Showing posts with label ரம்ஜான் பண்டிகை. Show all posts
Showing posts with label ரம்ஜான் பண்டிகை. Show all posts

Sunday, August 7, 2011

இலவசமாக ஆடை


30 கேள்விகளுக்கு பதில் கூறினால் வாழ்நாள் முழுவதும் இலவசமாக ஆடை வழங்குவதாக கீதா கார்மென்ட்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

இது குறித்து அந்த நிறுவனத்தின் உரிமையாளர் சண்முகம் சனிக்கிழமை கூறியது:
 1979 முதல் குறைந்த லாபத்துக்கு துணிகளை விற்று வருகிறேன். இப்போது சென்னை தியாகராயநகர் வெங்கடேஸ்வரா திருமண மண்டபத்தில் எங்களது நிறுவனம் சார்பில் "சக்தி அழகன் ரெடிமேட்ஸ்'என்ற பெயரில் விற்பனையை தொடங்கியுள்ளோம். இந்த சிறப்பு விற்பனை கடை ஆகஸ்ட் 11 வரை செயல்படும். ரூ. 450 முதல் ரூ. 2,200 வரை விற்பனையாகும் சிறுவர் முதல் பெரிவர்கள் வரையிலான ரெடிமேட் ஆடைகள் ரூ. 50, ரூ. 100, ரூ. 150-க்கு விற்பனை செய்யப்படுகிறது

 ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டுசென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் எங்களது விற்பனை மையம் செயல்பட உள்ளது. அப்போது அங்கு நடக்கும் விழாவில்30 கேள்விகள் அடங்கிய வினாத்தாள் வழங்கப்படும். அனைத்துக் கேள்விகளுக்கும் சரியான பதில் சொல்பவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் எங்கள் நிறுவனம் சார்பில் இலவசமாக ஆடை வழங்குவோம்
.
 சென்னைமதுரைதிருச்சிகோவைநெல்லை உள்ளிட்ட நகரங்களில் விரைவில் எங்களது கிளைகளை தொடங்கத் திட்டமிட்டுள்ளோம். ஆடைகள் வாங்க வருபவர்களுக்கு காலை சிற்றுண்டி,மதிய உணவுமாலை சிற்றுண்டி ஆகியன இலவசமாக வழங்கத் திட்டமிட்டுள்ளோம் என்றார் சண்முகம்

 இது குறித்த மேலும் விவரங்களுக்கு 94420 77985, 094802 95700 ஆகிய மொபைல் போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.