Showing posts with label சாலையின் உரிமை என்ன?. Show all posts
Showing posts with label சாலையின் உரிமை என்ன?. Show all posts

Monday, September 5, 2011

சாலையின் உரிமை என்ன?

நீங்கள் சாலைகளில் அமர்வதைத் தவிர்த்து விடுங்கள்என்று கூறினார்கள். அப்போது மக்கள், 'இறைத்தூதர் அவர்களே! நாங்கள் அங்கு அமராமல் இருக்க இயலாது.  அங்கு (அமர்ந்துதான் பல விஷயங்களை) நாங்கள் பேசிக்கொள்கிறோம்என்றார்கள். 


அதற்கு நபி(ஸல்) அவர்கள், '(அங்கு) நீங்கள் அமர்ந்துதான் ஆகவேண்டும் என்றிருந்தால்சாலைக்கு அதன் உரிமையைக் கொடுத்து விடுங்கள்என்று கூறினார்கள். மக்கள், 'சாலையின் உரிமை என்னஇறைத்தூதர் அவர்களே!என்று வினவினர்.


 நபி(ஸல்) அவர்கள், '(அந்நியப் பெண்களைப் பார்க்காமல்) பார்வையைத் தாழ்த்திக் கொள்வதும், (பாதசாரிகளுக்குச் சொல்லாலோ செயலாலோ) துன்பம் தராமலிருப்பதும்சலாமுக்கு பதிலுரைப்பதும்நன்மை புரியும் படி கட்டளையிடுவதும்தீமையிலிருந்து தடுப்பதும் (அதன் உரிமைகள்) ஆகும்என்று பதிலளித்தார்கள். 6229. 


நபி(ஸல்) அவர்கள் கூறியதாக,  அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்கள்.