Showing posts with label பி.எஸ்.அப்துர் ரகுமான் பல்கலைக்கழகமும். Show all posts
Showing posts with label பி.எஸ்.அப்துர் ரகுமான் பல்கலைக்கழகமும். Show all posts

Tuesday, November 27, 2012

பி.எஸ்.அப்துர் ரகுமான் பல்கலைக்கழகமும், ஆப்பிள் மொபைல் போன் தொழில்நுட்ப நிறுவனமும்

சென்னை வண்டலூர் பி.எஸ்.அப்துர் ரகுமான் பல்கலைக்கழகமும், ஆப்பிள் மொபைல் போன் தொழில்நுட்ப நிறுவனமும் இணைந்து ரூ.40 லட்சம் செலவில் மொபைல் போன் தொழில்நுட்ப ஆய்வு மையம் அமைத்துள்ளன.
இந்த மையத்தை, பல்கலைக்கழகத் தலைவர் அப்துர் காதர் ஏ.ரகுமான் புகாரி புதன்கிழமை துவக்கி வைத்து பேசியதாவது:
தொலைபேசிக்குப் பதிலாக தொலைதொடர்புப் பணிக்கு பயன்படுத்தப்பட்ட மொபைல் போன் தொழில்நுட்பம், தற்போது கற்பனைக்கெட்டாத வகையில் இமைக்கும் நொடிக்குள் பல்வேறு சேவைகளை செய்துவரும் சாதனமாக மாறிவிட்டது.
பன்முகத் தொழில்நுட்பத் தேவைகளைப் பூர்த்தி செய்துவரும் மொபைல்போன் தொழில்நுட்பத்தை, மாணவர்களும் மேம்படுத்திக் கொள்ள முடியும்., ஆப்பிள் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டு அமைக்கப்பட்டுள்ள ஆய்வு மையத்தை அனைவரும் பயன்படுத்த முன்வரவேண்டும் என்றார் அவர்.
அப்துர் ரகுமான் பல்கலைக்கழக துணைவேந்தர் வி.சங்கரநாராயணன், பதிவாளர் வி.எம்.பெரியசாமி, கல்லூரி டீன் கே.எம்.மேத்தா, இயக்குநர் வி.என்.ஏ. ஜலால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
THANKS TO