Showing posts with label மலிக்கா. Show all posts
Showing posts with label மலிக்கா. Show all posts

Sunday, February 21, 2010

இனிய பாதையில் ஒரு அரசி..........



அஸ்ஸ்லாமு அலைக்கும்.

என்னைப்பற்றி என்னசொல்வது. நான் அதிரையும், முத்துப்பேட்டையையும் சேர்ந்தவள். தற்போது துபையில் வசிப்பவள்.அன்பான அமைதியான குடும்பத்தைப்பெற்றவள்.அதிகம் படிக்காதவள், இறைவன் மீது அளவுகடந்த பிரியம் வைத்திருப்பவள். அவனின்றி அணுவும் அசையாது என்பதில் உறுதியானவள் உண்மைச்சொல்லனுமென்றால் இறைவனை நேசிபதில் இன்பம் பெறுபவள்.

எனக்கு தெரிந்த நான் அறிந்த சன்மார்க்கத்தை, பிறருக்கும் புரியும் வகையில் இஸ்லாத்தை அனைவருக்கும் எத்திவைக்கவேண்டும் என்பது என் ஆவல்,அதற்கான முயற்ச்சியில் தற்போது இனிய பாதையில். என்ற என் வலைப்பூவிலன்மூலம் ஆரம்பிதிருக்கிறேன்.

எல்லாம் வல்ல இறைவனும் துணைப்புரியவேண்டும்,அவனுடைய அருளிருந்தால் எதையும் வெல்லலாம் இன்ஷா அல்லாஹ்..

கவிதை எழுதுவதிலும் மிகுந்த ஆர்வம்.
கைவண்ணக்கலைகளிலும் ஆர்வம் .

மிக்க நன்றி

அன்புடன் மலிக்கா


இது சகோதரி அவர்களைப் பற்றிய ஒரு சிறு குறிப்பு.

இனிய பாதையில்

இருளை அகற்றி சிறு ஒளியைத் தேடும் என் ஆன்மாவின் பயணம் என்ற அவர்களின் அந்த பிளாக்,எளிய நடையில்-குரான் மற்றும் ஹதீஸின் விளக்கங்களைப்பற்றி பேசுகிறது.

இப்போதுள்ள பிளாக் உலகில் சிலர் தம்மைப் பற்றி பெருமை பேசவும்,அவர்களுடைய பிளாகிற்கு வரும் புகழ் மாலைகளுக்கு மயங்கியும்,விமர்சனம் என்றால் தாங்கிக் கொள்ளாமலும் இருக்கும் பலருக்கு மத்தியில் சத்தியம்-உண்மை எது என்று அறிந்து,அதை மக்களிடயே எடுத்துவைக்கும் சகோதரி மலிக்கா அவர்களுடைய இந்த நல் முயற்சி மிக பாராட்டத்தக்கது.

உண்மை எது என்று தெரிந்து கொண்டுவிட்டு,இதை எழுதினால் நமக்கு மக்களிடம் உள்ள செல்வாக்கு போய்விடும் என்றோ,நாம் பொதுவாகவே எழுதிவிட்டு போய் விடுவோம் என்று எண்ணமுள்ளவர்கள்,சகோதரி மலிக்காவின் இந்த தளம் சென்று நோக்கி திருந்திக் கொள்ள ஒரு வாய்ப்பு.

உண்மையை எழுதும்போது எல்லாரும் ஏற்றுக்கொள்வார்கள் என்பதற்கு,அவர்களின் கருத்துக்கு கிடைத்த வரவேற்பை கண்டு புரிந்து கொள்ளலாம்.

அன்புச்சாமி said...

/சோதனை. மண்ணில் பிறந்த, பிறக்கின்ற, பிறக்கப்போகின்ற, ஒவ்வொரு ஜீவராசிகளுக்கும் உண்டு/

சத்தியமான உண்மை நாங்களும் நல்ல்வைகளை அறிய இன்னும் எதிர்பார்க்கிறோம்.


Starjan ( ஸ்டார்ஜன் ) said...

நல்ல அருமையான விளக்கங்கள் மலிக்கா
அருமையான துவா
இறைவன் நம் பிராத்தனைகளை செவி சாய்ப்பானாக ஆமீன்


Rajakamal said...

புகழ் போதைக்கு மயங்காத மனிதனே இல்லை இறையச்சம் உடைய மூமீன்களைத் தவிர, இப்போதெல்லாம் மனிதர்கள் ஒருவரை ஒருவர் ஏதோ ஒரு பலன் கருதிப் புகழ்கினர் உணமையான நெஞ்சார்ந்த புகழ்ச்சிக் குறைவு, தகுதியே இல்லாதவர் புகழப் படுகிறார் முகத்துக்கு நேராகவே. இதன் தீமைகளை விட்டும் அல்லஹ் நம்மை பாதுகாப்பனாக ஆமின். இறைவசனங்களை புகழ்சியின் தீமைக் கெதிராக கேடையமாக பிடித்துக் கொள்வோம். நல்ல அருமையான பதிவு சகோதரி.

இன்னும் நல்ல விளக்கங்கள் பல் எழுதி-ஏகனின் திருப்பொருத்தம் கிடைத்திட இந்த அரசிக்கு (மலிக்கா)வாழ்த்துக்கள் பல.(சகோதரிக்கு சிறு வேண்டுகோள்,சில இடங்களில் எழுத்துப் பிழைகள் காணப்படுகின்றன,அதை திருத்திக்கொள்ளவும்.)

இனி நீங்களும் சென்று-சுவைத்துப் பாருங்கள்.

http://fmalikka.blogspot.com/