கொட்டகைகளிலோ வகுப்புகளைத் தொடங்கி நடத்தினால் ஐந்து ஆண்டு காலத்தில் சுமார் ஒன்றரை லட்சம் முஸ்லிம் மாணவர்கள் நம் நிர்வாகத்திலுள்ள பள்ளிகளிலேயே கல்வி நலன் பெறும் வாய்ப்பு சிரமமின்றி ஏற்படும்.
காலப்போக்கில் தேவையைக் கருதி நடுநிலை-மேல்நிலை-உயர்நிலைப் பள்ளிகளைத் தோற்றுவிக்கக்கூடிய உற்சாகமும் சமுதாயத்திற்கு ஏற்படும்.
மத்ரஸா – மக்தப் – சேவைகளில் எந்தவிதக் குறைபாடும் ஏற்படாத வகையில் இந்த சேவையை மேற்கொள்வது அவசியமாகும்.
பிஞ்சு நெஞ்சங்கொண்ட சின்னஞ்சிறு குழந்தைகள் தங்கள் ஆரம்ப அடிப்படைக் கல்வியை மஸ்ஜிதின் நிழலில் அதன் கலாச்சார, மதச்சார சூழலில் பெற்றுக் கொள்வார்களானால், அவர்கள் வளர்ந்து வாலிபமாகிவிட்ட பிறகு எந்த தீய சூழலுக்கும் ஆளாகாமல் காப்பாற்றப்படும் சூழலும் இதனால் உண்டாகும் என்பதைச் சமுதாயப் பெரியவர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.
எக்காரணம் பற்றியேனும், ஆங்காங்குள்ள ஜமாஅத்கள் இந்தப் பொறுப்பை மேற்கொள்ள இயலவில்லை என்றால், சமுதாய நலச்சங்கங்கள், மன்றங்கள் இந்தப் பணியை முன்னின்று செய்தாக வேண்டும்.
இதற்காகப் பெரும்தொகை ஆரம்பத்தில் தேவைப்படாது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
ஏழை மாணவர்களுக்கு என அரசு செய்து வரும் உதவிகள், தந்து வரும் சலுகைகள், நம்மில் நலிந்த சமுதாய வாழ்வில் மிகவும் மெலிந்தவர்களாக உள்ள மக்களுக்குக் கிடைக்க ஆவண செய்வது நம் கடமையாகும்.
தமிழகத்தில் 38,399 சத்துணவு மையங்கள் மூலமாக ஏறத்தாழ 64 லட்சம் மாணவர்களுக்குச் சத்துணவு வழங்கப்படுகிறது.
சுமார் 60 லட்சம் மாணவர்களுக்கு ஆண்டு ஒன்றுக்கு இரு சீருடைகளும் இலவசமாக வழங்கப்படுகின்றன.
அத்துடன் பாடப்புத்தகங்கள் அனைத்தும் இலவசமாகவே வழங்கப்படுகின்றன.
இந்த நன்மைகளையெல்லாம், நாமே நடத்தும் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கும் நாம் முறையாக முயன்றால், பெற்றுத் தர முடியும்.
சமுதாயம் இந்தத் துறையில் சிந்தித்துச் செயல்படுவது காலத்தின் கட்டாயமாகும்.
- “மணிவிளக்கு” ஜூன் 1986
சிராஜூல் மில்லத் சிந்தனைகள் நூலிலிருந்து.

-- 

Wednesday, April 20, 2011

இந்தியா வேண்டாம்.ஒபாமா வேண்டுகோள்


 குறைந்த செலவிலான மருத்துவ சிகிச்சைக்காக இந்தியாவுக்குச் செல்ல வேண்டாம் என அமெரிக்கர்களை அந்நாட்டு அதிபர் பராக் ஒபாமா கேட்டுக் கொண்டுள்ளார்.

 அமெரிக்காவில் மருத்துவ சிகிச்சை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இருதய அறுவை சிகிச்சை, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை உள்ளிட்ட நோய்களுக்கான மருத்துவ சிகிச்சைக்கான கட்டணம் மிகவும் அதிகமாகும். இதனால் அமெரிக்கர்கள் மருத்துவ சிகிச்சை குறைவாக உள்ள இந்தியா மற்றும் மெக்ஸிகோவுக்குச் சென்று சிகிச்சை பெறுகின்றனர். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அதிபர், அமெரிக்காவிலேயே தரமான சிகிச்சை தனது குடிமக்களுக்குக் கிடைக்க வழி ஏற்படுத்தித் தரப் போவதாகக் கூறினார்.
 வர்ஜீனியா மாகாணத்தில் உள்ள சமுதாயக் கல்லூரியில் அவர் இவ்விதம் கூறியவுடன் அதை பலத்த கரகோஷத்துடன் மக்கள் வரவேற்றனர்.
 அமெரிக்காவில் மருத்துவ கட்டணங்கள் உயர்ந்து வருவது குறித்து பொதுமக்கள் கருத்து கேட்டதற்கு, ஒபாமா இவ்விதம் பதில் அளித்தார். குடிமக்களுக்கு நல்ல உடல் ஆரோக்கியம் அளிக்க வேண்டும் என்பதற்காக அரசு திட்டமிடும்போது, மக்கள் வேறு நாடுகளுக்கு சிகிச்சைக்காக செல்வது வேதனையளிக்கிறது. இது தொடர்பாக கலந்துபேசி நல்ல முடிவு எடுக்கப்படும் என்று கூறினார். உள்நாட்டிலேயே உயர்தர சிகிச்சை பெறுவது மிகவும் சிறப்பானதாக இருக்கும் என்று தான் கருதுவதாகவும் அவர் கூறினார்.
 மருத்துவ கவனிப்பு என்பது ஆரம்பம் முதலே தொடங்கப்பட வேண்டும். இது எவ்விதம் செயல்படுகிறது என்பதை உன்னிப்பாகக் கவனித்து அதில் உள்ள கோளாறுகள் சரி செய்யப்படும். இங்குள்ள அனைத்து மருத்துவமனைகளும், அனைத்து டாக்டர்களும் மிகச்சிறந்த மருத்துவ சிகிச்சையை அளிக்கின்றன. இருப்பினும் மருத்துவ செலவு அதிகரிப்பது குறித்து கவனத்தில் கொண்டு அதை சரி செய்வதற்கான முயற்சிகள் எடுக்கப்படும். மருந்து, மாத்திரைகளின் விலையும் கட்டுக்குள் கொண்டு வரப்படும். இதன் மூலம் நீங்கள் அளிக்கும் பணத்துக்கு உரிய மருந்துகளை வாங்கியுள்ளீர்கள் என்பதை உணரலாம். ஆனால் கனடா மற்றும் மெக்ஸிகோவில் பரிந்துரைக்கப்படும் மருந்துகளுக்கு 20 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை கூடுதல் தொகை செலவிட வேண்டியிருக்கும் என்றார்.
 அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்படும் மருந்துகளின் விலை பிற நாடுகளைவிட இங்கு அதிக விலைக்கு விற்பனையாவது ஏன் என்பது புரியவில்லை. இதற்கு இங்குள்ள மருந்து தயாரிப்பு நிறுவனங்கள்தான் காரணம். வெளிநாடுகளில் இதுபோன்ற நிலை கிடையாது. இதற்கு இங்குள்ள வரி விதிப்பு காரணமா அல்லது இதனால் அரசின் வரி வருவாய் குறையுமா என்பதை ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் ஒபாமா.

Sunday, April 3, 2011

இஸ்லாம் பெண்களின் உரிமையைப் பறிக்கிறதா?


அறியாமையின் காரணமாகவோ, வேண்டுமென்றோ இஸ்லாத்தின் மீது சேறு வாரி இறைப்பது இன்று பலருக்கும் ஒரு தொழிலாகவே ஆகிவிட்டது. சில வகுப்புவாத அமைப்புகள் நடத்தும் பத்திரிகைகள் மட்டுமல்ல தேசிய நாலேடுகள் கூட இஸ்லாத்தையும்,முஸ்லிம்களையும் தவறாகவே விமர்சித்து வருகின்றன.
மேற்கண்ட விஷயங்களில் அவர்கள் சுமத்தும் தவறான குற்றச்சாட்டுகளுக்கு 'இஸ்லாம் பெண்களைக் கொடுமைப்புடுத்துகிறதா? ' எனும் இந்நூல் பதில் தருகிறது.

இஸ்லாம் பெண்களின் உரிமையைப் பறிக்கிறதா?

ஆண் பெண் சமத்துவம்

பலதார மணம் தலாக்
ஜீவனாம்சம்
ஹிஜாப் (பர்தா)
பாகப் பிரிவினை
சாட்சிகள்
அடிமைப் பெண்கள்


அகிய மேற்கண்ட தலைப்புகளில் இடம் பெற்றுள்ளது.
அவசியம் அனைவரும் படித்து பயன் பெருங்கள்.(இன்ஷாஅல்லாஹ்)

நூலை முழுவதும் படிக்க 
இங்கே சொடுக்கவும் - > http://onlinepj.com/books/islam-penkalin-urimayai/

நீ ஒரு முட்டாளா?

ஏப்ரல் 1 என்றாலே ஏமாற்றுதல் என்று பொருள் மாறும் அளவிற்கு ஏப்ரல் மாதம் 1 ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் சிலர் சிலரை மதிக்காமல், உரிய கவுரவத்தைக் கொடுக்காமல், அவர்களிடம் பொய் சொல்லி, அதற்குச் சத்தியமும் செய்து நம்ப வைத்து பிறகு ஏமாற்றுவது, ஏளனமாகச் சிரிப்பது, மேலும் அவர்களுக்கு இழிவை ஏற்படுத்துவது போன்ற செயல்களை வழக்கமாக்கிக் கொண்டுள்ளார்கள்.
இவர்கள் பிறரை ஏப்ரல் ஃபூல் – முட்டாளாக்கி அற்ப சந்தோஷத்தை அனுபவித்து வருகின்றனர்.
April Fool’s Day அல்லது All Fool’s Day என்ற ஆங்கிலத்தில் அழைக்கப்படும் ஏப்ரல் ஃபுல் க்கு பல வரலாறுகள். 


முஸ்லிம்களில் சிலரும் இதை செய்து வருகின்றனர்.
எனவே நாம், நமக்கு வழிகாட்டியாக வந்த குர்ஆனையும், ஹதீஸையும் அடிப்படையாகக் கொண்டு இந்தத் தீமையைப் பற்றி அறிந்து, அதிலிருந்து விலகவும், நேர்வழி பெறவும் முயற்சிக்க வேண்டும்.


ஹோலி கலாச்சாரம்
பொதுவாக மாணவர்கள் ஏப்ரல் மாதத்தில் பிறருடைய மேலாடைகள் மீது மையைத் தெளித்து அசிங்கப் படுத்துகின்றார்கள். இதை ஏப்ரல் ஃபூலின் ஓர் அடையாளமாக நினைத்து செய்கின்றனர். மையைத் தெளிக்கும் இந்த நடைமுறையானது ஹோலி பண்டிகையின் போது நிறங்களை பரஸ்பரம் வீசிக் கொள்ளும் இந்துக்களின் ஒரு பிரிவினருடைய கலாச்சாரத்துடன் ஒத்துப் போகின்றது. எனவே மாற்று மதக் கலாச்சாரம் என்ற அடிப்படையில் முஸ்லிம்கள் இதைக் கைவிட வேண்டும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் பிற சமுதாயத்தின் சம்பிரதாயங்களை (கலாச்சாரத்தை) ஏற்படுத்திக் கொள்கிறானோ அவனும் அவர்களைச் சார்ந்தவனே! (நூல்: அபூதாவூத் 3512)
பொய்க் கலாச்சாரம்
இதைத் தவிர மக்களில் பலர் மற்றவர்களை ஏப்ரல் ஃபூல் (முட்டாள்) ஆக்குவதற்காக பொய் பேசுகின்றார்கள். இது பெருங்குற்றம் ஆகும். பொய் சொல்லி தீமை செய்து கொண்டிருப்பதன் காரணமாக அல்லாஹ்வின் அருளும் அன்பும் இழந்து அவனது கோபத்திற்கு ஆளாகி விடுகின்றார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பொய் நிச்சயமாகத் தீமைக்கு வழி வகுக்கும். தீமை நரகத்திற்கு வழிவகுக்கும். ஒரு மனிதர் பொய் பேசிக் கொண்டே இருப்பார். இறுதியில் அவர் அல்லாஹ்விடம் பெரும் பொய்யன் என்று பதிவு செய்யப்பட்டு விடுவார்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் (ரலி)
நூல்: புகாரி 6094
ஆக இந்தப் பொய்யர்கள் அதிகமான தீமைகளைச் செய்து நரகத்தை அடைகின்றனர். எனவே நாம் பொய் பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.
பொய்ச் சத்தியம் செய்தல்
இன்னும் சிலர் பிறரை முட்டாளாக்குவதற்கு முயற்சி செய்யும் போது அவர் நம்ப மறுத்து விட்டால் உடனே பொய்ச் சத்தியம் செய்து நம்ப வைக்கின்றனர்.
இவர்களைப் பற்றி வல்ல அல்லாஹ் திருமறையில் கூறுகின்றான்:
அதிகம் சத்தியம் செய்யும் இழிந்தவன் எவனுக்கும் நீர் கட்டுப்படாதீர்! (அல்குர்ஆன் 68:10)
மேலும் இப்படிப் பொய்ச் சத்தியம் செய்வது யாருடைய குணம் என்றால் அல்லாஹ்விற்குப் பிடிக்காத நயவஞ்சகர்களின் குணமாகும்.
இவர்களுடைய இந்தச் சுபாவத்தைப் பற்றி அல்லாஹ் கூறுகின்றான்:
அறிந்து கொண்டே பொய் சத்தியம் செய்கின்றனர். துன்புறுத்தும் வேதனையை அல்லாஹ் அவர்களுக் குத் தயாரித்துள்ளான். அவர்கள் செய்து கொண்டிருந்தது மிகவும் கெட்டது. (அல்குர்ஆன் 58:14,15)
எனவே நாம் ஒரு போதும் பொய்ச் சத்தியம் செய்யக் கூடாது.
பொய் சாட்சி கூறல்
ஏப்ரல் மாதத்தில் பிற மக்களை முட்டாளாக்க முயற்சித்துக் கொண்டிருக்கும் போது அந்த இடத்திற்கு அருகில் இருக்கும் சிலர் அந்தப் பொய்யர்களுக்கு ஆதரவு அளித்து, உதவி செய்யும் முகமாக பொய் சாட்சி பகர்கின்றனர். இதுவும் பெரும் பாவமான காரியமாகும்.
அபூபக்ரா (ரலி) கூறியதாவது: “பெரும் பாவங்களிலேயே மிகப் பெரும் பாவங்களை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?” என்று நபி (ஸல்) அவர்கள் மூன்று முறை கேட்டார்கள். “ஆம்! அல்லாஹ்வின் தூதரே! அறிவியுங்கள்” என்று நபித் தோழர்கள் கூறினார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ்விற்கு இணை வைப்பதும், பெற்றோருக்குத் துன்பம் தருவதும் தான்” என்று கூறினார்கள். சாய்ந்து கொண்டிருந்த நபி (ஸல்) அவர்கள் பிறகு எழுந்து அமர்ந்து, “அறிந்து கொள்ளுங்கள். பொய் பேசுவதும், பொய் சாட்சியமும் (பெரும் பாவம் தான்). பொய் பேசுவதும் பொய் சாட்சியமும் (பெரும் பாவம் தான்)” என்று திரும்பத் திரும்பக் கூறிக் கொண்டே இருந்தார்கள். (நூல்: புகாரி 5976, முஸ்லிம் 126)
ஏமாற்றுதல்
இன்னும் சிலர் உண்மையுடன் பொய்யும் புரட்டும் சேர்த்துப் பேசுவார்கள். இதற்குப் பெயர் ஏமாற்றுதல், மோசடி ஆகும். உதாரணமாக ஏப்ரல் மாதத்தில் ஏமாற்றுவதற்காக, விபத்து நடந்து விட்டது என்றோ, இன்னார் அபாயகரமான (சீரியஸான) நிலையில் இருக்கிறார் என்றோ, மரணித்து விட்டார் என்றோ தொலைபேசி அல்லது தந்தி மூலமாகத் தகவல் அனுப்பி வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் ஏமாற்றுகின்றானோ அவன் என்னைச் சார்ந்தவன் அல்ல. (நூல்கள்: முஸ்லிம் 147, திர்மிதீ 1236)
“மோசடி செய்பவனுக்கு மறுமை நாளில் அவனுடைய மோசடியை வெளிச்சமிட்டுக் காட்டும் முகமாக அடையாளக் கொடி ஒன்று நட்டப்படும். இது இன்னாரின் மகன் இன்னாரின் மோசடி’ என்று கூறப்படும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: புகாரி 6178)
நபி (ஸல்) அவர்கள் கூறியதாவது: மோசடி செய்யும் ஒவ்வொருவனுக்கும் ஒரு அடையாளக் கொடி உண்டு. அது மறுமையில் அவனது புட்டத்திடம் நட்டப்படும். (நூல்: முஸ்லிம் 3271)
முஸ்லிமின் அடுத்த அறிவிப்பில் அவனுடைய மோசடிகளுக்குத் தக்கவாறு அது உயர்த்தப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இடம் பெற்றுள்ளது.
எனவே வல்ல அல்லாஹ்வுக்குப் பயந்து ஏமாற்றுதல், மோசடி செய்தல் ஆகியவற்றிலிருந்து முழுவதுமாக விலகி உண்மையாளராக நாம் திகழ வேண்டும்.
கேலி செய்தல்
மக்களில் சிலர் சிலரை ஏப்ரல் ஃபூல் ஆக்கிய பிறகு ஏளனமாகச் சிரிப்பது, கிண்டல் செய்வது, ஆர்ப்பரிப்பது என்று எப்படியெல்லாம் அவமரியாதை செய்ய முடியுமோ அனைத்தையும் கையாளுகின்றனர். இந்தக் கெட்ட குணத்திற்குச் சொந்தக்காரர்கள் யார் என்றால் இறை நிராகரிப்பாளர்கள் தாம். (ஏக இறைவனை) மறுப்போருக்கு இவ்வுலக வாழ்க்கை அழகாக்கப் பட்டுள்ளது. அவர்கள் நம்பிக்கை கொண்டோரைக் கேலி செய்கின்றனர். (இறைவனை) அஞ்சியோர் கியாமத் நாளில் அவர்களுக்கு மேலே இருப்பார்கள். அல்லாஹ், நாடியோருக்கு கணக்கின்றி வழங்குகிறான். (அல்குர்ஆன் 2:212)
தாராளமாக (நல் வழியில்) செலவிடும் நம்பிக்கை கொண் டோரையும், தமது உழைப்பைத் தவிர வேறு எதையும் பெற்றுக் கொள்ளாதவர்களையும் அவர்கள் குறை கூறி கேலி செய்கின்றனர். அல்லாஹ் அவர்களைக் கேலி செய்கிறான். அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு. (அல்குர்ஆன் 9:79)
இந்த வசனங்களில் அல்லாஹ், நயவஞ்சகர்களின் பண்பைப் பற்றிக் கூறி விட்டு அவர்களுக்குரிய தண்டனையைப் பற்றியும் கூறுகின்றான். எனவே நாம் இந்தத் தீய பழக்கத்தைக் கைவிட வேண்டும்.
இழிவாகக் கருதுவது
இறுதியாக ஒன்றைத் தெரிந்து கொள்ள வேண்டும். பிறரை ஏப்ரல் ஃபூல் (முட்டாள்) ஆக்கியவர்கள் ஏன் அவர்களைப் பார்த்து, கை கொட்டி ஏளனமாகச் சிரிக்கின்றார்கள்? ஏன் கேலி, கிண்டல் செய்து அற்ப சந்தோஷம் அடைகின்றார்கள்? என்று சிந்தித்தால் ஓர் உண்மை விளங்கும்.
அதாவது அவர்கள் தம்மைப் புத்திசாலியாகவும், உயர்ந்தவர்களாகவும் கற்பனை செய்து கொள்கின்றார்கள். எனவே ஆணவம் தலைக்கேறிய பிறகு மற்றவர்களை, தம்மை விட அறிவில் குறைந்தவர்கள், இழிவானவர்கள் என்று முடிவு செய்வதன் காரணத்தால் தான் அவர்களுக்கு உரிய மரியாதை செலுத்தாமல், அனாவசியமாகக் கருதி, கேவலமாக நடத்தி இழிவு படுத்துகின்றனர்.
இதைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பரிபூரண முஸ்லிம் யாரென்றால், எவரது நாவிலிருந்தும், கரத்திலிருந்தும் பிற முஸ்லிம்கள் பாதுகாப்பு பெற்று இருக்கின்றார்களோ அவர் தான். (நூல்: புகாரி 10, 6484)
இதல்லாம் ஜாலிக்காக செய்திகன்றோம் இதில் என்ன தவறு என்று சிலர் போலி வியாக்கியானம் கொடுப்பார்கள்.  உண்மையில் அவர்கள் தான் தன்னை யாரும் ஏப்ரல் ஃபுல் ஆக்கி விடக்கூடாது என்பதில் மிக கவனமாக இருப்பார்கள். 
தன்னை யாரேனும் ஏப்ரல் ஃபுல் ஆக்கி விட்டால்அது நமக்கு அசிங்கம் இழிவு என்று நினைக்கும் இவர்கள் பிறரை ஏப்ரல் ஃபுல் ஆக்கும் போது அதை மறந்து விடுவது ஏன்?
ஏமாற்றாதீர்கள்! ஏமாறாதீர்கள்!!

உலகெங்கும் முட்டாள்கள் தினம்....!
                                                                                                                            -ஆல்பர்ட், அமெரிக்கா.

"The first of April is the day we remember what we are the other 364 days of the year. " - Mark Twain.

-என்று நம்மைப்பற்றி முன்பே உரத்துச் சொல்லிவிட்டார்.

"முட்டாள்கள் தினம்" ஏப்ரல் 1ம் தேதி உலகமெல்லாம் முட்டாள்களாக்கும் முயற்சி நடைபெறுகிற ஒரு முட்டாள் நாள் என்பது நாம் எல்லோரும் அறிந்த விஷயம்தான். இதை யார் துவக்கி வைத்தது? இதற்கு ஒரு ஆரம்பம் இருந்தாக வேண்டுமே. இருந்தது உண்மைதான்!

முட்டாள்கள் தோன்றிய வரிசை என்று பார்த்தால், பிரான்சு முதலாவதாக , இரண்டாவதாக இங்கிலாந்து, மூன்றாவது மெக்ஸிக்கோ அடுத்து சுவீடன், இந்தியா என்று பட்டியல் ஒரு ரவுண்ட் உலகம் சுற்றி வரும். காலம் தன் தேய்பிறை நாட்களில் உண்மையை முழுவதுமாக மறைத்து விடவில்லை.

அன்றைய ரோமானிய நாட்காட்டியின்படி ஏப்ரல் 1ம்தேதி பொழுது புலர்ந்து பூபாளம் பாடுகிற வேளை தான் வசந்தம் துவங்குகிற பொன்னாள்.இது கி.பி.154க்கு முன்பிருந்து பொதுமக்களால் பின்பற்றப்பட்டு வந்த நடைமுறை.

புத்தாண்டுக் கொண்டாட்டங்களை மிகுந்த உற்சாகத்தோடு கொண்டாடியதற்கான வரலாற்றுக் குறிப்புகள் காணப்படுகின்றன.
இந் நாளில் கடவுளுக்கு பலி செலுத்தும் பழக்கமும் காணிக்கைகளைச் செலுத்தும் வழக்கத்தையும் கொண்டிருந்தனர். ஆடல், பாடல், நடனம் என்று கலை நிகழ்ச்சிகளில் மூழ்கி தங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திக் கொண்டனர். இது எதிர் வரும் புத்தாண்டைச் சிறப்பாக வரவேற்கும் வகையான நிகழ்வின் வெளிப்பாடாகக் கருதப்பட்டது. மகிழ்ச்சி பொங்கும் வாழ்க்கை நிலவிட வழிபாடுகளை மேற்கொண்டனர்.

ஹார்வி என்னும் வரலாற்றாய்வாளர் தனது குறிப்பில், "பிரான்சு தேசத்தின் அரசன் ஒன்பதாம் சார்லஸ் காலத்தில் மார்ச் மாதம் 25ம்தேதியிலிருந்து ஒருவார கால புத்தாண்டுக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டதாக குறிப்பிடுகிறார்.

திருவிழாவைப்போல் நடைபெறும் இந்தக் கொண்டாட்டங்களின் போது ஒருவருக்கொருவர் பரிசுப் பொருள்களையும், அன்பளிப்புகளையும் வழங்கி தங்கள் அன்பை வெளிப்படுத்திக் கொண்டதாக குறிப்பிடுகிறார். இந்த ஒரு வாரக் கொண்டாட்டத்தின் இறுதி நாளான ஏப்ரல் ஒன்றாம் தேதி பெரு விருந்துடன் புத்தாண்டு விழா நிறைவெய்தியதாகக் குறிப்பிட்டுள்ளார்.

16ம் நூற்றாண்டில் பிரான்சு தேசத்தில் துவங்கியது இந்தப் பழக்கம். 1500களில் ஆண்டுத் துவக்க நாளாக ஏப்ரல் 1ம் தேதியையே கொண்டிருந்தனர். 1562ம் ஆண்டில் போப் கிரகோரி புதிய ஆண்டுத் துவக்கத்தை நடைமுறைப் படுத்தும்படி அறிவித்தார்.

ஆண்டுத் துவக்க நாளாக சனவரி 1ம்தேதியை அறிமுகம் செய்து வைத்தார். இனி மேல் பிரான்சு தேசம் முழுமையும் இந்த நாட்காட்டிதான் என்று ஊர்தோறும் அறிவிக்கப்படது. இந்த மாற்றத்தை ஏற்றுக் கொள்ளாதவர்கள் அல்லது போப்பின் அறிவிப்பை நம்பாதவர்கள் ஏப்ரல் 1ம்தேதியையே புத்தாண்டுப் பிறப்பாகக் கொண்டாடினர்.

ஏப்ரல் 1ம்தேதியைக் கொண்டாடியவர்களை கேலியும் கிண்டலும் செய்ததோடு அவர்களை நூதனமாக ஏமாற்றி "ஏப்ரல் முட்டாள்கள்" (April Fool) என்றழைக்கவும் செய்தனர். நள்ளிரவு தாண்டியும் நாட்டிய நடனங்களில் ஈடுபட்டு மிகுந்த மகிழ்ச்சிகரமாக இருந்திருக்கின்றனர்.

ரோமாபுரி... ரோமாபுரியில் கிறிஸ்தவர்கள் அதிகாரத்திற்கு வந்தபோது, நடைமுறைகளை மாற்றினார்கள். தற்போதுள்ள ஈஸ்ட்டர் பண்டிகையினையும் மாற்றி அறிவித்தார்கள். பழமையான கொண்டாட்டங்களை மாற்றியதோடு அவற்றில் ஒரு சிலவற்றை வேடிக்கை வினோத கொண்டாட்டங்களுக்குரிய நாளாக மாற்றினர். இந்த மாற்றங்களில் நம்பிக்கை இல்லாமலிருந்த இவர்களை கேலியும் கிண்டலும் செய்து விளையாட்டாக முட்டாளாக்கி ஏமாற்றும் போக்கில் ஈடுபட்டனர். இதுவே நாம் இன்றைக்கு வேடிக்கையாய் முட்டாள்களாக்கி மகிழ்கிற நாளாக தொடர்ந்திடுகிறது எனலாம்.

சனவரி மாதம் 1ம் தேதியை புத்தாண்டாக ஏற்றுக் கொள்ள மறுத்தவர்கள் அல்லது மறந்தவர்களுக்கு முட்டாள்தனமான பரிசுகளை அனுப்பினர். பெரிய பரிசுக் கூடைகள் போன்று வடிவமைத்து உள்ளே குதிரை முடி, பழைய குப்பை என்று நிரப்பிக் கொடுத்து ஏமாற்றுதல் போன்ற ஏமாற்று வேலைகளைச் செய்து ஏமாற வைத்தனர். இதை நம்பும்படியான ஆனால் நகைக்கும்படியான செயலாக செய்து மகிழ்ந்தனர்.

ஏப்ரல் முதல் நாளை, "Poission d'avril " என்று அழைத்துள்ளனர். இத்தகைய கேலிக் கூத்துக்கள் சுற்றிச் சுழன்று பிரான்சிலிருந்து இங்கிலாந்துக்கும் அங்கிருந்து அமெரிக்காவுக்கும் ஏப்ரல் ·பூல் விரிந்து பரவி இருக்கிறது. இது குறித்து சிகாகோவில் உள்ள இல்லிநாய்ஸ் பல்கலைக்கழக வரலாற்றுப் பேராசிரியர் ஸ்டீவன் ·பேன்னிங் ஐரோப்பாவில் எப்படி எல்லாம் நடந்தது என்று விலாவாரியாகக் குறிப்பிட்டுள்ளார். கிரகோரியன் காலண்டரை ஏற்றுக் கொண்ட முதல் நாடாக பிரான்சு இருந்தாலும் இத்தகைய கேளிக்கைகளின் ஆணிவேரைக் கண்டுபிடிக்கப் போதுமான ஆதாரக் குறிப்புகள் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்."

நெப்போலியன் I , ஆஸ்திரியாவைச் சேர்ந்த மேரி லூயிஸை 1810-ல் திருமணம் செய்துகொண்டார். அந்த மாதம், நாள் ஏப்ரல் 1 என்பதால் மணமகளை கேலி செய்து இருக்கின்றனர். நெப்போலியன் உண்மையாகத் திருமணம் செய்யவில்லை. உன்னை முட்டாளாக்கவே திருமணம் செய்திருக்கிறார் என்று எள்ளி நகையாடியதாகக் கூறப்படுகிறது.

ஸ்காட்லாந்தில்
"April Fool's Day"யை, "April Gawk" என்று கடைப்பிடித்ததாக பேராசிரியர் ஸ்டீவன் தெரிவித்துள்ளார்.

அதாவது ஏப்ரல் 1ம் தேதி வினோதமாக உடையுடுத்தி ரெண்டுங்கெட்டானாக நடந்து கொண்டு ஸ்காட்டிஷ் மக்கள் அந்த நாளை நகர்த்தியதாக மேலும் தெரிவிக்கிறார். ஒரு பொய்யை உண்மை என்று நம்ப வைப்பது, ஒரு கடிதத்தில் அவசரம் என்று மேலே எழுதி உள்ளே முட்டாள், "இன்று ஏப்ரல் ·பூல் தினம் தெரியுமா? அது வேறு யாருமில்லை நீதான்," இப்படி எழுதி அனுப்புவதை வழக்கமாகச் செய்திருக்கின்றனர்.
"ஏப்ரல் மீன்" பிரெஞ்சுக் குழந்தைகள் கூட காகிதத்தில் மீன் போன்று செய்து தனது சினேகிதர்களின் முதுகில் ஒட்டி அனுப்பிக் கேலி செய்திருக்கின்றனர். இப்படி முதுகில் மீனோடு திரிகிற குழந்தைகளைப் பார்க்கும் குழந்தைகள் "ஏப்ரல் மீன்" என்று அழைத்துக் கேலி செய்திருந்திருக்கின்றனர்.

அமெரிக்காவில்...

அமெரிக்காவில் "April Fool's Day" அல்லது "All Fool's Day" என்று அழைக்கிறார்கள். சாதாரணமாக ஒரு நண்பர் இன்னொரு நண்பரை திடீர் என்று, "ஒன்னோட ஷ்லேஸ் அவிழ்ந்து தொங்குது பார்" என்றோ முதுகுப் பக்கம் கோட்டுல ஏதோ ஒரு கறை அசிங்கமா இருக்கு, மொதல்ல அதைக் கழட்டு என்று சொல்லி ஏமாற்றுவார்கள். 19ம் நூற்றாண்டில் ஆசிரியர்களே மாணவர்களிடம் அங்க மேல பாருங்க பொம்மை கூஸ் பறக்குதுன்னு சொல்வாங்களாம். (நம்ம ஊர்ல வெள்ளைக் காக்கா பறக்குதுன்னு சொல்வோமே..!) மாணவர்கள் சக மாணவர்களைப் பார்த்து இன்னைக்கு ஸ்கூல் லீவு தெரியுமா? அப்படின்னு சொல்லுவார்கள். எது எப்படியோ அவர்கள் ஏமாந்தவுடன் ஹை..... எப்ரல் ·பூல் என்று சொல்லி குதூகலித்துக் கொள்வது என்ற அளவில் தான்.
ஏமாற்றலுக்கு ஏமாற்றல் என்றும் நடப்பதுண்டு. சர்க்கரைச்(சீனி) சாடியில் உப்பைப் போட்டு ஏமாற்றுதல், மணிப் பர்ஸில் ஒரே ஒரு பென்னியை வைத்து ஏமாந்தாயா முட்டாள் என்று எழுதி நண்பர்களை ஏமாற்றுதல் சகஜமான ஒன்று. கல்லூரி மாணவர்கள் தங்கள் விடுதிகளில் ஒரு மணி நேரத்தை பின்னோக்கி வைத்து குறிப்பிட்ட வகுப்புகளுக்குப் போக விடாமல் செய்வது; அல்லது வரலாறுக்குப் பதிலாக உயிரியல் வகுப்புக்குச் செல்ல வைப்பது; ஆனால் யாருக்கும் தீங்கிழைப்பது இல்லை; ஏமாற்றலுக்குப் பழி வாங்குதல் என்று இன்று வரை நடந்தது கிடையாது என்றே சொல்ல வேண்டும். ஆங்காங்கே முட்டாள்தனமான ஜோக்குகளைச் சொல்லி விலா எலும்பு நோகச் சிரிக்க வைத்தல் போன்றெல்லாம் நடக்கும்."

மெக்சிக்கோ...

மெக்சிக்கோவில் பாரம்பரியமான முட்டாள்கள் தினத்தைக் கொண்டாடினாலும் இங்கு அது வேறு நாளில் வேறு காரணங்களுக்காகக் கொண்டாடப்படுகிறது. "El Dia los Inocents " என்று டிசம்பர் 28ம் தேதி பச்சிளம் பாலகர்களுக்காகக் கொண்டாடப்படுகிறது. அதிர்ஷ்டமற்ற நாட்கள் என்று முட்டாள்களாக்கப் பட்டவர்கள் கருதுகிற சூழலை பத்திரிக்கைகள், வானொலி, தொலைக் காட்சிகள் வரிந்து கட்டிக் கொண்டு செய்திகளை வழங்குகிறது.

திரைப்படம்...

1986-ல் ·ப்ரெட் வால்டன் இயக்கிய, "ஏப்ரல் பூல்ஸ் டே" திரைப்படம் மிகப் பிரபல்யம் ஆனது. டெபோரா ·போர்மேன், ஜேய் பேக்கர், டெபோரா குட்ரிச் நடித்திருந்தனர். பாரமவுண்ட் பிக்சர்ஸ் நிறுவனத்தார் பிரம்மாண்டமாக தயாரித்திருந்த இப்படம் ஒளி நாடாக்களிலும் வீர நடை போட்டு வந்ததை குறிப்பாகச் சொல்லலாம்.

அத்தீன்


அளவற்ற அருளாளனும்நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்...
1. 
அத்தியின் மீதும்ஒலிவ மரத்தின் மீதும் சத்தியமாக!
2. 
தூர் ஸீனீன் மலையின் மீதும் சத்தியமாக!
3. 
அபயமளிக்கும் இவ்வூர் மீதும் சத்தியமாக!34
4. 
மனிதனை அழகிய வடிவில் படைத்தோம்.
5. 
பின்னர் அவனை இழிந்தவனிலும் இழிந்தவனாக்கினோம்.
6. 
நம்பிக்கை கொண்டு நல்லறம் செய்தோரைத் தவிர. அவர்களுக்கு முடிவு
 இல்லாத கூலி உண்டு.
7. 
இதன் பின்னர் தீர்ப்பு நாளைஉம்மால் எப்படிப் பொய்யெனக் கருத முடியும்?
8. 
தீர்ப்பளிப்போரில் அல்லாஹ் மேலான தீர்ப்பளிப்பவன் இல்லையா?
திருக் குர்ஆன் விளக்கவுரை  அத்தீன்-அத்தியாயம்  95
Source Link Pls Click Here -

உலகில் இறைவனை வணங்கு வதற்காக முதன் முதலில் எழுப்பப்பட்ட
ஆலயம் கஅபா. இந்த ஆலயம் மக்களின் அபய பூமியாகத் திகழும் எனத்
திருக்குர்ஆன்-கூறுகிறது.
கஅபாஅபய பூமி என அறிவிக்கப்பட்டு 14 நூற்றாண்டுகளைக் கடந்த
பின்பும்எத்தனையோ ஆட்சி மாற்றங்கள் நடந்த பின்பும் அது
இன்றளவும் அபய பூமியாகவே அமைந்துள்ளது. 14
நூற்றாண்டுகளாக எந்தத் தாக்குதலுக்கும் உள்ளாகாத வரலாற்றுச்
சிறப்புமிக்க ஆலயமாகவும் அது இருந்து வருகிறது. திருக்குர்ஆன் கூறியவாறு
அது அபய பூமியாகவே நீடித்து வருவது திருக்குர்ஆன் இறைவனின்
வார்த்தைகள் தாம் என்பதற்குச் சான்றாக அமைந்துள்ளது.
(இக்குறிப்புக்குரிய வசனங்கள்: 2:125, 3:97, 5:97, 14:35, 28:57, 105:1-5, 106:4)
-----------------------------------------
ஆலிவ் எண்ணெய் 
சருமத்திற்கு வெண்மையும், கேசத்திற்கு போஷாக்கும் அளிக்கிறது.. இதன் இலை மேற்புறம் கரும் 
பச்சை வண்ணத்திலும் அடிப்புறம் வெளிர் பச்சை நிறத்திலும் இருக்கும். கனியின் நடுவில் கடினமான 
விதையும் சுற்றி திடமான சதைப் குதியும் இருக்கும். கனிகள் உருண்டை, நீளுருண்டை எனப் பலவடிவில் 
இருக்கும். காய் பச்சை நிறத்திலும், கனிந்த பின் பழுப்பு, சிவப்பு அல்லது கறுப்பு நிறத்திலுமிருக்கும்.
இலைகளில் எண்ணெய்ச் சத்து அதிகம். தவிர தாதுப் பொருள்களும், வைட்டமின் ’, வைட்டமின்
சி’, முதலான ஊட்டச்சத்துக்களும் அடங்கியுள்ளன. ஆலிவ் மரம் நன்கு வளர சூரிய ஒளியும், உலர் நிலமும், 
நல்ல கோடை வெயிலும், மிதமான குளிரும் தேவை. ‘திரவத்தங்கம் என்று இந்த எண்ணெய் மதிக்கப்படுகிறது.
மார்பகப் புற்றுநோயைத் தடுக்கும் ஆலிவ் எண்ணெய்

தூய்மையான ஆலிவ் எண்ணெயில் காணப்படும் பாலிஃபீனால், மார்பகப் புற்றுநோயை வராமல் தடுப்பதுடன், 
மார்பகப் புற்றுநோய் இருப்பவர்களுக்கு குணப்படுத்துவதற்கும் தவும் என்று கண்டறியப்பட்டுள்ளது.

இந்த பாலிஃபீனால் மார்பகப் புற்றுநோய் செல்களை அழிக்கும் தன்மை கொண்டதாக உள்ளது என்று 
கண்டறியப்பட்டுள்ளது.
 ஸ்பெயின் நாட்டின் ஐசிஓ அமைப்பும், கிரனடா பல்கலைக்கழகமும் ணைந்து நடத்திய ஆய்வு முடிவு 
இதனைத் தெரிவித்துள்ளதுஆலிவ் எண்ணெயில் இருந்து பிரித்து வடிகட்டப்பட்டு, பின்னர் திடப் 
பொருளாக்கப்பட்டதைக் கொண்டு நடத்திய ஆய்வில், மார்பகப் புற்றுநோயை தடுக்கும் ஆற்றம் 
இருப்பது தெரிய வந்துள்ளது.
எனவே மார்பகப் புற்றுநோய் வராமல் இருக்கவும், அந்நோய் உள்ளவர்கள் அதில் இருந்து நிவாரணம்