Showing posts with label குடிப் பழக்கத்தை ஒழிக்க இஸ்லாம் கூறும் தீர்வு. Show all posts
Showing posts with label குடிப் பழக்கத்தை ஒழிக்க இஸ்லாம் கூறும் தீர்வு. Show all posts

Sunday, September 25, 2011

குடிப் பழக்கத்தை ஒழிக்க இஸ்லாம் கூறும் தீர்வு


குடிப் பழக்கத்தை ஒழிக்க இஸ்லாம் கூறும் தீர்வு

படிப்படியாக ஒழிக்கப்பட்ட போதை

புகை மற்றும் போதை

ஆல்க்கஹால் கலந்த மவுத்வாஷ் பயன்படுத்தலாமா ?

டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் பீர்பிராந்தி பாட்டில்களில் கரப்பான் பூச்சிவண்டுசிகரெட் துண்டுபான்பராக் பாக்கெட்அட்டை துண்டு உள்ளிட்டவை மிதப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.

திருவள்ளூர் மாவட்டத்தில் 350க்கும் அதிகமான டாஸ்மாக் கடைகள் உள்ளன. திருவள்ளூரை அடுத்த  காக்களூர் அரசு குடோனில் இருந்து திருவள்ளூர்திருத்தணிபள்ளிப்பட்டுபொன்னேரி,கும்மிடிப் பூண்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளுக்கும் திருமழிசை குடோனில் இருந்து பூந்தமல்லிஆவடிஅம்பத்தூர்மாதவரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் மதுபானங்கள் சப்ளை செய்யப்படுகிறது. டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மது சுத்தமாக இல்லை. பீர்பிராந்தி பாட்டில்களில் கரப்பான் பூச்சிவண்டுசிகரெட் துண்டுபான்பராக் பாக்கெட்அட்டை துண்டு உள்ளிட்டவை மிதப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.

டாஸ்மாக் கடைகளில் உள்ள பார்களில் காலி மதுபாட்டில்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளது. பார்கள் சுத்தமாக இருப்பதில்லை. துர்நாற்றம் வீசுகிறது. காலி டம்ளர்மது பாட்டில்கள் கண்ட இடங்களில் கிடக்கிறது. பார்களில் நடமாடும் கரப்பான் பூச்சிபல்லிஎறும்பு போன்றவை காலி பாட்டில்களில் புகுந்து விடுகின்றன. அந்த பாட்டில்கள் மதுபானம் தயாரிக்கும் கம்பெனிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. மதுபானம் தயாரிக்கும் கம்பெனிகள்பாட்டில்களை சுத்தம் செய்யாமல் அதில் மீண்டும் மதுபானங்களை நிரப்பி கடைகளுக்கு சப்ளை செய்கிறார்கள். பெரும்பாலானோர் இதை கவனிக்காமல் மதுவை குடிக்கிறார்கள். இதனால் கடுமையான நோயால் பாதிக்கப்படுகிறார்கள்.

திருவள்ளூரில் உள்ள டாஸ்மாக் கடையில் சுந்தரம் என்பவர்நேற்று பிராந்தி வாங்கியுள்ளார். அதில் அட்டை துண்டு மிதந்து கொண்டிருந்தது. இது குறித்து டாஸ்மாக் கடை ஊழியர்களிடம் கேட்டதற்கு அவர்கள் அலட்சியமாக பதில் கூறியுள்ளனர்.