Showing posts with label வாஞ்சூர். Show all posts
Showing posts with label வாஞ்சூர். Show all posts

Thursday, March 11, 2010

படிக்கலாமே !!!

"சுவைத்தேன் - தொகுத்தளித்தேன் - சுவையுங்கள். வருகையாளரே !! வருக !! வருக !! இங்குள்ள அணைத்து பதிவுகளையும் படித்து செல்லுமாறு கேட்டுக்கொள்ளுவதுடன் மீண்டும் மீண்டும் வருமாறு அன்புடன் அழைக்கிறேன்" எல்லோரையும் அன்போடு வரவேற்கிறார் சகோ வாஞ்சூர் அலி அவர்கள்.


வீடியோவில் டாகடர் கே.வி.எஸ்.ஹபீப் முஹம்மத் பல கேள்விகளுக்கு சிரித்த முகத்துடன் நயமாக-அழகாக குரான்-ஹதீஸ் ஆதாரங்களுடன் பதில் சொல்கிறார்.

உதாரணமாக,
பலரின் இரத்தத்தை உறிஞ்சி ஒருவன் வாழும் வட்டித்தொழிலை பற்றி இஸ்லாம் என்ன கூறுகிறது.?
இஸ்லாம் இசைக்கு எதிரியா?
கெட்டவன் சுகமாக வாழ்கிறானே ஏன்?
அண்டை வீட்டாரை பற்றி இஸ்லாம் கூறுவது என்ன?


இப்படி பலவாறான கேள்விகள்.

இப்படி ஒரு வித்தியாசமான பிளாக்கின் சொந்தக்காரர் வாஞ்சூர் அலி அவர்கள்,சொந்த ஊர் இளையான்குடி,வசிப்பிடம் சிங்கப்பூர்.

அவருடைய அந்த பிளாகிலேயே ஒரு தொடர் கட்டுரையின் லிங்க் கொடுத்துள்ளார்.

அது

முஹம்மது நபி (ஸல்), யூதர்கள்‍, பலஸ்தீன், இஸ்ரேல் வரலாறு.


இஸ்லாத்தின் வானளாவிய வளர்ச்சியின் அஸ்திவாரம்.கலீஃபா உமர்.

பாலஸ்தீன் நிலப்பரப்பின் பொற்காலம். சிலுவைப்போர் தொடக்கம்.

முழங்கால் அளவு ரத்தம்.-நீண்டு போன சிலுவை யுத்தம்.

சுல்தான் ஸலாஹுதீன்..கிறிஸ்தவர்களிடம் கரிசனம்.

அரசர் ரிச்சர்ர்டும் சுல்தான் ஸலாஹுதீனும்.சுல்தான் ஸலாஹுதினின் மரணமும் கிறிஸ்தவர்களும்.

ஸ்பெய்னில் வெளியேற்றப்பட்ட யூதர்கள். யூதர்களும் துருக்கி உதுமான் அரசும்
.


என முஸ்லிம்களுக்குண்டான தொடர்பு(பாலஸ்தீனம்)பற்றி அழகாக நடுநிலையுடன் எழுதப்பட்டுள்ளது.நல்ல தேவையான,அனைவரும் படிக்கவேண்டிய-உண்மையை உணர வேண்டிய தொகுப்பு.

பல நல்ல விஷயங்களை தொகுத்து தரும் அவர் பிளாக் ஒரு தனி ரகம் என்றால் மிகை அல்ல.

நீங்களும் சென்று கேட்டுத்தான்(படித்துத்தான்)பாருங்களேன்.

http://vanjoor-vanjoor.blogspot.com/