Showing posts with label அபூபக்கர் சித்தீக் (ரலி ). Show all posts
Showing posts with label அபூபக்கர் சித்தீக் (ரலி ). Show all posts

Thursday, July 5, 2012

உயிரின் வேர்கள் -5


இறைத்தூதர் வாக்குதான்.....
வாழ்க்கையின் லட்சியம் 
என
வாழ்ந்துவந்த
 பேறுபெற்ற பெருமகனார்
அபூபக்கர் சித்தீக் (ரலி )எனும் தோழர் ..

வெண்ணையில் 
மயிலிறகாய் ..
மென்மையாய் பேசும் தோழர் .,

வள்ளல் நபி நாதர்  (ஸல்) அவர்கட்கு 
ஒன்று என்றால் 
விரைதிடுவார் ..
கடும் பாறையாக ..
மாறிடுவார் 

போர் ஒன்றில் 
நபி பெருமானார் (ஸல்) அவர்கட்கு 
காயம் ஒன்று ஏற்படவே ...
தாய் சிங்கம் சீறுவது போல் ..
சீறி பாய துவங்கினார்
சீர்மிகு அபூபக்கர்சித்தீக் (ரலி) எனும் தோழர் ,,

போர்களத்தில் பாய்ந்து
 எதிரிகளை ..
இடத்தை விட்டு 
விரட்டி அடித்து
வீணர்களை ஓட செய்தார்

மீண்டும் வந்தார்
நபி பெருமானார் வசம் .

வள்ளல் நபி (ஸல் )நாயகத்தின்
தொடரும் நிழலாக 
வாழ்ந்து வந்தார் .
அபூபக்கர் சித்தீக் (ரலி )எனும் தோழர்

காலங்கள்சென்றன 


ஒரு நாள்
நபிகள் நாயகம் (ஸல் )அவர்கள்
கண்கள் கலங்க 
நா தழுதழுக்க ..
அன்பு தோழர்களை பார்த்து
அறிவுரை சொன்னார்கள் 

அதிரை சித்திக் 



இன்னும் தொடரும் 
இன்ஷா அல்லாஹ்