Showing posts with label இளம் பிறை கண்டு ... Show all posts
Showing posts with label இளம் பிறை கண்டு ... Show all posts

Wednesday, August 15, 2012

இளம் பிறை கண்டு ..


இளம் பிறை கண்டு ..
இளம்சிறார்கள்  ..
நாளை பெருநாள் .என்ற
நல்லதொரு சேதியை ...
நள்ளிரவு வரை
சொல்லித்திரிவர்..

எப்ப விடியும் பொழுது
என்று உறங்கும்
சிறார்க்கு தக்பீர் முழக்கம்
 தருமே மகிழ்வை ...

உறவு தரும் பெருநாள் காசு ..
நல்ல வரவு .என்று சொல்லும்
செல்லங்களின் உள்ளம் பொங்கும்
மகிழ்வால்..நாளும் ..
கூடுதல் சொந்தங்கள் ..
கூடுதல் வரவு ...
உறவுகள் தரும் காசு ..
 உள்ளத்தில் நீங்கும் மாசு ..
 
உற்றார் உறவினர் தந்த காசுக்கு  
உம்மாவும் கணக்கு கேட்பாள் ..
ஒன்றுக்கு 
இரண்டாக . காசுகளை கொடுத்து  
உறவை இரட்டிப்பாக்க...
சுவையான  
பெருநாள் பண்டங்களும்...
தமிழ் சொல்லுக்கு 
சுவையூட்டும்
வட்டிலாப்பம் ,
கடற்பாசி 
இடி யாப்பம்,
இறைச்சியானம் .
பொரிச்ச ரொட்டி என்ற சொல் 
நாவில் நீரூறும் ..
செவியில் தேனூறும் 

இவை யனைத்தும் ஒன்று கூடி 
பசியாறுதல் .என்றழைத்து 
தமிழ் தன்னை மகிழ்விக்கும் ..
பசியாறல் முடிந்து விட்டால் 
பகல் உணவு மறந்து போகும் 
பகலெல்லாம் பசித்திருந்த 
பழக்கமாக இருக்குமென்ற ஐயம் வேண்டாம் 
பசியாறா ..பக்குவமாய் நிறைந்ததனால் ...

இன்னும் ஒன்று சொல்ல வேண்டும் 
பழங்கால வளம் தன்னை
பதிவாளர் சொல்லுகையில் 
தொல்லை தரும் காகம் தனை
தன கால் சிலம்பால் கிழவி 
விரட்டிடுவாள் என்று ..

அது போல 
பெருநாள் தொழுகை முடித்து விட்டு 
வீதியிலே வரும்போது ..
மாமா ..பெருணா காசு என 
சிலர்  துரத்திடுவார் ..
ஐந்து,பத்து என  ரூபாய் நோட்டு தன்னை
கொடுத்து 
நடை பயில்வார்


உல்லாசம் பொங்கும்  
உவகை பொங்கும் பெரு நாளில் 
பள்ளிக்கு செல்லும் வழிஒன்று என்றால் 
திரும்பி வரும் வழி வேறாக 
இருக்க வேண்டும் .


மலக்குகளின் துஆக்கள்  கிட்டும்  
பெருநாளின் சுகம் தன்னை
சுபமாக பெற்றிடுங்கள் ....  

இறுதி வேதம் குரானையும்
இறுதி நபி போதனையும் 
இதயம் ஏந்தி 
செயல் படுவோம்
இன்ஷா அல்லாஹ்,
வெற்றியும் பெற்றிடுவோம்.

பாலஸ்தீனம் ,
காஷ்மீர்
பர்மா,
செச்சன்யா
சிரியா 
இன்னும் 
எங்கு நம் மக்கள் 
அத்துமீறலுக்கு ஆளாகி
வதைபடும் சோதனைக்கு
அல்லாஹ்விடம் கையேந்தி 
கண்கள் சொரிந்து
மன்றாடுவோம்
இந்நாளில்-
வல்லோனும் ஏற்றிடுவான்
நம் உம்மத்தின் வாழ்வில் 
விளக்கேற்றி வைத்திடுவான் 


அதிரை சித்திக் 

ஈகைத் திருநாள் வாழ்த்துக்கள்