Showing posts with label அமெரிக்காவில் என்ன நடக்கிறது. Show all posts
Showing posts with label அமெரிக்காவில் என்ன நடக்கிறது. Show all posts

Saturday, February 11, 2012

அமெரிக்காவில் என்ன நடக்கிறது

முன்பெல்லாம் மாணவர்கள் தங்கள் தாய்,தந்தை,குடும்ப உறுப்பினர்கள்,ஆசிரியர்,ஆலிம்கள் என்று மரியாதை வைத்து இருந்தார்கள்.அவர்கள் ஏதும் சொல்லி விடுவார்களோ என்ற அச்சம் இருந்தது,அதுக்கும் மேல்,அல்லாஹ்வின் மேல் பயமும்,ரசூல் ஸல் அவர்களின் மீது மிக்க மேலான பாசமும் இருந்தது,(இன்றும் இருக்கிறது என்பதில் மாற்று கருத்து இல்லை).ஆனால் அன்று நம் மாணவர்களை மார்க்கம் வழி நடத்தியது,இன்று கேடு கெட்ட சினிமாவும்,நாடகமும்,சீரழிவு ஊடகங்களும் வழி நடத்துகின்றன.

அல்லாஹ்வை நினைத்து அழுத பெண்கள்,இன்று நாடகத்தில் வரும் காட்சிகளை பார்த்து அழுகின்றனர்.ஆசிரியர்கள் பள்ளியில் நடப்பதை வைத்து மட்டுமே மாணவர்களை திருத்த முடியும்,எனவே,பெற்றோகளுக்கு மட்டுமே அதிக அக்கறை வேண்டும்.

அரசு,காவல் துறை,ஆசிரியர்,பெற்றோர்,மாணவர்கள் என்று ஒரு லிங்க் இருக்க வேண்டும். 
ஒரு உதாரணமாக,அமெரிக்காவில் என்ன நடக்கிறது என்பதை சொல்ல விரும்புகிறேன்.

காலை எட்டு மணிக்கு பள்ளிகள் திறந்து,மதியம் இரண்டு - முப்பதுக்கு முடியும்.இந்த இடைபட்ட நேரத்தில் மாணவர்களை ரோட்டிலோ,ஷாப்பிங் மால்களிலோ,வேறு எங்கோ கண்டால்- காவல் துறையினர் பிடித்து விசாரிப்பார்கள்.

மாணவர்கள் பள்ளிக்கு வராத நாளில்,வீட்டுக்கு உடனே பள்ளியிலிருந்து போன் வந்து விடும்.

ஹோம் வொர்க் மற்றும் பள்ளி சம்பந்தமான எல்லா வேலைகளையும் முடித்து மாணவர்கள் - பெற்றோரிடம் கையெழுத்து வாங்க வேண்டும்.

அடிக்கடி மாணவர்கள் - பள்ளிக்கு விடுமுறை எடுத்தால்,காவல் துறை தலைவரிடமிருந்து(ஷெரீப்)பெற்றோருக்கு சம்மன் வரும்.

பள்ளி நேரம் முழுக்க காவல் துறை பள்ளி வளாகத்தை(patrol) சுற்றி வரும்.

ஆசிரியர்,மாணவர்கள் என்ற பாகுபாடு இல்லாமல் ஒரு சக மாணவன் போல் பழகுவார்கள்.

பள்ளி சம்பந்தமான போர்ட் மீட்டிங்குக்கு கூட,பெற்றோர்களை அழைத்து கருத்து கேட்பார்கள்.

இப்படி நம்மூரிலும்,செய்யலாம்.

கொசுறு :(இங்கும் - பள்ளிகளில் துப்பாக்கி சூடு நடந்து கொண்டுதான் இருக்கிறது,ஆனால் அதைக் களைய மேற்சொன்ன மற்றும் பலவிதங்களில் போராடிவருகின்றாகள்.)

Result:அமெரிக்காவோ,இந்தியாவோ இஸ்லாம் சொல்வதை கேட்டு நடந்தால் - அமுல் படுத்தினால் எல்லாரும் நன்றாக இருக்கலாம்.இல்லையெனில் இது போன்று நடப்பதை தவிர்க்க இயலாது.இதை ஒரு எச்சரிக்கையாகவே சொல்லி வைக்கிறேன்.